ஒரு திங்கள் காலையில் பயங்கரமான யோசனையில் அலுவலக சேரில் கால்களை தரையில் ஊனி பக்கவாட்டில் ஆடிகொண்டிருந்தேன்.
வேலை நிறைய இருக்கிறது..
அப்படி என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது?
அது ஒன்றுமில்லை..
என்ன தான் சிரித்து சிரித்து அனைவரிடமும் பேசினாலும் இந்த ஐ.டி கம்பெனிக்குள் வேலை பார்க்கும் பொழுது எதோ தனித்து இருப்பது போலொரு உணர்வு.
இடைவேளை வேளையில் ஒன்றாக காபி குடிக்க போகும் கூட்டத்தை பார்கிறேன்..
சாப்பிட எப்பொழுதும் ஒன்றாகவே போபவர்களை பார்கிறேன்..
என்ன தான் அவர்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்களுள் ஒவ்வொருவரும் தனித்தே இருக்கிறார்கள். எதோ தற்காலிகமாக சேர்கை என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் இருப்பதை உணர முடிகிறது.
யாராவது ஒருத்தர் வேலையை விட்டு போனாலோ... இல்லை அந்த டீமிலிருந்து போனாலோ முதல் நாள் இருக்கும் வருத்தம் அடுத்த நாள் இருப்பதில்லை.
கூட வேலை பார்பவர் இறந்துவிட்டால் கூட இதுவும் ஒரு வேலை என நினைத்தபடி பேருக்கு துக்க வீட்டுக்கு போய் வந்து வேலையை தொடர்கிறவர்கள் தான் இங்கு எல்லோரும்.
கல்லூரி..பள்ளி. ஏன் ரயில் பயணம் என மற்ற இடத்தில் கிடைத்த நண்பர்கள் போல இங்கு இருப்பவர்களுடன் அவ்வளவு பினைப்பில்லை.
ஏன்?
தெரியவில்லை... மற்றவர்களிடமும் கேட்டேன்... தெரியவில்லை.
இங்கு நான் வேலைக்கு சேர்ந்தவுடன் முதல் கிடைத்த ஃபிரீ அட்வைஸ் இது தான்
“கார்ப்பரேட்ட கம்பெனியில் நீ யாருடன் வேண்டுமானாலும் நட்புடன் இருக்கலாம்.. ஆனால் யாருக்கும் நண்பனாக இருக்க முடியாது”
நான் அப்பொழுது எதோ பிதற்றல் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இப்பொழுது கண்முன் பார்கிறேன்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் என்னுடன் சிரித்து பேசியவன் இப்பொழுது என்னை பற்றி தவறாக சூப்பர்வைசரிடம் பத்த வைக்கிறான்.
நேற்று வரை நகமும் சதையுமாக இருந்த என் டீம் மேட் இன்று என்னை முறைத்துகொள்கிறார்.
இங்கு எல்லோரும் எல்லோரையும் சக போட்டியாளனாகவே பார்கின்றனர்.
ஐந்து வருடம் அனுபவமுள்ளவர் கூட இன்று வந்த புது பையனை தன் போட்டிக்கு வந்தவன் போல பாவிக்கிறார்.
முன்னொன்று பேசி பின்னால் வேறு பேசுகின்றனர்
சக மனிதர்களை நம்ப கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இங்கு அனைவரையும் ஆட்டிவைக்கிறது.
நம்மை இப்படி எல்லாம் யோசிக்க வைக்க அப்படி என்ன மாயை தான் இந்த கண்ணாடி கட்டிடங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.
இப்படி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பொழுது ஒரு கோரமான குரல் அதை களைத்தது
“பிரபு...”
“பிரபு...”
நிமிர்ந்து பார்தேன்.
என் டீமில் இருப்பவன் தான்.
என்னைவிட சின்ன பையன்.
“சொல்லுங்க...” என்றேன்.
“இந்த மெயில் நீங்க அனுப்சுடுங்க ஜி..” என்றான்
“சரி”
“தேங்க்ஸ் ஜி” என்று சொன்னவன் வந்த வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ஓடினான்.
