Sunday, 30 November 2014

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

புகை பிடிப்பவர்களை திருத்த மத்திய அரசு ஒரு அதி புத்திசாலிதனமான யோசனை சொல்லி இருக்கிறார்கள்.


அதாவது சிகரெட்டை சில்லரையாக விற்க கூடாதாம்.
பாக்கெட் பாக்கெட்டாக தான் விற்க வேண்டுமாம்.
அதாவது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க சங்கட பட்டுக்கொண்டு புகை பிடிப்பதையே நிறுத்தி விடுவார்களாம்.
ஆஹா!!
என்ன ஒரு அற்புதமான ஐடியா??!!
உங்களுக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கொடுக்க வில்லை.!!
போங்கடாங்க பொடலங்கா

தமிழ் நாட்டுல இந்த டெக்னிக் எல்லாம் பல வருஷங்களுக்கு முன்னாடியே யூஸ் பன்னிட்டாங்க பாஸ்.

அந்த காலத்துல எல்லாம் டாஸ்மாக் ல “கட்டிங்” மட்டும் தனியாக கிடைக்கும்.
அதன் பிறகு தான் குடிப்பவர்களை திருத்த கட்டிங்கை தடை செய்து குவாட்டர் தான் வாங்க வேண்டும் என சட்டம் வந்தது.
இந்த விஷயம் இப்பொழுது குடிக்க ஆரம்பிச்ச பசங்களுக்கு தெரிய சாத்தியம் இல்லை.
தெரிந்து கொள்ளுங்கள்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

ஆனால் என்ன நடந்தது?
நாள் முழுக்க வேலை செய்து அழுப்பில் ஒரே ஒரு கட்டிங் சாப்பிட்டுவிட்டு சமத்தாக வீட்டுக்கு போய்விடும் உழைப்பாளிகள் எல்லாம் பாட்டில் பாட்டிலாக வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
ஒரு பாட்டிலை வாங்கிவிட்டு பழையபடி தினமும் ஒரு கட்டிங் மட்டும் குடிக்க இங்கு எவனும் புத்தன் இல்லை.

முடிவில் தினமும் உடல் வலிக்கு ஒரு டம்ளர் குடித்தவன் தினமும் ஒரு பாட்டில் குடிக்கும் குடிகாரன் ஆனான்.
அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.
அரசாங்கத்தின் வருமானம் அசுர வளர்ச்சி கண்டது.
இது நம் வரலாறு.

இன்று மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் தான் இது

எவனும் ஒரு பாக்கெட் சிகரெட்டை சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு பூஜை செய்ய போவதில்லை.
முன்பு நாளைக்கு இரண்டு சிகரெட் குடித்தவன் இனி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பான்.
புற்று நோய் வந்து சாவான்.
சாகட்டுமே!
அவன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும்.
வரட்டுமே!
அதற்கு தானே இத்தனை கோடி பேர் உங்களுக்கு ஓட்டு போட்டு அரியனை ஏற்றி இருக்கிறோம்.

அடுத்த கட்சியை பற்றி குறை கூற எத்தனை ஆராய்ச்சி செய்கிறீர்கள்.??!! பல வருடங்களுக்கு முன்னால் நடந்ததை தேதியுடன் ஞாபகபடுத்தி குறை சொல்லி அறிக்கை விடுகிறீர்கள்.
இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு கொஞ்சம் அதன் சாத்தியகூறுகளை ஆராயந்தால் என்ன குறைந்தா போய்விடும்??

நம்மை நாமே காத்துகொள்ளவில்லை எனில் இவர்கள் போடும் சட்டமே நமக்கு சங்கூதிவிடும் போல!!


பிரபு மித்ரன்






No comments:

Post a Comment

Related Articles