பேய்களே!!!
இங்கு பேய்களுக்கு பயப்படும் குழந்தைகளை விட
பெற்றோருக்கு பயப்படும் குழந்தைகள் தான் அதிகம்.
பிறகு நான் ஏன் உங்களை “பெற்றோர்களே” என்று அழைக்க
வேண்டும்.
சரி
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க
வேண்டும் என்று நினைக்கிறீர்கள்??
கல்வியா? இல்லை
பணமா? இல்லை
பாசமா? இல்லை
இவை எதுவுமே இந்த உலகில் வாழ உதவ போவதில்லை.
பிறகு என்ன??
தைரியம்
“நாங்கள் இருகிறோம் உனக்கு” என்ற தைரியம் தான்
கொடுக்க வேண்டும்.
இன்றும் எத்தனை குழந்தைகள் பரிட்சையில் தோற்றதற்க்கு
எல்லாம் உயிரை விடுகிறது.
இது பரிட்சையில் தோற்றதுக்கு இல்லை.
தன் அப்பா திட்டுவார்...தன் அம்மா திட்டுவாள்... என்ற
பயத்தில் தான்.
படிக்காத பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கும் படித்த
பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
படிக்காத பெற்றோரிடம் வளரும் குழந்தை தைரியமாக
வளர்கிரது.அதன் வாழ்கையை அதுவே முடிவு செய்கிறது. தனக்கு பிடித்ததை செய்ய அதற்க்கு
சுகந்திரம் கிடைக்கிறது.
ஆனால் படித்த பெற்றோரிடம் வளரும் குழந்தை பயத்துடனே
வளர்கிரது.
அது என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு போக
வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன விளையாட்டு விளையாட வேண்டும், யாருடன் பேச
வேண்டும், என்ன பேச வேண்டும் என்ற அனைத்தும் அதன் பெற்றோரே முடிவு செய்கிறார்கள்.
பேய்கள் மனிதர்களை பிடித்து ஆட்டுவதைப்போல் நீங்கள்
உங்கள் குழந்தைகளை பிடித்து ஆட்டுகிறீர்கள்.
உங்கள் பிள்ளைகளின் வாழ்கையையும் சேர்த்து நீங்களே
வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
இது எவ்வளவு பெரிய பாவம்.
இப்படி தன் வாழ்கையை வாழ முடியாமல் தவிப்பதற்க்கு
பதில் அந்த குழந்தை இல்லாமலே இருந்திருக்கலாம்.
கூண்டில் வைத்து வளர்த்தாலும் அவர்கள் வளர வளர
கூண்டின் அளவை பெரியது ஆக்குங்கள். இல்லை என்றால் ஒரு நாள் கூண்டை உடைத்துக்கொண்டு
தப்பி தடம் மாறி போய்விடும்.
நீங்கள் உங்கள் ஆசைகளையும், பயத்தையும் அவர்களின்
மேல் திணிக்கிறீர்கள்.
இதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. உங்கள்
குழந்தைகளுக்கு தான்.
மன அழுத்தம்,
பயம்,
விரக்தி,
தன்னம்பிக்கையின்மை.
இவை எல்லாம் உயிர் கொல்லி நோய்களை விட ஆபத்தானது.
4-இல் மூன்று குழந்தைகள் மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இதில் உங்கள் குழந்தையும் இருக்கலாம். ஜாக்கிரதை
உங்கள் பிள்ளை எதிலும் தோற்க்கவே கூடாது என்று
நினைப்பது தவறு.
அவர்களுக்கு தோற்க்க கற்றுக்கொடுங்கள்.
இல்லை என்றால் இந்த வாழ்க்கை அவர்களுக்கு
கற்றுக்கொடுக்கும்.
அப்பொழுது இடிந்து விடுவார்கள்.
தீ-சுடும் என்று கூறி தொடவே விடவில்லை என்றால்
அவர்களுக்கு சூடு என்றால் என்ன என்றே தெரியாது. என்றாவது ஒரு நாள் அதில்
கண்டிப்பாக விழுந்து கருகிவிடுவார்கள்.
தப்பு செய்யும் பொழுது அடித்து தான் திருத்த வேண்டும்
என்பதல்ல.
குழந்தைகளை அடிப்பதற்க்கு பழமொழி வேறு.
“அடியாத மாடு பணியாது”
உங்கள் குழந்தைகள் ஒன்னும் மாடு கிடையாது, அடித்துப்
பணிய வைக்க!
பேசுங்கள். நிறைய பேசுங்கள்.
அவர்களின் உலகத்துக்குள் போய் பேசுங்கள்.
அவர்களை புரிந்துகொள்ள முயலுங்கள்
நம் பிள்ளைகள் வாழும் இடம் சொர்கமாக இருக்க வேண்டுமா,
இல்லை நரகமாக இருக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான்.
சுகந்திரம் இல்லாமல் வாழ்வது நரகத்தை விட
கொடுமையானது.
அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்
ஒன்று நம்பிக்கை
தன் பிள்ளை எது செய்தாலும் சரியாக தான் இருக்கும்
என்ற நம்பிக்கை.
இரண்டாவது மரியாதை
தன் பிள்ளைகளின் கருத்திற்க்கு கொடுக்கும் மரியாதை
அதை மட்டும் கொடுங்கள் போதும்.
எப்பொழுதும் பயப்படுத்தி வளர்க்காதீர்கள்
உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மேல் இருப்பது பயமா?
பாசமா? என்று தெரிந்து கொள்ளுங்கள்
அது பயமாக இருந்தால் சீக்கிரம் போய்விடும் பிறகு
நீங்கள் அவர்களுக்கு பயப்படும் நிலைமை கண்டிப்பாக வரும்.
குழந்தை பேய்க்கு பயப்படலாம்.
பெற்றோர்க்கு அல்ல.
எந்த பள்ளியும் குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம் சொல்லி
தருவதில்லை.
அந்த பொறுப்பு பெற்றோருக்கே.
வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுங்கள்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை..
அத தவிறவும் நெரயா இருக்கு சார்.
கத்துகுடுங்க..
நீங்க உங்க குழந்தைய மட்டும் உருவாக்கல
அடுத்த தலைமுறையை உருவாக்குறீங்க.
கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்க சார்.
நீங்கள் உங்கள் குழந்தைக்கு பேயாக இருக்க
வேண்டுமா..இல்லை பெற்றோராக இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பம்.
உங்கள் குழந்தையின் எதிர்காலம் சொர்கமாக இருக்க எனது
வாழ்த்துகள்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment