நம்மை
நோக்கி மிக பெரிய பேரழிவு வந்து கொண்டிருக்கிறது
இத்தனை
ஆயிரம் வருடங்கள் மனிதர்கள் வாழ்கிறார்களென்றால் அதற்கு காரணம் அவர்களிடமிருந்த
மனிதம் வாழ்ந்ததால் தான்.
மனிதமே
மனிதனாகவும்
மனிதன்
மனிதத்துடனும்
இரண்டற கலந்த இந்த மனிதர்கள் மாறிகொண்டிருக்கிறார்கள்.
மிருகத்துக்கும்
மனிதனுக்கும் என்ன வித்யாசமென நினைக்கிறீர்கள்?
அவை
பிறந்ததிலிருந்தே பிறந்தமேனியாக இருக்கிறது
மற்ற
மிருகத்திற்கு முன்னால் அப்படி இருப்பது அதற்கு தப்பாக தெரிவதில்லை.
அதற்கு
பசி வந்தால் அதன் இனத்தையே வேட்டையாட தயங்குவதில்லை
அதுவே
காமம் வந்தால் அடுத்த மிருகத்தின் துணை என்றும் பாராமல் அதன் இச்சையை
தீர்த்துக்கொள்ளும்.
அவற்றுக்கு
எந்த தர்மமும் கிடையாது.. எந்த நியாயம்...கலாச்சாரம்... ஒழுக்கம் இப்படி எதுவும்
கிடையாது.
பல்துலக்காமல்
குளிக்காமல்
சேறு
சகதி சாக்கடை எல்லாம் புரண்டெழுந்து
நர
மாமிசமுண்டு
தான்
பெற்றதுக்கும் தன்னை பெற்றதுக்கும் வித்யாசம் தெரியாமல் அத்தனையுடனும் கூடி
ஒரு
அழுகிய நாற்றம் பிடித்த வாழ்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மிருகங்கள்.
அப்படிபட்ட
மிருகத்திலிருந்து ஒரு காலத்தில் மனிதன் எவ்வளவோ மேலானவனாக இருந்தான்.
இப்பொழுது
வித்யாசங்கள் மறைந்துகொண்டே போகிறது.
தினமும்
நாளிதழை திறந்தால் வரும் செய்திகளே அதற்கு ஆதாரம்.
மனிதம்
கண்முன்னால் அழிவதை பார்க்க முடியவில்லை
மனிதன்
அழிய போகிறான்.
செய்தி
1:
“கோவையில்
பயங்கரம்- காதலனுடன் சென்ற பெண்னை மிரட்டி காதலன் கண்முன்னே பலாத்காரம்.
வாட்ஸப்பில் வீடியோ”
முதல்
முதலாக ஒரு பெண்ணை பார்த்து அவள் சிரிப்பதை பேசுவதை தூரத்திலிருந்தே ரசித்து
கொஞ்சம்
கொஞ்சமாக அவளிடம் நெருங்கி
ஒரு
வார்த்தை பேசவே திக்கி திணறி
எப்படியோ
அவளிடம் நெருங்கி காதலை சொல்லி
ஒவ்வொரு
முறை அவளுடன் இருக்கும் பொழுதும் அவள் விரல் தொட நினைத்து நினைத்து பின்வாங்கி
ஒரு நாள்
அதையும் செய்து அவள் கை பிடித்து நடக்கவே இந்த வாழ்கை போதுமென நினைக்கும் மிக
மென்மையானது காதல்.
அப்படி
தன் வாழ்நாள் முழுவதும் தன் மனைவியாக சாகும் வரை வர போகிறாள் என
நினைத்துகொண்டிருப்பவளை
தன் கண்
முன்னால்
அவளை
சிதைக்கும் பொழுது
அவள்
அழுது அந்த நாய்களிடம் கெஞ்சி
தன்னை
காப்பாற்ற முடியாமல் காதலன் அழுவதையும் பார்த்து புழுவாய் துடித்து
தன்னை
தின்று கொண்டிருக்கும் அந்த வெறி நாய்களிடம் விட்டுவிட சொல்லி யாசிக்கிறாளே
இதெல்லாம்
அந்த கொஞ்ச நேர அவர்களின் இச்சைக்குதானே
அவர்கள்
வெளியே சொல்லமாட்டார்கள் என்ற தைரியமா?