இவன் வருவதற்கு முன்னும் இவன் வந்து போன பிறகும் எனக்கும் எதோ ஒரு வித்யாசம் தெரிந்தது.
என்ன என்று எனக்குள் ஊடுருவிப்பார்தேன்.
எனக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்கிறது என என் டெஸ்ட் ரிசல்ட் சொல்லியது.
எதற்கான கோபம். யோசித்ததில் சிக்கியது காரணம்.
என்னை விட சின்ன பையன் என்னை பேர் சொல்லி கூப்பிடுகிறான். அது என்ன ‘ஜி’.. மரியாதைக்காகவா?
அப்படி மரியாதை என்றால் ‘அண்ணா’ என்றழைக்கலாமே!! அது எதுக்கு ‘ஜி’?
உடனே கார்பரேட் காவலன்கள் என்னை எச்சரித்து விடுவார்கள்.
“பெயர் சொல்லி அழைப்பது கார்பரேட் கல்ச்சர்” என.
ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தது. ஏனென்றால் நான் சேரும் பொழுது நான் தான் சின்ன பையன். என்னை விட எல்லோரும் பெரியவர்கள்.
என்னை விட பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பது எனக்கு புதிதாக இருந்தது. என்னமோ நாம் அவர்களுக்கு சரி சமமானவன் என்ற எண்ணம் வர அது தான் காரணம்.
முதல் ஒரு சில மாதம் வாய் தவறி ‘அண்ணா’ ‘சார்’ என வந்த போதிலும் அவர்களே என்னை “அப்படி எல்லாம் கூப்பிட கூடாது பிரபு.. பேரு சொல்லி கூப்பிடுங்க” என தட்டி கொடுத்தனர். இதுவல்லவா கலாச்சாரம் என எண்ணி துள்ளி குதித்தேன்.
இதெல்லாம் முதல் வருடம் தான். அடுத்த வருடம் என்னை விட வயதில் சிறியவர்கள் வந்தனர்.
வந்த புதிதில் அவர்கள் ‘அண்ணா’ என்ற பொழுது “அதெல்லாம் வேனாம். பேரு சொல்லி கூப்பிடுங்க” என எனக்கு போதித்தது என் வாய் தவறி தானாக வந்து விழுந்தது.
சொல்லிய அடுத்த நாள் “பிரபு” என பெயர் கேட்டபொழுது என் பெயரே எனக்கே கோபம் வர வைத்துவிட்டது.
காலேஜில் ஜூனியர் பசங்க நேருக்கு நேர் வந்தால் ஒதுங்காமால் திமிராக முறைத்தபடி நடக்க பழகிவிட்டு இப்படி இங்க சின்ன பசங்க பேர் சொல்லி அழைக்கும் படியாகிவிட்டதே என்ற கோபமாக கூட இருக்கலாம்.
நான் மற்றவர்களை பேர் சொல்லி கூப்பிடும் பொழுது அவர்களுக்குள்ளும் இப்படி எதாவது இருந்திருக்கலாமில்லையா!! அவர்களும் காலேஜில் சீனியராக இருந்தவர்கள் தானே!!
இப்படி ஒரு யோசனை வந்ததும் எனக்கு முன்னிருந்த மிக பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்தது போலிருந்தது.
எல்லா புதிருக்கும் டக் டக்கென விடை கிடைத்தது.
கார்பரேட்டின் ரகசியம் எனக்கு முன் உடைந்து கூனிகுருகி நின்றது.
இந்த கார்பரேட் கல்ச்சர் என்பது அனைத்தும் இங்கு வேலை பார்பவர்களை ஒன்று சேராமல் பிரித்து இருக்க வைக்கவே உருவாக்கபட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
எனக்கு இங்கு பிடித்தவர்களை பட்டியலிட்டேன்.
பத்து பேர் கூட தாண்டவில்லை
அதில் பாதி பேர் என் வயதை உடையவர்கள்.
மிச்சம் நான் ‘அண்ணா..அக்கா’ என்று அழைப்பவர்களும்... என்னை ‘அண்ணா’ என்று அழைப்பவர்களும் தான்.
ஒரு ‘ஜி’ பசங்களும் அதில் இல்லை.
“சொல்லுங்க அண்ணா..”
“இல்லடா தம்பி..”
“என்ன மச்சான்”
“இங்க வாங்க அக்கா”
இப்ப்டி எல்லாம் இங்கு கேட்பது அறிது.
உறவு சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். பிச்சைக்கார கிழவரைகூட ‘தாத்தா’ என சொல்லி காசு போடுவது தான் நமக்கு கற்று கொடுத்தது.
அப்படி எல்லாம் இங்கு இருக்க முடியாது.
ஒரு வேளை அப்படி இருந்தால் என்ன நடக்கும் என யோசித்தால் இந்த கார்ப்பரேட்டின் ஒரு சூத்திரம் நமக்கு தெரிய வரும்.
“அண்ணா” என்று அழைத்து பழகிய உங்கள் டீம் லீடர் உங்களை திட்டினால் ஒரு சகோதரன் திட்டியதின் பாதிப்பே உங்களுக்கு ஏற்படும். அவரின் வார்தையிலும் ஒரு தம்பியை திட்டும் தோனியே வெளிப்படும்.
நாம் ‘சார்’.. ‘மேடம்’ என அழைக்கும் ஒரு மேனேஜர் திட்டினால் எதோ ஒரு உயர் பதவியில் இருப்பவர் திட்டுகிறார் என அவரின் அனுபவத்துக்கும் வயதுக்கும் மறியாதை கொடுத்து நம்மை நாம் சமாதானம் செய்து கொள்வோம்.
தன்னை ‘அண்ணா’ ‘அக்கா’ என அழைக்கும் ஒருவர் தவறு செய்தால் ஒரு சகோதரனுக்கே உரிய அக்கரையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம்.
ஒரு வேளை நம்முடன் இருக்கும் ஒருவருக்கு ரேட்டிங் குறைத்து வந்தால் நாம் அவர்களுக்காக உரிமையாக கேட்க தோன்றலாம். அட்லீஸ்ட் வருத்தமாவது படலாம்.
இப்படிபட்ட உறவுகள் உரிமையை கொடுக்கும்
அந்த உரிமைகள் நம் சுதந்திரத்தை காக்கும்.
உறவு சொல்லி அழைத்தால் கோஷ்டி சேர்ந்துவிடும் என்பதாலே இந்த கலாச்சாரம் என்பது எனக்கு கிடைத்த விடை.
கோஷ்டி சேர்ந்தால் மேனேஜ்மென்டுக்கு பிரச்சனையாகிவிடும்.
அதானால் தான் கோடிக்கணக்கானோர் வேலை செய்யும் கார்பரேட் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்க முடியவில்லை.
இப்படி தனித்திருக்க வைப்பதில் தான் அவர்களுக்கு லாபம்.
நாளை ரெசஷன் வந்து நம்முடன் இருப்பவரை வேலையைவிட்டு அனுப்பினாலும் நாம் அதை கண்டு கொள்ளாமல் சுய நலமாக இருக்கவைக்கவே இப்படி பட்ட கார்பரேட் கலாச்சார்ங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரித்தாள்வது என்பது கேள்வி பட்டிருப்போம்.
அதை இவ்வளவு சாதூரியமாக செயல்படுவது இப்பொழுது தான் பார்கிறேன்.
நமக்கே தெரியாமல் நம்மை சைக்கலாஜிக்கலாக பிரிந்திருக்க வைக்கபடும் ஒரு அதி புத்திசாலித்தனமாகவே நான் இதை சொல்வேன்.
தினமும் ஒருவரை உறவு வைத்து அழைத்து பாருங்களேன். நமக்கே தெரியாமல் அந்த உறவு வழு பெற்றுவிடும்.
அதனால் தான் ‘ஏங்க’ என சொல்லி அழைக்கும் மனைவியை விட “மாமா” என என்றழைக்கும் கணவன் மனைவி உறவு நெருக்கமாக மற்றவர்களுக்கு தெரிகிறது.
