இணையதளத்தைப் பொருத்தவரையில்
நாம் என்ன பேசுகிறோம் என்பதை விட எவ்வளவு பேர் அதைப் பற்றி பேசுகிறோம் என்பதே முக்கியம்
தன்னை அமைதியின் அடையாளமாக உலகுக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டிக்கொண்டு இருக்கும் இந்த இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி இங்கு யாருக்காவது தெரியுமா?????
நேற்றுவரை நானும் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப் பட்டுக்கொண்டு தான் இருந்தேன்.
இப்பொழுது வெட்க்கப்படுகிறேன்
உலக நாடுகளைப் பற்றி வாய்கிழியப் பேசும் நம்மில் பல பேருக்கு இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களைப் பற்றித் தெரியுமா??
அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியுமா??
மணிப்பூர்
இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களில் ஒன்று
300 அடிக்கு ஒரு ஆயுதம் ஏந்திய ராணுவம்
பொது இடத்தில் 2 பேருக்கு மேல் ஒன்றாக நடக்கக் கூடாது
யாரையும் வாரண்ட் இல்லாமல் ராணுவம் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்
ராணுவம் நினைத்தால் சந்தேகத்தின் பெயரிலேயே யாரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லலாம்
கொல்கிறார்கள்
அப்பாவிப் பொது மக்களைக் கொல்கிறார்கள்
பெண்களை கற்ப்பழித்துக் கொல்கிறார்கள்
இவர்களை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னும் நிறுத்தி கேள்வி கேட்க முடியாது, காரணம் அங்கு இயற்றப்பட்டிருக்கும் சட்டம்
அதற்க்கு அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பது நம் இந்தியா தான்.
இது இன்று ஆரம்பித்தது அல்ல
1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State)ஆகும். 1946 அக்டோபர் 15 அன்று மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1950 களில் சில இயக்கங்களின் மூலம் சுதந்திரச் சோஷியலிசக் குடியரசை உருவாக்கும் நோக்கில் தன்னுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களும் நடந்தன. இதுபோன்ற ‘கலகப் பகுதிகளில்’ போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்படும் ராணுவத்துக்கு கூடுதலாக சிறப்பு அதிகாரங்களைக் கொடுக்கும்
‘ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) [Armed Forces (Special Powers) Act (AFSPA)]சட்டம்’
இந்திய நாடாளுமன்றத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் 1958 செப்டம்பர் 11-ல் சட்டம் இயற்றியது.
இச்சட்டம் 1942ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் லின்லித்கோவால்(பிரபு) சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கிய காங்கிரசையும் அதில் கலந்து கொண்டவர்களையும் ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திலிருந்து பிறந்தது. இது மாதிரியான சட்டம் பிரிட்டனில் கூட இருந்ததில்லை.
இச்சட்டம் சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்டது.
1958இல் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம் நீதித் துறையாலும்கூடத் தலையிட முடியாத அதிகாரம் கொண்டது. இந்த அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றிவிட்டது
மலோம் படுகொலை
2000, நவம்பர் 3
மணிப்பூரில் ஆயுதப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்
அதற்கு பதிலடியாக அடுத்த நாளே மலோம் என்ற இடத்தில் பேருந்துக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் 10 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயமுற்றனர். இறந்தவர்களில் 62 வயது மூதாட்டியும் 1988-ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை விருது வாங்கிய சினம் சந்திரமணியும் அடங்குவார்கள்.
இதைக் கண்டு அன்று வெகுண்டெழுந்தவர் தான் இன்று மக்களால் “மணிப்பூரின் இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்படும்
இரோம் ஷர்மிளா
அப்பாவிப் பொது மக்களைக் கொல்கிறார்கள்
பெண்களை கற்ப்பழித்துக் கொல்கிறார்கள்
இவர்களை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னும் நிறுத்தி கேள்வி கேட்க முடியாது, காரணம் அங்கு இயற்றப்பட்டிருக்கும் சட்டம்
அதற்க்கு அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பது நம் இந்தியா தான்.
இது இன்று ஆரம்பித்தது அல்ல
1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State)ஆகும். 1946 அக்டோபர் 15 அன்று மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1950 களில் சில இயக்கங்களின் மூலம் சுதந்திரச் சோஷியலிசக் குடியரசை உருவாக்கும் நோக்கில் தன்னுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களும் நடந்தன. இதுபோன்ற ‘கலகப் பகுதிகளில்’ போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்படும் ராணுவத்துக்கு கூடுதலாக சிறப்பு அதிகாரங்களைக் கொடுக்கும்
‘ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) [Armed Forces (Special Powers) Act (AFSPA)]சட்டம்’
இந்திய நாடாளுமன்றத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் 1958 செப்டம்பர் 11-ல் சட்டம் இயற்றியது.
இச்சட்டம் 1942ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் லின்லித்கோவால்(பிரபு) சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கிய காங்கிரசையும் அதில் கலந்து கொண்டவர்களையும் ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திலிருந்து பிறந்தது. இது மாதிரியான சட்டம் பிரிட்டனில் கூட இருந்ததில்லை.
