Sunday, 5 October 2014

டாஸ்மாக்- சில கேள்விகள்


“குடி குடியை கெடுக்கும்”
இந்த வரி எல்லா மது பானங்களிலும் எழுதியிருக்கும்..
மதுக்கடைகளிலும் எழுதியிருக்கும்...
குடிக்கும் காட்சி வரும் சினிமாக்களிலும் இந்த வரி காட்டப்படும்...
இந்த வரியை எழுதுபவர்களும் குடிக்காதவர்கள் கிடையாது
இதை படிப்பவர்களும் குடிக்காமல் விட்டுவிடுவது கிடையாது
நாம் இதில் கேட்க வேண்டியது ஒன்று தான்
.
அப்பறம் ஏண்டா எழுதி வச்சுருக்கீங்க??
வீட்டிலுள்ளவர்கள்
இந்த சமுதாயம்
இதெல்லாம் சொல்லி கேட்காதவர்கள் இந்த எழுத்துகளில் கேட்டுவிட போகிறோமா?
ஐயா சத்யமா சொல்றேன்ங்க நான் குடிக்கறவங்கல தப்பா சொல்ல இதை எழுதல
இப்படி தேவையே இல்லாம எழுதி வைக்கிறவங்கல தான் தப்பு சொல்றேன்.
இப்படி எழுதி வச்சுட்டா திருந்திடுவாங்களா?
அப்டினா நாம எல்லாரு வீட்டு முன்னாடியும் “திருடுவது பாவம்” என்று போர்டு மாட்டி விட்டு வீட்டை பூட்டாமல் விட்டு விடலாமே!
எந்த திருடனும் தான் செய்வது பாவம் என்று தெரிந்து தான் செய்கிறான்.
இப்படி எழுதி வைத்தால் திருடாமலா போய்விட போகிறான்?
போங்கடாங்க...
அவ்வளோ அக்கரை இருந்தா அந்த கருமத்தை தயாரிக்காமலே இருக்கலாமே!! அதை தயாரிச்சு வித்து எங்கள கெடுக்கறதும் இல்லாம இப்படி எல்லாம் எழுதி வச்சு உங்கள நல்லவங்களா காட்டிக்கிறீங்களா?? பொறம்போக்குகளா
குடிக்கிறவங்க கெட்டவங்க.... விக்குற நீங்க மட்டும் நல்லவங்களாடா??

“மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு”
மது நாட்டுக்கு கேடுனு சொல்றீங்க
அப்போ அதை விக்குறது தேச துரோகம் இல்லையா?



“குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே”
இந்த வரியும் எல்லா இடத்திலும் பார்க்கலாம்
அது சரி தான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது தப்பு தான்
ஆனால் அதற்கு காரணம் யார்?
டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் பார்க்கிங் வைத்தது தவறு இல்லையா?
அதை தடை செய்தாலே இந்த பிரச்சனை 80 சதவீதம் குறைந்து விடுமே!!
அதை செய்ய துப்பு இல்லை. இப்படி பார்க்கும் இடத்தில் எல்லாம் எழுதி வைப்பதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
அப்படி குடிச்சுட்டு வண்டி ஓட்டி யாரும் சாக கூடாதுனு நினைச்சீங்கன்னா எல்லா டாஸ்மாக் முன்னாடியும் டாக்சி வச்சு அவங்கள வீட்டுல கொண்டு போய் ஃப்ரீயா இறக்கி விடுங்க.. இல்லைனா வீட்டுக்கு ஃப்ரீ ஹோம் டெலிவரி பண்ணுங்க அப்படியும் இல்லைனா பார்கிங்க தூக்கிடுங்க அவங்களே நடந்து வந்து குடிச்சுக்குவாங்க. அத விட்டுட்டு வெட்டியா எழுதி வைக்குறதுல என்ன ஆக போகுது?

இப்படி செய்யுறத எல்லாம் செஞ்சுட்டு குடிக்குறவன தப்பு சொல்றதுல என்னங்க நியாயம்?
குடிக்குறது தப்புனா குடிக்க தூண்டுறதும் தப்பு தான்
தனி ஒருவன் விற்றால் கள்ள சாராயம்...அதுவே அரசு விற்றால் அது என்ன பன்னீர் சோடாவா??
அதுவும் சாராயம் தான்.
யாரு செஞ்சாலும் தப்பு தப்பு தானே!!
குடிப்பவர்களை திருத்துவதை விட அதை விற்பனை செய்பவர்களை அழிப்பதே புத்திசாலித்தனம்.
இப்படி தெருவுக்கு தெரு குடிக்காதேனு வெட்டியா எழுதி வைக்குறத விட்டுட்டு வேற உருப்படியான வழிய தேடுங்கடா.

அப்புறம் ஒரு சந்தேகம்.
அத ஏண்டா “டாஸ்மாக்”னு இங்லீஸ்ல பேரு வச்சுருக்கீங்க?
குடிக்குறவனுக்கு எல்லாம் தமிழ் பற்று இல்லையா??
யாராவது கேளுங்கப்பா


ய.கி.பிரபு மித்ரன்

Thursday, 2 October 2014

ஒரு செடி...ஒரு கொடி....ஒரு காதல்...