இப்படி ‘ஜி’ போட்டு பத்து வருடம் நாம் பழகினாலும் அந்த உறவுக்குள் இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கும்.
இதனால் தான் ஐ.டி யில் வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பாதுகாப்பின்மையுடனே இருக்கிறார்கள்.
வெளிப்பூச்சுக்கு தான் இந்த ‘டீம்-வொர்க்’ என்பதெல்லாம்.
இங்கு இருப்பவர்களை மனசாட்சியுடன் சொல்ல சொன்னால் தான் உண்மை தெரியும்.
இது ஒன்றும் இந்த கண்ணாடி கட்டிடத்துக்குள் நின்றுவிடுவதில்லை.
வெளியே என்னை யாராவது ‘டா’ என்று உரிமையுடன் அழைத்தால் கூட கோபம் வருகிறது. இவன் யார் என்னை மரியாதை இல்லாமல் டா என்கிறான் என்றிருக்கிறது.
இத்தனைக்கும் என்னை தூக்கி வளத்தவர்கள் அவர்களெல்லாம். என்னையும் மீறி வெளியில் மற்றவர்களை.. பெரியவர்களை.... பெயர் சொல்லியே அழைத்து பழகிவிட்டேன்.
இப்படி உறவுகளை கெடுத்து உரிமையை பறிக்கும் இப்படி பட்ட மட்டமான கலாச்சாரத்திற்கு நான் பலியாகிவிட மாட்டேன்.
மற்றிக்கொள்ள வேண்டும்.
நினைத்துக் கொண்டிருந்த பொழுது..
“பிரபு..”
அட இவன் வேற.....அதே சின்ன பையன் தான்.
எதுவும் சொல்லாமல் நிமிர்ந்தேன்
“ஜி... இது எப்படி ஜி பன்றது” என எதையோ என்னிடம் கேட்டான்.
முதலில் இவனை ஏதாவது செய்யவேண்டும்.
பிரபு மித்ரன்
வேலை நிறைய இருக்கிறது..
அப்படி என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது?
அது ஒன்றுமில்லை..
என்ன தான் சிரித்து சிரித்து அனைவரிடமும் பேசினாலும் இந்த ஐ.டி கம்பெனிக்குள் வேலை பார்க்கும் பொழுது எதோ தனித்து இருப்பது போலொரு உணர்வு.
இடைவேளை வேளையில் ஒன்றாக காபி குடிக்க போகும் கூட்டத்தை பார்கிறேன்..
சாப்பிட எப்பொழுதும் ஒன்றாகவே போபவர்களை பார்கிறேன்..
என்ன தான் அவர்கள் ஒன்றாக இருந்தாலும் அவர்களுள் ஒவ்வொருவரும் தனித்தே இருக்கிறார்கள். எதோ தற்காலிகமாக சேர்கை என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் இருப்பதை உணர முடிகிறது.
யாராவது ஒருத்தர் வேலையை விட்டு போனாலோ... இல்லை அந்த டீமிலிருந்து போனாலோ முதல் நாள் இருக்கும் வருத்தம் அடுத்த நாள் இருப்பதில்லை.
கூட வேலை பார்பவர் இறந்துவிட்டால் கூட இதுவும் ஒரு வேலை என நினைத்தபடி பேருக்கு துக்க வீட்டுக்கு போய் வந்து வேலையை தொடர்கிறவர்கள் தான் இங்கு எல்லோரும்.
கல்லூரி..பள்ளி. ஏன் ரயில் பயணம் என மற்ற இடத்தில் கிடைத்த நண்பர்கள் போல இங்கு இருப்பவர்களுடன் அவ்வளவு பினைப்பில்லை.
ஏன்?
தெரியவில்லை... மற்றவர்களிடமும் கேட்டேன்... தெரியவில்லை.
