நண்பர்கள் தான் உலகம் என்று இருப்பவன் உருப்பட மாட்டான்.
நண்பர்கள் இல்லாமல் இருப்பவனை இவ்வுலகம் உருப்பட விடாது.
இங்கே யாரும் நிரந்தர நண்பனும் இல்லை....நிரந்தர பகைவனும் இல்லை
நண்பனுக்காக உயிரை விட்டவர்களின் சரித்திரமும் இங்கு இருக்கிறது.
நண்பனால் உயிரை விட்டவர்களின் சரித்திரமும் இங்கு இருக்கிறது.
அதனால் நண்பனே வேண்டாம் என்று சொல்லி விட முடியாது.
நண்பன் இல்லாமல் உங்களை நீங்களே நினைத்துப்பாருங்கள்....
வெறுப்பு தானாக வரும்.
எந்த வித இரத்த சொந்தமும் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே சொந்தம் இந்த நட்பு
தான்.
நீங்கள் வாழ்வில் அதிகமாக சிரித்தது உங்கள் நண்பர்களுடன் இருந்த நாட்களாக தான் இருக்கும்.
நீங்கள் கடைசியாக சிரித்ததும்(உண்மையாக) உங்கள் நண்பனிடமாக தான் இருக்கும்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது நட்பு
முகத்தை பார்க்கும் பொழுது சிரித்து பேசுவது மட்டும் நட்பாகாது, அது
அகத்திலிருந்து வரவேண்டும் என்பதே இக்குறளின் பொருள்.
நட்பு என்பது உண்மையாக இருக்கும் பொழுது அது காதலை விட... இல்லை..
இல்லை..
அது கடவுளை விட புனிதமானதாகும்.
நான் நட்பை சுவாசிக்க சொல்லவில்லை.. நேசியுங்கள் போதும்.
நட்பு என்பது ஒரு புரிதல், அவ்வளவே.
அது மனிதனிடமும் வரலாம். நீங்கள் வளர்க்கும் நாய் குட்டியுடனும் வரலாம்.
எப்பொழுதும் உண்மையான நட்பை தேடாதீர்கள், அதில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
முடிந்தவரை நீங்கள் உண்மையான நண்பனாக இருங்கள்.
என்னை பொருத்த வரை இந்த புரிதல் யாரிடமும் வரலாம்.
உங்கள் அம்மாவிடம் வரலாம்
உங்கள் மகனிடமும் வரலாம்
நீங்கள் வளர்க்கும் மரத்திடமும் வரலாம்
ஏன்!
உங்கள் அம்மாவிடம் வரலாம்
உங்கள் மகனிடமும் வரலாம்
நீங்கள் வளர்க்கும் மரத்திடமும் வரலாம்
ஏன்!
இதை படிக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட மறைமுகமாக ஒரு புரிதல் வரலாம்.
அவ்வகையில் நானும் உங்களுக்கு நண்பனே.
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
நட்புடன்
பிரபு மித்ரன்.
No comments:
Post a Comment