அவர்கள்
வெளியே சொல்லவில்லை என்றால் என்ன!?
அப்படி
ஒன்றை தான் சாகும் வரை மறந்துவிட முடியுமா?
கொலை கூட
அந்த ஒரு நொடி வலி தான்..
கற்பழிப்பு
என்பது மரண தண்டனையை விட கொடியது
கண்ணாடி
பார்க்கும் பொழுதும்
உடை
மாற்றும் பொழுதும்
தன்னுடையவன்
உரிமையாக தன்னை தொடும் பொழுதுமென அந்த ஜீவன் ஒவ்வொரு நொடியும் கூனி குறுகி ஒரு
மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும்.
காதலன்
என்று ஏன் பாக்கனும்
ஒரு
கனவன் கண் முன் அவர் மனைவியை யாருனே தெரியாத நாலு பேர் பலாத்காரம் செய்தால்?
அந்த வலி
சாதாரணமானதா?
அதை
வெறும் செய்தியாக தானே நாம் பார்க்கிறோம்.
நம்மை
அந்த இடத்தில் பொருத்தி பார்க்க ஏன் நினைப்பதில்லை!?
நமக்கு
நடக்காது என்ற மிதப்பா!?
நாம்
இருக்கும் இடத்திலிருந்து முப்பது கிலோ மீட்டருக்கு அப்பால் நடக்கும் இந்த
கொடூரம் நம்ம வீட்டை நோக்கி வர எவ்வளவு நாட்களாகிவிடும்?
தான்
பெற்றதுக்கும் தன்னை பெற்றதுக்கும் வித்யாசம் தெரியாமல் அத்தனையுடனும் கூடும்
மிருகத்துக்கும்...
காமம் வந்தால்
அடுத்த மிருகத்தின் துணை என்றும் பாராமல் அதன் இச்சையை தீர்த்துகொள்ளும் மிருகத்துக்கும்..
இந்த
பாழாய்போன மனிதருக்கும் என்ன வித்யாசம்?
அந்த
மிருகங்களுக்கு கூட தன்னை பாதுகாத்துகொள்ள தெரியும்.
பாவம்
மனிதனுக்குதான் தன்னையும் பாதுகாத்துகொள்ள தெய்யாது.. தன்னை நம்பியவர்களையும்
பாதுகாக்க முடியாது.
மனிதன் கையாலாகதவன்.
இங்கு
இருப்பவர் எத்தனை பேரால் இப்படி பட்ட சமயத்தில் பாதுகாத்து கொள்ள தெரியும்.??
என்னைகாவது யோசித்திருக்கிறோமா?
பாவபட்ட
பிறவியடா மனிதபிறவி!
யோசிக்கவில்லையென்றால்
இனிமேல்
யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மனித இனம்
இல்லையென்றால்
நாமும் வேட்டையாட படுவோம்.
மனிதன்
அழிய போகிறான்.
செய்தி
2:
“கோவை-வகுப்பறையில்
செல்போனில் ஆபாசபடம் பார்த 7 ஆம் வகுப்பு மாணவிகள் சஸ்பெண்ட்”
எனக்கெல்லாம்
இதை பற்றி தெரிய பத்தாவதுக்கு மேலானது.
எனக்கு
முன்னால் தலைமுறைக்கு கல்லூரியில் தான் தெரிந்திருக்கும்
அதற்கும்
முன்னால் இன்னும் வயதாகியிருக்கும்.
மிருகங்கள்
பிறந்த மேனியுடனே தானே இருக்கிறது.
மனிதனும்
அடுத்த மனிதனை துணியில்லாமல் பார்க்க தானே ஏங்குகிறான்.
இப்பொழுது
உள்ளூரிலிருந்து வெளிநாட்டு மனிதர்கள் வரை அத்தனை பேரையும் அவிழ்த்து போட
வைத்துவிட்டது இந்த செல்ஃபோன் சனியன்.
