நாட்கள் வேகமாக
ஓடுகிறது
நாமும் வேகமாக ஓடுகிறோம்
நாம் ஓடுவதை நிறுத்தி விட்டால் நமக்கு பின்னால் வருபவர்கள் நம்மை பின்னுக்கு தள்ளி விடுவார்கள்
அதற்கு பயந்தே
ஓடுவதை நிறுத்த முடிவதில்லை
இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் எப்பொழுது வாழ போகிறோம்??
ஒரு நாள் வரும்
நம் தலைமுடி நரைத்திருக்கும்
கை நடுங்கும்
கால் தடுமாறும்
சிரிக்கக்கூட தெம்பிருக்காது
“சாப்டியா?” என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்
அன்று நாம் கண்டிப்பாக ஓடுவதை நிறுத்தி விட்டு திரும்பி பார்ப்போம்
அப்பொழுது தெரியும் நாம் கடந்து வந்த பாதையில் எவ்வளவு ரோஜாக்கள் இருந்ததென.
அதில் எவ்வளவோ ரோஜாக்கள் உங்கள் கால் பட்டு நசுங்கியிருக்கும்
மிச்சம் காலத்தால் கருகியிருக்கும்
ஓடாதே என்று சொல்லவில்லை
அப்படி சொன்னால் நான் உங்களால் முட்டாளாக்கப்படுவேன்
50 வயதில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்க்கு 20 வயதில் இருந்து ஓடுகிறோம்.
30 வருட ஓட்டம்
அதற்கு பதில் இப்பொழுதே வாழலாமே!!!
ஓட்டமாவது மிச்சமாகும்
நமக்கு பிடித்தை செய்வது தான் வாழ்வது என்று சொல்லலாம்
ஆனால்
குடிப்பதும் பிடித்துத்தான் செய்கிறார்கள்
அதனால் அது வாழ்வதாகாது
பிறரை காயப்படுத்தாமல் நமக்கு பிடித்ததை செய்வது தான் உண்மையாக வாழ்வது
இதை நான் சொல்லவில்லை
திருவள்ளுவர் சொன்னது
நம் வாழ்வில் எவ்வளவோ நேரங்களில் நமக்கு பிடித்ததை செய்ய முடியாமல் போகிறது
சிக்னலில் நிற்கிறோம்.நம்மிடம் பிச்சை கேட்கும் 80 வயது முதியவரிடம் “இல்லை..இல்லை”
என்று பழக்க தோசத்தில் தலையாட்டிவிட்டு அவர் போன பிறகு “காசு கொடுத்திருக்கலாமோ!”
என்று உச்சு கொட்டுகிறோம் அல்லவா!!?? நீங்கள் கொடுக்கும் காசை வைத்து அவர் ஒன்றும்
கோட்டை கட்டிவிட போவதில்லை... உங்களால் ஒரு வேளை சாப்பிட்டிருப்பார். இதுவும்
உங்கள் ஓட்டத்தில் கருகிய ரோஜா தான்.
இப்படி தலைதெரிக்க ஓடுவதற்க்கு பதில் நின்று நிதானமாக வாழ்க்கையை
ரசித்துக்கொண்டே நடக்கலாமே!!!
வாழ்த்துகள்
சுகமான பயனத்திற்கு
பிரபு மித்ரன்
.
No comments:
Post a Comment