Saturday, 6 September 2014

யார் இந்த டி. ராஜேந்தர் ?


           எங்கயோ மயிலாடுதுறையில் பிறந்து 70 களின் கடைசியில் சினிமாவை கனவாக கொண்டு ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான்.

எப்படியோ முட்டி மோதி இந்த சினிமாவை கற்று முதல் முதல் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைக்க இயக்குனராகிறான்.

தன் முதல் படம்
ஒரு தாய் குழந்தையை பெற்று எடுக்க எவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவிப்பாளோ அதை போல தான் இயக்கமும். ஒவ்வொரு frame ஆக பார்த்து பார்த்து செதுக்குகிறான். தானே இசை அமைக்கிறான்.

1980 இல் ரிலீஸ் ஆகிறது.
பிறசவித்த அந்த குழந்தையின் முகத்தை பார்க்க முதல் நாள் தியேட்டரில் கடைசி சீட்டின் அருகிள் உள்ள கதவு ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறான்.
மனது முழுவதும் சந்தோஷத்தோடு.
படம் ஆரம்பமாகிறது
படப் பெயர் போடப்பட்டு ஒவ்வொரு நடிகரின் பெயரும் போடுகிறார்கள்.
கடைசி டைட்டில் கார்டில் இயக்கம் என்ற இடத்தில் வேரு யாரோ பெயர். தயாரிப்பாளரின் பெயர்.

எப்படி இருக்கும்???!!

தான் பார்த்து பார்த்து செதுக்கிய அந்த படத்தை பார்க்காமலே தியேட்டரை விட்டு வெளியே வருகிறான்.

அவன் ஓய்ந்துவிடவில்லை
அதன் பிறகு 80 களில் அவன் இயக்கிய அத்தனை படங்களும் ப்ளாக் பஸ்டர்(Block Buster), 365 நாட்களையும் கடந்து ஓடியவை.
அவர் தான்
இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், இசை அமைப்பாளர்
டி. ராஜேந்தர்



அவர் இயக்கி பார்க்க முடியாமல் போன படம் தான் “ஒரு தலை ராகம்”
1980 ரிலீஸ் ஆகி தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட படம். ஒரு வருடத்தை தாண்டி ஓடி சாதனை படைத்த படம்.
கல்லூரி காதலை மிக அழகாக ஆழமாக சொன்ன முதல் தமிழ் படம்
நம்பிக்கை இல்லை என்றால் 70 களில் பிறந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.


அன்று அவரை ஏமாற்றியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.
இன்றும் இவர் நிலைத்து நிற்க்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சினிமா கலைஞருக்கு நாம் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
சினிமா தெரிந்த யாரும் அவரை கின்டல் செய்வதில்லை
தெரியாதவர்கள் தான்.

இன்றும் அந்த மனிதர் தன்னை நிருபித்துக்கொள்ள ஒவ்வொரு மேடையிலும் போராடிக்கொண்டிருக்கிறார்.
தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்திக்கொள்கிறார்
நாம் போன தலைமுறை கலைஞர்களை காமெடியர்களாக பார்க்க ஆரம்பித்து விட்டோம். அதனால் தான் அவர் எது பேசினாலும் கின்டல் செய்கிரோம்.
ஏன்?? தங்கை பாசம், தாய் பாசம் வைத்து படம் எடுப்பது அவ்வளவு தப்பான விஷயமா???
அனால் நாம் ஒன்றை கவனிக்கனும், இப்படி எவ்வளவு பேர் அவரை வச்சு கின்டல் பன்னுனாலும் அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
அவர் எப்பொழுதும் அவராகவே இருக்கிறார்.
அதுதான் டி.ஆர்

“முடி இருக்குறவனெல்லாம் டி.ஆர் இல்ல
முடியும் ங்கறவன் தான் டி.ஆர்”

ச்சே...என்ன ஒரு பாசிட்டிவ் attitude!
Chance eh illa sir. Hats off.


-பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles