ஒரு முன்னனி நடிகனின் படம் வர இரண்டு நாள்
இருந்த சமயம்
அதை பற்றி ஒரு பேச்சு என் காதில் விழ நேர்ந்தது
“அவன் படத்துல என்னடா இருக்க போகுது??
ஒன்னா அம்மா வ காப்பாத்துவான் இல்ல தங்கச்சிய
காப்பாத்துவான்
அப்படியும் இல்லனா ஊர காப்பாத்துவான்”
இப்படி ஒருவன் பேசி கொண்டிருந்ததான்.
இல்லை நான் கேட்கிறேன்
அம்மா தங்கை பாசம் யென்ன அவ்வளவு கேவலமான
செயலா??
அதை ஏன் இவ்வளவு அசிங்கமாக சொல்கிறார்கள்??
இவர்களை சொல்லி தப்பில்லை.
சினிமாவை புரட்டி போடுகிறேன் என ஒரு கூட்டம்
சுத்துகிறதே அதை சொல்ல வேண்டும்.
ஒரு காலத்தில்
நல்லவர்களையும்...தியாகிகளையும்.. புரட்சியாலனையும் கதாநாயகனாக காமித்தவர்கள்
இப்பொழுது
குடிகாரனையும்...கொலைகாரனையும்...கொள்ளைகாரனையும்...பொம்பளைபொருக்கியையும்
நாயகர்களாக காமிக்கிறார்கள்.
உடனே ரசிகன் மாறிவிட்டான் என அவன் மேல் பழி
போட்டு விடுவார்கள்.
எந்த ரசிகனும் உன் சட்டையை பிடித்து குடிகாரனை
நாயகனாக வைக்க சொல்லி கேட்கவில்லை.
நீ தான் உன் சுய லாபத்திற்கு ரசிகனின் ரசனையை
மாற்ற பார்க்கிறாய்.
எல்லாரும் ஒரு விதத்தில் படம் எடுத்தால் நான்
வித்யாசமாக செய்கிறேன் என ஆரம்பித்து இப்பொழுது வரும் அத்தனை படங்களும் இப்படி சினிமாவை
சகதியாக மாற்றிவிட்டது.
“கவிதை போல படம்
எடுக்கனும்” என சொல்லி கொண்டிருந்த இயக்குனர்கள் இப்பொழுது “ரத்தம் தெரிக்க தெரிக்க ஒரு படம் பன்னனும்”
னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
மாமனாருக்கும் மருமகளுக்கும் நடுவில் நடக்கும்
ஒரு விரசத்தை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுத்தான்.
அதை கேட்டதற்கு
“உலகத்தில் நடக்காததா எடுக்கிறேன். நடப்பதை
வைத்து தான் எடுக்கிறேன்” என அதற்கு விளக்கம் சொன்னார்.
ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சாக்கடையை கையில்
வாரி எடுத்து ரோட்டில் போபவர்கள் மீதெல்லாம் தெளிப்பது போல
இந்த பைத்தியகாரர்கள் ஏதோ ஒரு இடத்தில்
நடக்கும் ஒரு அசிங்கத்தை வெளிச்சம் போட்டு ஊருக்கே காட்டி ஒட்டு மொத்த சமூகத்தையும்
நாரடித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் சாமியார்களும் மதவாதிகளும்
நிறைந்திருந்தாளும் நம் தமிழ் நாட்டில் மட்டும் எந்த மதக் கட்சியும் இன்று வரை
வேரூண்ற முடியவில்லையே!!!
அது ஏன் என்று தெரியுமா???
இதே சினிமா தான் காரணம்
1950-1970 ஆம் வருடங்களில் வரிசை கட்டிக்கொண்டு
வந்த திராவிட கொள்கைகளும் பகுத்தறிவு சிந்தனைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஒரு
தலைமுறையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது.
உலகிலேயே வேறு எவருக்கும் இல்லாத மொழிப்பற்று
நம்மிடம் மட்டும் இருக்க காரணம் அப்பொழுது வந்த சினிமாக்கள் தான்.
சினிமாவை மிக சரியாக பயன்படுத்திய காலகட்டம்
அது.
இயக்குனர்கள்...கதாசிரியர்கள்...நடிகர்கள்...பாடலாசிரியர்கள்
என ஒவ்வொருத்தரும் அவரவர் பொறுப்புணர்ந்து சமூகத்திற்காக போராடிய காலக்கட்டம்.
எம்.ஜி.ஆர் “திருடாதே..பாப்பா திருடாதே” என
பாடிய பொழுது எத்தனை திருடர்கள் திருந்தினார்கள் என தெரியுமா?
ரஜினி கண் தானம் செய்த பொழுது எத்தனை ரசிகர்கள்
கண் தானம் செய்தார்கள் என அப்பொழுது வந்த நாளிதழ்களை புரட்டி பாருங்கள்.
இது தான் அன்றைய சினிமா.
தாங்கள் கனவு காணும் சமூகத்தை திரையில் காட்ட
நினைத்தார்கள்.
அந்த திரைப்படங்கள் சமூகத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தியது.
எப்பொழுதும் சமூகம் சினிமாவை பிரதிபளிக்கும்.
இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோம்???
எந்த சமூக பிரச்சனையை வைத்து படம் எடுக்கிறோம்?
ஒவ்வொரு மனிதனும் தன்னை ஹீரோவாக தான்
நினைத்துக் கொள்கிறான்.
