ஒரு அடர்ந்த காட்டுல ஒரு கொடி ஒன்னு வளந்துச்சா
அது உயர போகனும்ணு ஆச பட்டுச்சாமா
ஆனா அது படர்ரதுக்கு யாருமே இடம் தரல
அதனால தரையோட தரையா அதுவும் இருந்துச்சு
அப்போ ஒரு நாள் அந்த இடத்துல புதுசா முளச்சிருந்த ஒரு குட்டி ரோஜா
செடி அத பாத்து பரிதாப பட்டு என் மேல படர்ந்துக்கோனு அது கிட்ட சொல்லுச்சாமா.
அத கேட்டு சந்தோஷ பட்ட அந்த கொடி தன்னோட லட்சியம் நிறைவேர போகுதுங்கற
சந்தோஷத்துல அது மேல மெதுவா படர ஆரம்புச்சுது.
அது கொஞ்சம் கொஞ்சமா அந்த ரோஜா செடியோட தண்ட சுத்தி சுத்தி மேல
ஏறுச்சு. கொஞ்ச நாள் இப்பிடியே போச்சு. ரெண்டு செடியும் சந்தோஷமா வளந்துச்சுங்க.
கொடி வளந்து வளந்து ரோஜா செடியோட உயரத்தை எட்டிடுச்சு.
நட்பு காதல் ஆய்டுச்சு. இனி வாழ்கையே ரோஜா கூட தான்னு கொடி முடிவு
பன்னிடுச்சு.
ரோஜாவுக்கு தான் தான் பாதுகாப்புனு அந்த கொடி நினைக்க
ஆரம்பிச்சுது. அதனால அத நல்லா இருக்கமா சுத்தி படர ஆரம்பிச்சுது. வெளிய அந்த
செடியே தெரியாத அளவுக்கு இருக்கமா படர்ந்தது. ரோஜா செடியால மூச்சே விட முடியாத
அளவுக்கு அத அந்த கொடி மறச்சுடுச்சு.
என்ன கஷ்டம் வந்தாலும் ரோஜா செடிக்கு கொடி மேல பாசம் மட்டும் குறையவே
இல்ல.
இப்படி இருக்கி அனைச்சு படரதால ரோஜா செடியோட முள்ளு கொடிய குத்துசு.
ஆனாலும் கொடி அத காதலுக்காக செய்யற தியாகம்னு நினைச்சுச்சு
இப்படி ரெண்டும் கஷ்டத்த தங்களுக்குள்ள அடைச்சு வச்சுட்டு அவங்கள
சந்தோஷமா காட்டிக்கிட்டாங்க.
கொடியோட லட்சியம் உயரமான இடத்துக்கு போகனும்ங்ரது. அதனால ரோஜா செடி
பக்கத்துல வளந்திருந்த பெரிய ஆல மரத்துல படரனும்னு ஆசை பட்டுச்சு.
அத ரோஜா கிட்ட சொன்னதும் ரோஜா அழுக ஆரம்பிச்சுடுச்சு. அத விட்டுட்டு
கொடி போகுதுனு நினைச்சு. ஆனா கொடிக்கு ரோஜா மேல இருந்த காதல விட அதோட லட்சியம்
தான் முக்கியம்னு சொல்லுச்சு.
அத ரோஜா புரிஞ்சுக்கல.
தினம் தினம் சண்டை வளர்ந்துட்டே போச்சு.
ரெண்டு பேரும் ஒருத்தருக்கு மத்தவங்க செஞ்ச தியாகத்த பட்டியலிட
ஆரம்பிச்சாங்க.
தான் செஞ்ச தியாகம் தான் பெருசுனு பேச ஆரம்பிச்சாங்க.
ஒரு நாள் இனி சேந்து வாழ முடியாதுனு முடிவு பன்னிட்டாங்க.
ஆனா ரொம்ப இருக்கமா படர்ந்த கொடியால அந்த ரோஜா செடிய விட்டு இறங்க
முடியல. பக்கத்துல இருக்குற ஆல மரத்துக்கு போகனும்னா ரோஜா செடி வலைந்து குடுக்காம
முடியாது.
என்ன பன்னலாம்னு யோசிச்சுட்டு இருந்த அப்போ ஒரு நாள் அந்த சோகம்
நடந்துச்சு.
கொடி இருக்கமா வளந்ததால ரொம்ப நாள் சூரிய வெளிச்சம் படாம அந்த ரோஜா
செடி செத்து போய்டுச்சு.
கொடி மறுபடியும் நிலத்துக்கே வந்திடுச்சு.
தன்னால தான் ரோஜாக்கு இந்த நிலைமைனு நினைச்சு அழுது அழுது அதுவும்
ஒரு நாள் செத்துடுச்சு.
அதோட சேந்து அதோட லட்சியமும் செத்து போய்டுச்சு :(
எவ்வளவு நெருக்கமான உறவா இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி வேணும்.
எவ்வளவு நெருக்கமான உறவா இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி வேணும்.
உறவு என்பது மூச்சு விட முடியாத அளவுக்கு இருக்கமாக இருந்தால்
மூச்சுவிட முடியாமல் ஒரு நாள் அந்த உறவு செத்துவிடும்.
-பிரபு மித்ரன்
:-O
ReplyDelete