இச்சட்டம் சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்டது.
1958இல் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம் நீதித் துறையாலும்கூடத் தலையிட முடியாத அதிகாரம் கொண்டது. இந்த அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றிவிட்டது
மலோம் படுகொலை
2000, நவம்பர் 3
மணிப்பூரில் ஆயுதப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்
அதற்கு பதிலடியாக அடுத்த நாளே மலோம் என்ற இடத்தில் பேருந்துக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் 10 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயமுற்றனர். இறந்தவர்களில் 62 வயது மூதாட்டியும் 1988-ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை விருது வாங்கிய சினம் சந்திரமணியும் அடங்குவார்கள்.
இதைக் கண்டு அன்று வெகுண்டெழுந்தவர் தான் இன்று மக்களால் “மணிப்பூரின் இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்படும்
இரோம் ஷர்மிளா
தான் பிறந்த மண்ணில் தன் உரிமைகளை பறிப்பது தன் நாடே என்றால் அது எவ்வளவு கொடுமையானது!!!
எழுந்தாள்
ஆயுதம் எடுத்தாள்
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க காந்தி கையில் எடுத்த ஆயுதம்.
அதே ஆயுதம் தான்
இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் வாங்க இரோம் எடுத்தார்
மணிப்பூர் மக்களுக்கு எதிரான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்
அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு பயந்து போன மணிப்பூர் அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது
கடந்த 14 ஆண்டுகளாக அவர் திட உணவே உண்ணவில்லை
ஒவ்வொரு வருடமும் விடுதலை ஆகி அதே தினத்தில் திரும்பவும் கைது ஆகிறார் உண்ணாவிரதம் இருப்பதற்க்காக
2004 ஜூலை 10
மணிப்பூரிலுள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த மனோராமா என்ற 32 வயது பெண்ணை வீதிக்கு இழுத்து வந்து கை கால்களைக் கட்டிப்போட்டு ராணுவத்தினர் தூக்கிச்சென்றனர்.
அந்தப் பெண்ணைக் கற்ப்பழித்து கத்தியால் சொல்லக்கூடாத இடத்தில் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் சாகடித்து நடு ரோட்டில் வீசிச்சென்றனர்.
இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்
மக்கள் அமைப்பு, பெண்கள் அமைப்பு உட்பட 34 அமைப்புகள் நியாயம் கேட்டுப் போராடியது.
போராட்டத்தின் உச்சக்கட்டமாக 12 தாய்மார்கள் அசாம் ரைஃபிள்ஸ் தலைமையகம் முன்பு தங்கள் ஆடைகளைக் களைத்து நிர்வாணமாக நின்று ”இந்திய ராணுவமே: எங்களை பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை தாங்கி அவர்கள் நடத்திய போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது
உலக மனித உரிமை ஆனையத்தை திரும்பிப் பார்க்க வைத்தது
ஆனால் இதை அமைதியின் சின்னமான ‘நம்’ இந்தியா ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
எந்த ஊடகமும் இதை மக்களுக்கு எடுத்துச் செல்லவில்லை
வெட்கக்கேடு
இது வெறும் செய்தி அல்ல
60 வருடப் போராட்டம்
அரை நூற்றாண்டின் வலி
சுதந்திர இந்தியாவின் கருப்புப் பக்கங்கள்
அதைக் கிழித்தெரியப் போராடும் இரோம் ஷர்மிளா
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ள 14 வருடங்களாக சிறையில் உண்ணாமல் இருக்கிறார்
ஆனால் இதற்கெல்லாம் இது வரை இந்திய அரசிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை
எந்த ஒரு புரட்சியாளரும் பிறப்பதில்லை
இப்படிப்பட்ட சமுதாயம் தான் அவர்களை உருவாக்குகிறது
21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உருவாக்கியிருக்கும் புரட்சியாளர் இந்த இரோம் ஷர்மிளா
இந்த வலி புரிந்தவர்கள் பகிருங்கள்
புரியாதவர்கள் திரும்பவும் படியுங்கள்
நாம் என்ன பேசுகிறோம் என்பதை விட, எவ்வளவு பேர் அதைப் பற்றி பேசுகிறோம் என்பதே முக்கியம்
பேசுவோம் சத்தமாக
கேட்க வேண்டியவர்களுக்குக் கேட்கும்வரை
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”- சே
இதற்கு சேகுவேரா வர தேவையில்லை
இதைக்கண்டு கொதித்தால் நீயும் புரட்ச்சியாளனே!!!
பிரபு மித்ரன்
Ref:
http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila
https://www.facebook.com/pages/Irom-Chanu-Sharmila/111014022283305#
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”- சே
இதற்கு சேகுவேரா வர தேவையில்லை
இதைக்கண்டு கொதித்தால் நீயும் புரட்ச்சியாளனே!!!
பிரபு மித்ரன்
Ref:
http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila
https://www.facebook.com/pages/Irom-Chanu-Sharmila/111014022283305#
No comments:
Post a Comment