அவன் பார்க்கும் சினிமாவில் வரும் ஹீரோவை அந்த
இரண்டு மணி நேரமும் தன்னை தானே அந்த ஹீரோவாக என்ணி படம் பாக்கிறான்.
அந்த கதாபாத்திரம் என்ன சொல்கிறதோ அது அவனுள்
விதைக்க படுகிறது.
அந்த விதை நல்லதாக இருந்தால் மாற்றமும் நல்லதாக
தான் நடக்கும்.
கெட்டதாக இருந்தால்????
இன்று பேப்பரில் வரும் பாதி குற்ற
செய்திகளுக்கு காரணம் இந்த சினிமா தான் என அடித்து சொல்லுவேன்.
பணம் பணம் என அலையும் ஹீரோ... (!)
பெண் பித்து பிடித்து பின்னால் சுத்தும்
ஹீரோ... (!).
எப்பொழுதும் குடித்துக்கொண்டிருக்கும்
ஹீரோ....(!)
அருவாலும் கையுமாக சுத்தும் ஹீரோ....(!)
ஒரு கதையில் எந்த கதாபாத்திரத்தின் மேல் வெளிச்சம் படுகிறதோ அது தான் கதாநாயகன்.
ஒரு கதையில் எந்த கதாபாத்திரத்தின் மேல் வெளிச்சம் படுகிறதோ அது தான் கதாநாயகன்.
அந்த காலத்தில் எவனை எல்லாம் நம் சினிமா
வில்லனாக பார்த்ததோ அவனை எல்லாம் இன்று ஹீரோவாக்கிவிட்டார்கள்.
ஒன்றுமில்லை
குடிப்பதை தவறு என சொல்ல ஒரு படம் இருக்கிறதா??
குடியை காட்டாமல் இங்கு ஒரு படமும் வருவதில்லை
அது தான் உண்மை.
சமுதாயத்தில் நடப்பதை சினிமாவில் சொல்கிறோம்
என்கிறீர்களா?
அதை சொல்ல நாளிதழ்கள் இருக்கிறது.
சமுதாயத்தை மாற்ற எதாவது சொல்லுங்கள்.
புண்ணியமா போகும்.
வித்யாசமாக எடுக்க வேண்டும் என எடுக்கிறேன்
என்கிறீர்களா??
மனிதன் தோன்றிய காலம் முதல் வாயால் தான்
சாப்பிடுகிறான்.
அதில் வித்யாசம் எதிர்பார்த்தால் என்ன
ஆகும்.???
முடிந்தால் செய்து பாருங்கள்.
வித்யாசமாக சொல்ல ஆயிரம் நல்ல விஷயங்கள்
இருக்கிறது.
“தாலி சென்டிமென்ட்” என்ற வார்த்தையே நம்
நாட்டில் தாலி மேல் இருந்த மரியாதையை ஏதோ ஓல்டு ஃபேஸன் போல ஒரு பிம்பத்தை
உருவாக்கிவிட்டது.
அதை செய்ததும் இந்த சினிமா தான்.
“பாசமலர்” போன்ற உறவுகளை கொண்டாட பட்ட அதே
சினிமா தான் இன்று “சிந்து சமவெளி” போன்ற அசிங்கத்தை தந்து கொண்டிருக்கிறது
“மனதில் உறுதி வேண்டும்” என பெண்களை தலை
நிமிரவைத்த சினிமாக்கள் எடுத்த இதே ஊரில் தான் “ஐட்டம் சாங்க்” என்ற ஜிகினா பெயரில்
பெண்னை துகிழுரித்து கொண்டிருக்கிறீர்கள்.
சமீபத்தில் வந்த ஒரு படத்தில் கர்பமாக
இருக்கும் கதாநாயகியை நான்கு பேர் கொட்டும் மழையில் கற்பழிக்கிறார்கள்.
ப்துஊ......
என்ன ஒரு வக்ரமான சிந்தனை..
இது சமூதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..
நாளை உன் மனைவி குழந்தையுடன் அந்த சினிமாவை
எப்படி பார்ப்பாய்???
அந்த காட்சியை எத்தனை கர்பிணிகள் பார்த்து
பதறியிருப்பார்கள்???
அது தான் வேண்டுமா??
குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கிறது.
அதை மாற்ற வழி சொல்லுங்கள்.
மனிதன் இயந்திரமாக மாறி விட்டான்
அதை மாற்ற எதாவது சொல்லுங்கள்.
பாலியல் வன்முறையை எதிர்த்து உங்கள் படங்களில்
குரல் கொடுங்கள்
இப்படி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு
உங்கள் படத்தில் தீர்வு சொல்லுங்கள்.
நீங்கள் மட்டும் ஒரு மாற்றத்திற்காக உங்கள் திரைப்படங்கள் மூலம் போராடினால் இரண்டே வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத
அளவிற்க்கு அதன் தாக்கம் இந்த சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும்.
அப்படி எல்லாம் படம் எடுத்தால் ரசிக்க
மாட்டார்கள் என சொல்கிறீர்களா??
ரசிப்பது போல் நீ படம் எடு.
எடுக்க தெரியவில்லை எனில் சினிமாவை விட்டு
ஓடிவிடு.
கலை என்பது மக்களை நல்வழி படுத்த பயன்படட்டும்.
கலையை வியாபாரம் செய்வதற்க்காக கொச்சை
படுத்தினால்
நீங்கள் கலைஞர்கள் இல்லை.
விபச்சாரிகள்.
சினிமா விபச்சாரிகள்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment