Sunday, 7 August 2016

உயிர்

வெளியே தண்ணீரை கீழே ஊற்றும் சத்தம் கேட்டது.

எழுந்து சென்று பார்த்தேன்.

என் பாட்டி ஒரு சின்ன பக்கெட்டில் தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள்.


இப்பொழுதெல்லாம் நடையில் ஒரு நடுக்கம் தெரிவதாய் எனக்கு தோன்றியது. வயது 70 தொட்டுவிட்டது.
வந்தவள் ரோஜா செடியின் வேரில் அதை அப்படியே ஊற்றினாள்.
ஊற்றியதும் அதை உற்றுப்பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பி
நாலு பக்கெட் தண்ணீ ஊத்திட்டேன்.. இழுத்துட்டே இருக்கு.. எப்படி இழுக்குது பாரு..” என்றாள்.
ஊற்றிய நீர் அப்படியே குறைந்து குறைந்து முழுவதும் உறிஞ்சிக்கொண்டது அதன் வேர்கள்.
என்றேன்.
காற்றுக்கு தலையாட்டியது.

திரும்பவும் நடந்து சென்று தொட்டியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு நடுக்கம் தெரியாமல் இருக்க மெதுவாக நடந்து வந்தாள்.

நான் எதுக்கு இப்படி தண்ணீ ஊத்திட்டு இருக்கே... அதான் நாலு பக்கெட் ஊத்தியாச்சுல.. போதும்

நான் பேசுவதை கண்டுகொள்ளாமல் பாவம்.. தண்ணியே ஊத்துறது இல்ல..எப்படி உறிஞ்சுது பாரு என்றாள்.

அதுக்காக அது வேணாம்னு சொல்லி உறிஞ்சுறத நிறுத்துற வரைக்கும் ஊத்திட்டே இருப்பியா?” என்றேன்.

ஆமா. பின்னே... தண்ணீ இல்லாம எப்படிதான் இருக்குதோ என சொல்லிக்கொண்டு அடுத்த நடைக்கு சென்றாள்.

எனக்கு தோசை சுட்டுப்போடும் பொழுது நான் வேண்டாம்னு சொல்லுகிற வரைக்கும் சுட்டுக்கொண்டே இருப்பாள். இன்னும் எவ்வளவு வேண்டும் என கேட்டதே கிடையாது. எனக்கு என்னவோ அது ஞாபகம் வந்தது.

ரோஜா செடியை பார்த்தேன்.


திடீரென அதற்கு உயிர் இருப்பது போலவும் நாங்கள் பேசுவதை அது கேட்டுக்கொண்டு இருப்பது போலவும் தோன்றியது.

பிரபு மித்ரன்



Related Articles