சாதி இல்லை என்று பாரதியும் ஈ.வே.ரா வும் சொல்லி கேட்காத இந்த அறிவாளிகள் இந்த
தலைமுறை கிறுக்கன்கள் சொல்லியா கேட்டுவிட போகிறது.
ஆம்
சாதியை எதிர்த்துப் பேசும் பிள்ளைகளை சொந்த வீட்டிலேயே கிறுக்கர்களாக தான்
பார்க்கிறார்கள்.
இந்த சாதி உருவான வரலாறு அனைவரும் அறிந்ததே.
இப்போது தொழில் சங்கம் இருப்பது போல அந்த காலத்தில்
தாங்கள் செய்யும் தொழில்களுக்கு சங்கம் அமைத்ததன் விளைவே இந்த சாதி.
கால போக்கில் அந்த தொழிலை மறந்த நம் அறிவாளிகள் சங்கத்தை மட்டும் மறக்காமல்
அதை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
சாதியை விட்டுக்கொடுக்க முடியாதவனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள்.
“எந்த தொழிலை அடிப்படையாக கொண்டு உன் சாதி உருவானதோ அந்த தொழிலையே விட்டு
விட்ட பிறகு அதன் சங்கம் எதற்கு???உனக்கு அந்த சாதி எதற்கு???”
ஒன்று அந்த தொழிலை செய்... இல்லை சங்கத்தை களை.
தொழில் இல்லாமல் சங்கத்தை மட்டும் வைத்திருப்பது உயிர் இல்லாத பிணத்தை வைதிருப்பது
போல.
அடுத்தது
தன் சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டு திரியும் ஆட்களை
கேளுங்கள்
“ஏன்? உன் சாதியில் மட்டும் தான் பத்தினிகள் இருக்கிறர்களா???
கண்ணகி என்ன உன் சாதியில் தான் பிறந்தாளா???
சீதை என்ன உன் சாதியில் தான் பிறந்தாளா???”
நீங்கள் கும்பிடும் சாமியே சாதி பார்த்து திருமணம் செய்யாத பொழுது உனக்கு மட்டும்
எதற்கு??
நாம் வாழும் வாழ்க்கையில் எந்த இடத்திலும் இந்த சாதி நமக்கு உதவ போவதில்லை.
நீ பிறக்கும் போது உன் அன்னைக்கு பிரசவம் பார்த்தவளும் நீ இறக்கும் போது உன்னை
எரிப்பவனும் உன் சாதியாக இருக்க மாட்டார்கள்.
நீ பார்க்கும் எல்லா பொருளும் வேறு சாதிகாரன் கை பட்டு உருவானவையே!!!
உன் நண்பனும்...உன் பகைவனும் வேறு சாதிகாரன் ஆக தான் இருப்பான்.
உண்மையை கூற வேண்டும் என்றால் நாம் மனதளவில் சாதியை மறந்து விட்டோம்.
பின்பு பெயர் அளவில் மட்டும் எதற்கு???
உதவாத சாதியை உதைத்தெறியுங்கள்.
இனி எவன் உன்னிடம் என்ன சாதி என்று கேட்டாலும் செருப்பால் அடிப்பது போல்
கூறுங்கள்
நான் ஆண் சாதி.....
நான் பெண் சாதி.... என்று.
பிரபு மித்ரன்
நீங்கள் கும்பிடும் சாமியே சாதி பார்த்து திருமணம் செய்யாத பொழுது உனக்கு மட்டும் எதற்கு??
ReplyDeletenalla kelvi....
naanum aan saathi..