Sunday, 5 July 2015

அதுக்கு தானே அவங்க!! -அதிகார ஆடிமைகள்

அதிகாரங்கள் அழிக்கப்பட வேண்டியவை
அவை அதிகாரவர்கமென நாம் நினைப்பவர்கள் மட்டும் செய்வதில்லை
நம்மை போன்ற சாமானியர்களும் பல சமயங்களில் அதிகாரம் செய்கிறோம்.



எங்கள் அலுவலகத்தில் கேண்டீன் உள்ளது.
அங்கு இருக்கும் டேபிள்களை சுத்தம் செய்வதற்கென்றே ஆள் வைத்துள்ளார்கள்.
அவர்களில் முக்கால்வாசி வயதான பெண்கள்.
நான் எப்பொழுது அங்கு சென்றாலும் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட டேபிளில் அமர்ந்து கொள்வேன்
பல சமயங்களில் அதை நான் கவனித்ததுகூட கிடையாது

போன வாரம் என்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் அங்கு சென்றிருந்தேன்.
அங்கு ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட எத்தனையோ இடங்கள் இருந்தது.
என்னுடன் வந்தவர் எது துடைக்கபடாமல் இருக்கிறதோ அங்கு அழைத்துச் சென்றார்
அந்த டேபிளுக்கு மேல் தான் ஃபேன் உள்ளதாம்.
யாராவது உட்காராமல் நின்றிருந்தால் அந்த துடைக்கும் அம்மாக்கள் யாரவது அங்கு வந்து சுத்தம் செய்வார்கள்.
இவரும் அதை தான் செய்தார்.
ஓர் அம்மா வந்தார்.
அவர் துடைத்துவிட்டு சென்ற பிறகு என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏற்கனவே சுத்தம் பன்னுன டேபிள்ல உட்காந்திருந்தா அந்த அம்மாக்கு இந்த வேலை மிச்சம்ல?” என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் இது தான்
“அதுக்கு தானே அவங்கள வேலைக்கு வச்சுருக்காங்க”
.....................................................................
அவர் சொன்ன இந்த ஒரு பதில் இத்தனை நாள் அவர் மேல் எனக்கிருந்த மரியாதையை உடைந்து சுக்குநூறாகி போனது.
இவ்வளவு திமிரான பதிலை நான் எதிர்பார்கவில்லை என்பதாலா!!

இதற்கு நான் கோபப்படவில்லையெனில் நானும் கீழ்தரமான அந்த கருத்தை ஆமோதிப்பதாக தானே அர்த்தம்.

கோபம் வந்தது.
பேசினேன்.
அவர் சொன்னது தவறு என்று புரியவைக்க என்னென்னமோ சொல்லிப்பார்தேன்.
என் மரியாதை போகும் என்று தெரிந்தும் தான் பேசினேன்.
கடைசிவரை அவர் சொன்னது சரி என்றே வாதம் பேசினார்.
நான் அவரிடம் இதை கேட்டிருக்க கூடாதோ?? ஏன் கேட்டேன்??


இவர் ஒருவர் சொன்னதனால் என்ன என யோசிக்க தோன்றும்.
நாளை இவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டியவர்களிடமும் இதே மனநிலையுடன் தான் அனுகுவார்
இந்த மனோபாவம் மிகபெரிய பாவம்.
இப்படி ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால் இரக்கம் என்பதே துளியும் இல்லாத சமுதாயமாகிவிடும்.
பிச்சை எடுப்பது அவன் வேலை எடுக்கட்டும் என நினைத்தால் ஈகை இருக்காது
அனாதையாக இருப்பது அவர்களின் தலை எழுத்து என நினைத்தால் குப்பைதொட்டிகளில் குழந்தைகள் குவியும்
நம்மை தவிர மற்றவர்களின் பிரச்சனையை எதோ முதலாளி மனோபாவத்தில் தானே பார்கிறோம்,
நான் அவரிடம் இதை கேட்டிருக்க கூடாதோ?? ஏன் கேட்டேன்??


மேலே சொன்ன இதே மனிதர் அவரின் மேலதிகாரி அவரிடம் எதோ வேலை சொன்னதுக்கு எவ்வளவு கோபப்பட்டார் என பக்கத்திலிருந்து பார்திருக்கிறேன்
அப்பொழுதும் இப்படி நினைத்திருக்கலாமே!!
“அவர் சொல்வதை கேட்க தானே என்னை வேலைக்கு வச்சிருக்காங்க” என்று

நமக்கு நடந்தால் அராஜகம்!!
அடுத்தவர்களென்றால் அலட்சியமா!!??

அடுத்த நாளும்  இதை பற்றி பேசினேன்.
ஆனால் என்ன செய்ய!
தப்பை ஒத்துகொள்ள கூட ஒரு தைரியம் வேண்டுமல்லவா!!

நமக்கு கீழ் உள்ளவர்கள் என்றாலே ஒரு இளக்காரம் தானா!!

காரில் போறவனுக்கு பைக்காரன் குறுக்கில் வந்தால் தப்பு
பைக்காரனுக்கு ரோட்டை கடப்பவன் மேல் தப்பு

அவருக்கு புரியவைக்க நினைத்த எனக்கு ஒன்று புரிந்த்து
அடிமைகளே அடிமைகளை உருவாக்குகிறார்கள்.

எதற்கும் அடிமையாக தன்னை நினைக்காதவன் மற்றவர்களையும் அடிமைப்படுவதை விரும்ப மாட்டான்.

மற்ற நாடு தன்னை அடிமைப்படுத்திவிடும் என்ற பயமே அடுத்த நாட்டை அடிமையாக்க தூண்டுகிறது.
தன் மத உணர்வுக்கு அடிமையானவனே அடுத்த மதத்தவர்களை அடிமையாக்க நினைக்கிறான்
இப்படி எல்லாவற்றிலும் அடிமைகள் தான் அடிமைகளை படைக்கிறார்கள்.

நான் அவரிடம் இதை கேட்டிருக்க கூடாதோ?? ஏன் கேட்டேன்??

எனக்கென்ன என்று விட்டுவிட்டால் நானும் அடிமையாகிவிடுவேனே.
அதனால் தான் கேட்டேன்.



இது தனிப்பட்ட அந்த நபர் மீதுள்ள கோபமில்லை
அந்த அல்ப பதிலின் மேலுள்ள கோபம்.

அது அவர்களுடய வேலை தான்
இல்லை என்று சொல்லவில்லை
வயதானவர்களுக்கு பேருந்தில் எழுந்து இடம் கொடுக்கிறோமே.
அவர்களுக்குதான் கால் இருக்கிறதே என்று விட்டுவிட்டால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தால்
நாம் வாழும் இந்த மனித வாழ்கைக்கு எந்த அர்தம்முமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

துடைப்பது என்பது எப்படி அவர்களின் வேலையோ அதேபோல
முடிந்த அளவு அடுத்தவர் வேலையை குறைப்பது என்பது நமது கடமை.

இப்படி திமிர் பதில்கள் நாளை நம்மை நோக்கியும் வரலாம்.
நமக்கு மேலுள்ளவர்களால்.


பிரபு மித்ரன்

No comments:

Post a Comment

Related Articles