வாடாத வரைக்கும் தான் பூ
கோவிளுக்கும் போகலாம்
கூந்தலுக்கும் போகலாம்.
வாடிவிட்டால் குப்பைக்கு மட்டுமே போகும்.
அதே போல தான் நாமும்.
நாம்மிடம் முயற்சி இருக்கும் வரை தான் நமக்கு
வெற்றி தோல்வி என்ற இரண்டு முடிவுகள்.
ஆனால் முயற்சியை விட்டு விட்டால் அங்கு நமக்கு
தோல்வி மட்டும் தான் முடிவு.
வெற்றியோ தோல்வியோ நாம் எந்த இடத்தை அடைகிறோம்
என்பதல்ல...
நாம் எந்த இடத்தில் நின்று விடுகிறோம் என்பது.
நாம் ஆசை பட்டதை துரத்தி கொண்டு ஓடுகிறோம்.
துரத்தி துரத்தி அது கிடைக்காது என நாமே ஒரு
முடிவுக்கு வந்து ஓடுவதை நிறுத்தி விட்டால் அந்த இடத்தில் நாம் தோற்கிறோம்.
ஒரு வேளை நிற்க்காமல் ஓடி அதை அடைந்து விட்டால்
அந்த இடத்தில் ஜெயிக்கிறோம்.
நாம் வாழ்கையில் தோற்றுவிட்டோம் என நினைக்கும்
போதெல்லாம் நம்மிடம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்.
நாம் ஓடுகிறோமா?
இல்லை நிற்கிறோமா?
கண்டிப்பாக நிற்கிறோம் என்று தான் பதில் வரும்.
நாம் சின்ன வயதில் படித்த ஒரு கதை.
ஞாபகப் படுத்துகிறேன்.
ஒரு காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது.
அன்று அதற்கு பயங்கர பசி.
நாள் முழுவதும் சுற்றியும் சாப்பிட எதுவுமே
கிடைக்கவில்லை.
இப்படி அங்கும் இங்கும் சுற்றி கடைசியாக ஒரு
திராட்சை தோட்டதிற்கு பக்கம் வந்துவிட்டது.
அதை பார்த்த நரிக்கு பசி இன்னும் அதிகமாகி
சாப்பிட அருகில் வந்தது.
திராட்சை படர்வதற்காக பந்தல் அமைத்திருந்தனர்.
அது நரியை விட உயரமாக இருந்தது.
குதித்தாவது பழத்தை பறித்து தின்றுவிடவேண்டும்
என்று முடிவோடு குதித்து குதித்து முயன்றது.
அதற்கு எட்டவே இல்லை.
பழம் ருசியாக இருக்கும். எப்படியாவது
சாப்பிட்டு விட வேண்டும் என்று விடாமல் முயன்றது.
ஒரு கட்டத்தில் கால் எல்லாம் வலிக்கவே நின்று
விட்டது.
பின் அந்த பழத்தை அன்னாந்து பார்த்து சொன்னதாம்
“ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும்” என.
நாமும் நம் வாழ்நாளில் எத்தனை பழத்தை இப்படி
புளிக்கும் என விட்டிருப்போம்.
பாதி வரை முயன்று விட்டு இது நமக்கு ஒத்து
வராது என நினைத்திருப்போம்.
இதற்கு காரணமாக ஒரு உளவியல் உண்மையை அறிஞர்கள்
சொல்கிறார்கள்.
அதாவது நாம் ஒரு செயலை செய்ய முடியும் என
நினைத்து ஆரம்பிக்கும் பொழுது அதில் இருக்கும் பாசிட்டிவை மட்டுமே பார்ப்போம்.
அதனால் தான் எதையும் யோசிக்கும் பொழுது அது
அவ்வளவு சுலபமாக தெரிகிறது.
அந்த செயல் எப்பொழுது கஷ்டம் என நினைக்க
ஆரம்பிக்கிறோமோ அந்த நிமிடத்தில் இருந்து அதில் இருக்கும் நெகட்டிவ்வை தேடி தேடி
எடுக்கிறோம்.
அதாவது அதை பாதியில் விட்டு விட காரணங்களை தேடுகிறோம்.
கிடைக்கவில்லை எனில் நாமே காரணங்களை உருவாக்கி
விடுவோம்.
“ஒரு
செயலை செய்வதற்கு முன்பு அதிகம் அதை பற்றி பேசுபவர்கள் அதை செயலில்
காட்டுவதில்லையே! ஏன்!?”
என ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி
வெ.இறையன்பு மிக அழகாக அதற்கு விளக்கம் கொடுத்திருப்பார்.
அதாவது “மனிதன் ஒரு செயலை வெற்றிகரமாக செய்து
முடித்து வரும் சந்தோஷத்தில் கிடைக்கும் திருப்தியை
அவன் அந்த செயலை பற்றி பிறரிடம் பேசுவதிலேயே
திருப்தி அடைந்து விடுகிறான். அதனால் தான் செயலில் காட்ட முடிவதில்லை” என.
உன்மை தான்.
நாம் யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்கும்
இலட்சியம் நமக்குள் உயிருடன் இருக்கும் போது பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்
இலட்சியங்கள் மட்டும் கேட்பவர்கள் செவிகளிலேயே செத்து அடக்கமாகிவிடுகிறது.
மனித மனம் மிக சோம்பேரி
அது சிறிய இன்பங்களில் திருப்தி அடைந்து
விடுகிறது.
நாம் நம் ஆசைகளில் எப்பொழுதும் திருப்தி
அடைவதில்லை. இலட்சியத்தில் தான்.
ஒரு ஓட்டப்பந்தைய வீர்ர் தான் ஓடும் தூரத்தின்
அளவை காதலித்தால் அவன் சீக்கிறமே சோர்ந்து விடுவான்.
மாறாக தன் காதலை ஓடுவதில் வைத்தால் சோர்வு அவனை
அண்டாது. ஓடிகொண்டேதான் இருப்பான்.
ஏனென்றால் அவன் காதலிப்பது தூரத்தின் அளவை அல்ல
நின்றுவிட.
இதே தான் நமக்கும்.
காதலிப்பது முக்கியம் அல்ல
எதை காதலிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
நாம் செய்ய போகும் செயலின் முடிவில் கிடைக்கும்
பலனை நம் மனதில் வைத்தால் நம்மால் அதை அடையவே முடியாது.
நாம் செய்யும் செயலில் மனதை வைக்க வேண்டும்.
“எழுந்திரு! விழித்துகொள்!” என்று
விவேகான்ந்தர் சொன்னதும் இதை தான்.
“செய் அல்லது செத்து மடி” என காந்தி சொன்னது
சுகந்திர போராட்ட்த்திற்கு மட்டும் அல்ல நம் வாழ்கைக்கும் தான்.
பேசிகொண்டே இருப்பதில் எந்த பலனும் அல்ல.
பேசுவதை நிருத்து.
ஓய்வு எடுத்தது போதும்.
எழுந்திடு.
வாடாத வரைக்கும் தான் பூ
கோவிளுக்கும் போகலாம்
கூந்தலுக்கும் போகலாம்.
வாடிவிட்டால் குப்பைக்கு மட்டுமே போகும்.
-பிரபு மித்ரன்.
No comments:
Post a Comment