இங்கு நான் வேலைக்கு சேர்ந்தவுடன் முதல் கிடைத்த ஃபிரீ அட்வைஸ் இது தான்
“கார்ப்பரேட்ட கம்பெனியில் நீ யாருடன் வேண்டுமானாலும் நட்புடன் இருக்கலாம்.. ஆனால் யாருக்கும் நண்பனாக இருக்க முடியாது”
நான் அப்பொழுது எதோ பிதற்றல் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இப்பொழுது கண்முன் பார்கிறேன்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் என்னுடன் சிரித்து பேசியவன் இப்பொழுது என்னை பற்றி தவறாக சூப்பர்வைசரிடம் பத்த வைக்கிறான்.
நேற்று வரை நகமும் சதையுமாக இருந்த என் டீம் மேட் இன்று என்னை முறைத்துகொள்கிறார்.
இங்கு எல்லோரும் எல்லோரையும் சக போட்டியாளனாகவே பார்கின்றனர்.
ஐந்து வருடம் அனுபவமுள்ளவர் கூட இன்று வந்த புது பையனை தன் போட்டிக்கு வந்தவன் போல பாவிக்கிறார்.
முன்னொன்று பேசி பின்னால் வேறு பேசுகின்றனர்
சக மனிதர்களை நம்ப கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இங்கு அனைவரையும் ஆட்டிவைக்கிறது.
நம்மை இப்படி எல்லாம் யோசிக்க வைக்க அப்படி என்ன மாயை தான் இந்த கண்ணாடி கட்டிடங்களுக்குள் ஒளிந்திருக்கிறது.
இப்படி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பொழுது ஒரு கோரமான குரல் அதை களைத்தது
“பிரபு...”
“பிரபு...”
நிமிர்ந்து பார்தேன்.
என் டீமில் இருப்பவன் தான்.
என்னைவிட சின்ன பையன்.
“சொல்லுங்க...” என்றேன்.
“இந்த மெயில் நீங்க அனுப்சுடுங்க ஜி..” என்றான்
“சரி”
“தேங்க்ஸ் ஜி” என்று சொன்னவன் வந்த வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ஓடினான்.
இவன் வருவதற்கு முன்னும் இவன் வந்து போன பிறகும் எனக்கும் எதோ ஒரு வித்யாசம் தெரிந்தது.
என்ன என்று எனக்குள் ஊடுருவிப்பார்தேன்.
எனக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்கிறது என என் டெஸ்ட் ரிசல்ட் சொல்லியது.
எதற்கான கோபம். யோசித்ததில் சிக்கியது காரணம்.
என்னை விட சின்ன பையன் என்னை பேர் சொல்லி கூப்பிடுகிறான். அது என்ன ‘ஜி’.. மரியாதைக்காகவா?
அப்படி மரியாதை என்றால் ‘அண்ணா’ என்றழைக்கலாமே!! அது எதுக்கு ‘ஜி’?
உடனே கார்பரேட் காவலன்கள் என்னை எச்சரித்து விடுவார்கள்.
“பெயர் சொல்லி அழைப்பது கார்பரேட் கல்ச்சர்” என.
ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தது. ஏனென்றால் நான் சேரும் பொழுது நான் தான் சின்ன பையன். என்னை விட எல்லோரும் பெரியவர்கள்.
என்னை விட பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பது எனக்கு புதிதாக இருந்தது. என்னமோ நாம் அவர்களுக்கு சரி சமமானவன் என்ற எண்ணம் வர அது தான் காரணம்.
முதல் ஒரு சில மாதம் வாய் தவறி ‘அண்ணா’ ‘சார்’ என வந்த போதிலும் அவர்களே என்னை “அப்படி எல்லாம் கூப்பிட கூடாது பிரபு.. பேரு சொல்லி கூப்பிடுங்க” என தட்டி கொடுத்தனர். இதுவல்லவா கலாச்சாரம் என எண்ணி துள்ளி குதித்தேன்.
இதெல்லாம் முதல் வருடம் தான். அடுத்த வருடம் என்னை விட வயதில் சிறியவர்கள் வந்தனர்.
வந்த புதிதில் அவர்கள் ‘அண்ணா’ என்ற பொழுது “அதெல்லாம் வேனாம். பேரு சொல்லி கூப்பிடுங்க” என எனக்கு போதித்தது என் வாய் தவறி தானாக வந்து விழுந்தது.
சொல்லிய அடுத்த நாள் “பிரபு” என பெயர் கேட்டபொழுது என் பெயரே எனக்கே கோபம் வர வைத்துவிட்டது.
காலேஜில் ஜூனியர் பசங்க நேருக்கு நேர் வந்தால் ஒதுங்காமால் திமிராக முறைத்தபடி நடக்க பழகிவிட்டு இப்படி இங்க சின்ன பசங்க பேர் சொல்லி அழைக்கும் படியாகிவிட்டதே என்ற கோபமாக கூட இருக்கலாம்.
நான் மற்றவர்களை பேர் சொல்லி கூப்பிடும் பொழுது அவர்களுக்குள்ளும் இப்படி எதாவது இருந்திருக்கலாமில்லையா!! அவர்களும் காலேஜில் சீனியராக இருந்தவர்கள் தானே!!
இப்படி ஒரு யோசனை வந்ததும் எனக்கு முன்னிருந்த மிக பெரிய குழப்பத்திற்கு விடை கிடைத்தது போலிருந்தது.
எல்லா புதிருக்கும் டக் டக்கென விடை கிடைத்தது.
கார்பரேட்டின் ரகசியம் எனக்கு முன் உடைந்து கூனிகுருகி நின்றது.
இந்த கார்பரேட் கல்ச்சர் என்பது அனைத்தும் இங்கு வேலை பார்பவர்களை ஒன்று சேராமல் பிரித்து இருக்க வைக்கவே உருவாக்கபட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
எனக்கு இங்கு பிடித்தவர்களை பட்டியலிட்டேன்.
பத்து பேர் கூட தாண்டவில்லை
அதில் பாதி பேர் என் வயதை உடையவர்கள்.
மிச்சம் நான் ‘அண்ணா..அக்கா’ என்று அழைப்பவர்களும்... என்னை ‘அண்ணா’ என்று அழைப்பவர்களும் தான்.
ஒரு ‘ஜி’ பசங்களும் அதில் இல்லை.
“சொல்லுங்க அண்ணா..”
“இல்லடா தம்பி..”
“என்ன மச்சான்”
“இங்க வாங்க அக்கா”
இப்ப்டி எல்லாம் இங்கு கேட்பது அறிது.
உறவு சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். பிச்சைக்கார கிழவரைகூட ‘தாத்தா’ என சொல்லி காசு போடுவது தான் நமக்கு கற்று கொடுத்தது.
அப்படி எல்லாம் இங்கு இருக்க முடியாது.
ஒரு வேளை அப்படி இருந்தால் என்ன நடக்கும் என யோசித்தால் இந்த கார்ப்பரேட்டின் ஒரு சூத்திரம் நமக்கு தெரிய வரும்.
“அண்ணா” என்று அழைத்து பழகிய உங்கள் டீம் லீடர் உங்களை திட்டினால் ஒரு சகோதரன் திட்டியதின் பாதிப்பே உங்களுக்கு ஏற்படும். அவரின் வார்தையிலும் ஒரு தம்பியை திட்டும் தோனியே வெளிப்படும்.
நாம் ‘சார்’.. ‘மேடம்’ என அழைக்கும் ஒரு மேனேஜர் திட்டினால் எதோ ஒரு உயர் பதவியில் இருப்பவர் திட்டுகிறார் என அவரின் அனுபவத்துக்கும் வயதுக்கும் மறியாதை கொடுத்து நம்மை நாம் சமாதானம் செய்து கொள்வோம்.
தன்னை ‘அண்ணா’ ‘அக்கா’ என அழைக்கும் ஒருவர் தவறு செய்தால் ஒரு சகோதரனுக்கே உரிய அக்கரையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம்.
ஒரு வேளை நம்முடன் இருக்கும் ஒருவருக்கு ரேட்டிங் குறைத்து வந்தால் நாம் அவர்களுக்காக உரிமையாக கேட்க தோன்றலாம். அட்லீஸ்ட் வருத்தமாவது படலாம்.
இப்படிபட்ட உறவுகள் உரிமையை கொடுக்கும்
அந்த உரிமைகள் நம் சுதந்திரத்தை காக்கும்.
உறவு சொல்லி அழைத்தால் கோஷ்டி சேர்ந்துவிடும் என்பதாலே இந்த கலாச்சாரம் என்பது எனக்கு கிடைத்த விடை.
கோஷ்டி சேர்ந்தால் மேனேஜ்மென்டுக்கு பிரச்சனையாகிவிடும்.
அதானால் தான் கோடிக்கணக்கானோர் வேலை செய்யும் கார்பரேட் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்க முடியவில்லை.
இப்படி தனித்திருக்க வைப்பதில் தான் அவர்களுக்கு லாபம்.
நாளை ரெசஷன் வந்து நம்முடன் இருப்பவரை வேலையைவிட்டு அனுப்பினாலும் நாம் அதை கண்டு கொள்ளாமல் சுய நலமாக இருக்கவைக்கவே இப்படி பட்ட கார்பரேட் கலாச்சார்ங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரித்தாள்வது என்பது கேள்வி பட்டிருப்போம்.
அதை இவ்வளவு சாதூரியமாக செயல்படுவது இப்பொழுது தான் பார்கிறேன்.
நமக்கே தெரியாமல் நம்மை சைக்கலாஜிக்கலாக பிரிந்திருக்க வைக்கபடும் ஒரு அதி புத்திசாலித்தனமாகவே நான் இதை சொல்வேன்.
தினமும் ஒருவரை உறவு வைத்து அழைத்து பாருங்களேன். நமக்கே தெரியாமல் அந்த உறவு வழு பெற்றுவிடும்.
அதனால் தான் ‘ஏங்க’ என சொல்லி அழைக்கும் மனைவியை விட “மாமா” என என்றழைக்கும் கணவன் மனைவி உறவு நெருக்கமாக மற்றவர்களுக்கு தெரிகிறது.
இப்படி ‘ஜி’ போட்டு பத்து வருடம் நாம் பழகினாலும் அந்த உறவுக்குள் இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கும்.
இதனால் தான் ஐ.டி யில் வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பாதுகாப்பின்மையுடனே இருக்கிறார்கள்.
வெளிப்பூச்சுக்கு தான் இந்த ‘டீம்-வொர்க்’ என்பதெல்லாம்.
இங்கு இருப்பவர்களை மனசாட்சியுடன் சொல்ல சொன்னால் தான் உண்மை தெரியும்.
இது ஒன்றும் இந்த கண்ணாடி கட்டிடத்துக்குள் நின்றுவிடுவதில்லை.
வெளியே என்னை யாராவது ‘டா’ என்று உரிமையுடன் அழைத்தால் கூட கோபம் வருகிறது. இவன் யார் என்னை மரியாதை இல்லாமல் டா என்கிறான் என்றிருக்கிறது.
இத்தனைக்கும் என்னை தூக்கி வளத்தவர்கள் அவர்களெல்லாம். என்னையும் மீறி வெளியில் மற்றவர்களை.. பெரியவர்களை.... பெயர் சொல்லியே அழைத்து பழகிவிட்டேன்.
இப்படி உறவுகளை கெடுத்து உரிமையை பறிக்கும் இப்படி பட்ட மட்டமான கலாச்சாரத்திற்கு நான் பலியாகிவிட மாட்டேன்.
மற்றிக்கொள்ள வேண்டும்.
நினைத்துக் கொண்டிருந்த பொழுது..
“பிரபு..”
அட இவன் வேற.....அதே சின்ன பையன் தான்.
எதுவும் சொல்லாமல் நிமிர்ந்தேன்
“ஜி... இது எப்படி ஜி பன்றது” என எதையோ என்னிடம் கேட்டான்.
முதலில் இவனை ஏதாவது செய்யவேண்டும்.
பிரபு மித்ரன்