அப்படி
பட்ட படங்கள் பார்க்க ஊர் ஒதுக்குபுறமாய் இருக்கிற சாமி தியேட்டருக்கு ஒளிந்து
ஒளிந்து ஓடிய கூட்டம்
அதன்
வாரிசுகளுக்கு சாமி தியேட்டரை கையிலேயே வைத்துகொள்ள செய்துவிட்டது.. செல்போனாக
மிருகங்களை
நாம் மிக வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது
தான் 5% மனிதர்களின் நிர்வாண கோலம் வெளியே வந்துள்ளது.
கூடிய
சீக்கிரம் ஆண் பெண் பேதமின்றி நம்முடைய குளியலறை காட்சியையும் சேர்த்து மிச்ச 95% மனிதர்களின் படமும் வாட்ஸ்ஸபில் கோலாகலமாக
வெளியாகிவிடும்.
அதன்
பிறகு இந்த துணிக்கு வேலையிருக்காது.
அனைவரும்
பார்த்துவிட்டபிறகு மறைக்க இந்த உடம்பில் என்ன இருக்கும்??
கண்ணுக்கு
தெரியாத கேமராக்களால் நம்மை துகிழுரிக்கும் காலம் மிக அருகில்.
தயாராகிகொள்ளுங்கள்.
தயாராகிகொள்ளுங்கள்.
மனிதன்
அழிய போகிறான்.
செய்தி
3:
“வியாபம்
ஊழலில் சம்பந்தபட்ட சாட்சியங்கள் 49 பேர் மர்ம மரணம்”
அதெப்படி
49 சாவில் ஒன்றுக்கு கூடவா துப்பு கிடைக்கவில்லை?
கேவலம்
பணம்.
அதை
காப்பாற்றிகொள்ள 49 பேரை கொன்றிருக்கிறார்கள்.
49
குடும்பங்களின் வேதனை.
பசிக்காக
தன் இனத்தையே வேட்டையாட துனியும் மிருகத்துக்கும்
‘கேவலம்’
பணத்துக்காக இப்படி மனித வேட்டையாடும் இவர்களுக்கும் என்ன வித்யாசமோ!!?
மனிதன்
அழிய போகிறான்.
இங்கு
வேட்டையாடுவதும் மனிதன் தான்.
வேட்டையாடபடபோவதும்
மனிதன் தான்.
இப்பொழுதுள்ள
மனிதனுக்கு எந்த கலாச்சாரமும் கிடையாது
நியாயம்...தர்மம்...நல்லது...கெட்டது..ஒழுக்கம்...இப்படி
எதுவும் கிடையாது.
பின்ன
என்ன மனிதன்??
மனிதம்
இல்லாத இந்த மனித உடம்பு அர்த்தமற்றது
மனிதத்தை
மீட்டெடுக்க வேண்டும்.
அது
தனிமனிதனால் மட்டும் முடியாது.
ஊடகங்களால் தான் முடியும்.
1940
களில் எதோ ஒரு கிராமத்து வயலில் சேத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களிடையே தேச
பக்தியை ஊட்ட முடியுமென்றால்
1960
களில் படிக்காத பாமரனையும் தமிழ் மொழிக்காக புரட்சி செய்ய வைக்க ஊடகத்தால்
முடியுமென்றால்
1980
களில் இலங்கை தமிழருக்காக பள்ளி மாணவர்களை எல்லாம் போராட வைக்கமுடியுமென்றால்
இப்பொழுது
அழிந்து கொண்டிருக்கும் மனிதத்தையும் காப்பாற்ற ஊடகத்தால் தான் முடியும்.
ஊடகம்
மாற வேண்டும்.
மனிதனை
மாற்ற வேண்டும்.
இப்பொழுது
அழியும் நிலையிலுள்ள மனிதனுக்கு அழுக்கு படிந்த உண்மையான செய்தி போய் சேர்வதை விட
நல்ல
எண்ணங்களை விதைக்கும் செய்தி தான் போய் சேர வேண்டும்.
அது தான்
அவனை செம்மைபடுத்தும்.
செத்துகொண்டிருப்பவருக்கு
வாய்கரிசி போடுவதைவிட வைத்தியம் பார்ப்பதுதான் சிறந்தது.
மனிதன்
அழிந்துவிடகூடாது.
பிரபு
மித்ரன்