ஒரு அடர்ந்த காட்டுல ஒரு கொடி ஒன்னு வளந்துச்சா

அது உயர போகனும்ணு ஆச பட்டுச்சாமா
ஆனா அது படர்ரதுக்கு யாருமே இடம் தரல
அதனால தரையோட தரையா அதுவும் இருந்துச்சு

அப்போ ஒரு நாள் அந்த இடத்துல புதுசா முளச்சிருந்த ஒரு குட்டி ரோஜா செடி அத பாத்து பரிதாப பட்டு என் மேல படர்ந்துக்கோனு அது கிட்ட சொல்லுச்சாமா.

அத கேட்டு சந்தோஷ பட்ட அந்த கொடி தன்னோட லட்சியம் நிறைவேர போகுதுங்கற சந்தோஷத்துல அது மேல மெதுவா படர ஆரம்புச்சுது.

அது கொஞ்சம் கொஞ்சமா அந்த ரோஜா செடியோட தண்ட சுத்தி சுத்தி மேல ஏறுச்சு. கொஞ்ச நாள் இப்பிடியே போச்சு. ரெண்டு செடியும் சந்தோஷமா வளந்துச்சுங்க.
கொடி வளந்து வளந்து ரோஜா செடியோட உயரத்தை எட்டிடுச்சு.

நட்பு காதல் ஆய்டுச்சு. இனி வாழ்கையே ரோஜா கூட தான்னு கொடி முடிவு பன்னிடுச்சு.
ரோஜாவுக்கு தான் தான் பாதுகாப்புனு அந்த கொடி நினைக்க ஆரம்பிச்சுது. அதனால அத நல்லா இருக்கமா சுத்தி படர ஆரம்பிச்சுது. வெளிய அந்த செடியே தெரியாத அளவுக்கு இருக்கமா படர்ந்தது. ரோஜா செடியால மூச்சே விட முடியாத அளவுக்கு அத அந்த கொடி மறச்சுடுச்சு.

என்ன கஷ்டம் வந்தாலும் ரோஜா செடிக்கு கொடி மேல பாசம் மட்டும் குறையவே இல்ல.

இப்படி இருக்கி அனைச்சு படரதால ரோஜா செடியோட முள்ளு கொடிய குத்துசு. ஆனாலும் கொடி அத காதலுக்காக செய்யற தியாகம்னு நினைச்சுச்சு
இப்படி ரெண்டும் கஷ்டத்த தங்களுக்குள்ள அடைச்சு வச்சுட்டு அவங்கள சந்தோஷமா காட்டிக்கிட்டாங்க.

கொடியோட லட்சியம் உயரமான இடத்துக்கு போகனும்ங்ரது. அதனால ரோஜா செடி பக்கத்துல வளந்திருந்த பெரிய ஆல மரத்துல படரனும்னு ஆசை பட்டுச்சு.
அத ரோஜா கிட்ட சொன்னதும் ரோஜா அழுக ஆரம்பிச்சுடுச்சு. அத விட்டுட்டு கொடி போகுதுனு நினைச்சு. ஆனா கொடிக்கு ரோஜா மேல இருந்த காதல விட அதோட லட்சியம் தான் முக்கியம்னு சொல்லுச்சு.

அத ரோஜா புரிஞ்சுக்கல.

தினம் தினம் சண்டை வளர்ந்துட்டே போச்சு.

ரெண்டு பேரும் ஒருத்தருக்கு மத்தவங்க செஞ்ச தியாகத்த பட்டியலிட ஆரம்பிச்சாங்க.
தான் செஞ்ச தியாகம் தான் பெருசுனு பேச ஆரம்பிச்சாங்க.
ஒரு நாள் இனி சேந்து வாழ முடியாதுனு முடிவு பன்னிட்டாங்க.

ஆனா ரொம்ப இருக்கமா படர்ந்த கொடியால அந்த ரோஜா செடிய விட்டு இறங்க முடியல. பக்கத்துல இருக்குற ஆல மரத்துக்கு போகனும்னா ரோஜா செடி வலைந்து குடுக்காம முடியாது.

என்ன பன்னலாம்னு யோசிச்சுட்டு இருந்த அப்போ ஒரு நாள் அந்த சோகம் நடந்துச்சு.
கொடி இருக்கமா வளந்ததால ரொம்ப நாள் சூரிய வெளிச்சம் படாம அந்த ரோஜா செடி செத்து போய்டுச்சு.

கொடி மறுபடியும் நிலத்துக்கே வந்திடுச்சு.
தன்னால தான் ரோஜாக்கு இந்த நிலைமைனு நினைச்சு அழுது அழுது அதுவும் ஒரு நாள் செத்துடுச்சு.
அதோட சேந்து அதோட லட்சியமும் செத்து போய்டுச்சு :(

எவ்வளவு நெருக்கமான உறவா இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி வேணும்.

உறவு என்பது மூச்சு விட முடியாத அளவுக்கு இருக்கமாக இருந்தால் மூச்சுவிட முடியாமல் ஒரு நாள் அந்த உறவு செத்துவிடும்.


-பிரபு மித்ரன்

Related Articles