யாரோ ஒரு பெண்ணிற்கு இரத்தம் வேண்டும் என அழைப்பு வந்தது.
A1 +ve
என்னுடையது தான்..
எதோ ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டேன்..
அவர் யார் என்றெல்லாம் எனக்கு தெரியாது... என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் கேட்டுள்ளனர். அவர் என்னை தொடர்பு கொண்டார்.
எப்பொழுதும் பிரச்சனை ஊசியாக தான் இருக்கும். இதற்கு முன் இரண்டு முறையும் அப்படி தான் இருந்தது..
பயந்து கொண்டே சென்று கண்ணை மூடி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஆனால் இந்த முறை என் கவலையே வேறு... அந்த மருத்துவமணை தான்....
கோவை அரசு பொது மருத்துவமணை
A1 +ve
என்னுடையது தான்..
எதோ ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டேன்..
அவர் யார் என்றெல்லாம் எனக்கு தெரியாது... என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் கேட்டுள்ளனர். அவர் என்னை தொடர்பு கொண்டார்.
எப்பொழுதும் பிரச்சனை ஊசியாக தான் இருக்கும். இதற்கு முன் இரண்டு முறையும் அப்படி தான் இருந்தது..
பயந்து கொண்டே சென்று கண்ணை மூடி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஆனால் இந்த முறை என் கவலையே வேறு... அந்த மருத்துவமணை தான்....
கோவை அரசு பொது மருத்துவமணை
போன வாரம் தான் ஒரு நாள் பரதேசமாக எங்கெங்கோ சுற்றி அந்த மருத்துவமணைக்கு சென்றேன்.
அதற்கு முன் கல்லூரியில் படிக்கும் பொழுது இரண்டு முறை சென்றிருக்கிறேன்.. அதுவும் என்னுடன் படித்தவர்கள் விபத்தில் இறந்த பொழுது அந்த மருத்துவமணை வாசலிலேயே இருக்கும் பிரேதபரிசோதனை கூடம் முன்பு நின்றிருக்கிறேன். மற்றபடி வேறு எங்கும் சென்றதில்லை.
அந்த இரண்டு முறையில் ஒருவரின் உடலை பார்க்க பிணவரைக்குள் வரிசையாக சென்று வர அனுமதித்தனர்.
நானும் வரிசையில் நின்றேன்.
அந்த மருந்து நெடியும் குலோரின் பவுடர் நெடியும் ஒன்று சேர்ந்து அடித்த வீச்சு என்னமோ செய்தது.
வரிசை மெதுவாக நகர்ந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு சிறு அறை. அதில் ஓரமாக ஸ்ட்ரெக்சரில் ஒருவரின் உடல் பேண்ட் சட்டையுடன் கிடந்தது.
முகம் என்னை பார்க்காமல் சுவற்றை பார்த்து திரும்பியிருந்தது.
மேல் நோக்கியிருந்த நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து திரும்பியிருந்த முகத்தின் வழி போயிருந்தது.
எவனோ ஒருவன் அந்த ஸ்ட்ரெக்சரை சுற்றி சுற்றி பார்த்துகொண்டிருந்தான். முகத்தின் முன் போய் நின்று குனிந்து எதையோ பார்த்து திரும்பியவன் நான் பார்ப்பதை பார்த்தவுடன் பல் எல்லாம் விரிய சிரித்துக்கொண்டு “என் சித்தப்பன் தான்” என்றான்.
நான் திரும்பிக்கொண்டு வரிசையில் நகர்ந்தேன்.
அப்பொழுது இன்னொரு நெடியும் சேர்ந்து மூக்கில் ஏறி மூளையை எதோ செய்தது. அது என்ன நெடி என்பதை இன்று வரை என்னால் தெளிவாக கூற முடியவில்லை.
அந்த சிறு அறை முடிவில் இருந்த கதவு வழியாக வலது பக்கம் வரிசை சென்று கொண்டிருந்தது.
கதவு கிட்ட போகும் பொழுது தான் தரையில் பார்த்தேன்.
இரண்டு கால்கள் மட்டும் கொலுசுடன் தெரிந்தது.
கையை எடுத்து வாயை அழுத்திகொண்டு வரிசைவிட்டு விலகி கதவை நோக்கி ஓடினேன். என் கையை பிடித்த நண்பனின் கையை உதரி விட்டு வாசலை கடந்து வெளியே வந்து இருட்டில் சென்று வாயில் அழுத்தியிருந்த கையை எடுத்தேன்.
வாந்தி... பயம்... நடுக்கம்..... அதன் பிறகு அங்கு செல்லவே இல்லை.
போன வாரம் தான் போனேன். ஏன் என்றெல்லாம் தெரியாது... போனேன்.. நான் அப்படி தான்..
உள்ளே நுழைந்ததும் அந்த பிணவறை முன்பு நிறைய பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களிடமிருந்து மெல்லிய சத்தத்தில் அழுகை கேட்டுக்கொண்டிருந்தது. எந்த ஒரு ஒலிக்கும் இல்லாத ஒரு குணம் அந்த ஒப்பாரி சத்தத்திற்கு இருக்கிறது.
அந்த சத்தத்தை கேட்கும் பொழுது அது நம்மை இந்த மண்ணை விட்டு பிரித்து நிறுத்திவிடும். உள்ளுக்குள் ஆழ்ந்து எதையுமே அந்த சத்தம் நம்மை யோசிக்க விடாது.
பெண்களின் உடைந்த குரலும்.. சுற்றியிருக்கும் ஆண்களின் மவுனமும்... அந்த சாவும்... இறப்பு அடுத்தவர்களுக்கு தரும் பயமும்.. எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு கிரக்கத்தில் வைத்துவிடும்.
சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து அந்த ஆஸ்பத்திரி முழுவதும் சுற்றினேன். எங்கு பார்த்தாலும் கூட்டம். மருந்து நெடி... மருந்துக்கு வரிசையாக நிற்கும் நோயாளிகள். அங்கங்கு படுத்து கிடந்த வயதானவர்கள். தரை எங்கும் எச்சில் துப்பிய காயங்கள்.. என்னை கடந்து சென்ற முகங்களிலெல்லாம் நோயை விட ஏழ்மையே மிஞ்சியிருந்தது. நோய் அனைவருக்கும் பொது தான். ஆனால் அது வசதிபடைத்தவரகளுக்கு வரும் பொழுது இருக்கும் அந்த நோயின் பகட்டு இந்த சாமானியர்களின் முகங்களில் தெரியவில்லை. அவர்கள் முகம் எப்பொழுதும் ஒரே உண்ர்ச்சியே வெளிபடுத்துகிறது.
இந்த ஊரில் இவ்வளவு நோயாளிகள் இருக்கிறார்களா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் வாழும் உலகத்திற்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது அந்த இடமும் அதன் நாற்றமும்..
அதற்கு முன் கல்லூரியில் படிக்கும் பொழுது இரண்டு முறை சென்றிருக்கிறேன்.. அதுவும் என்னுடன் படித்தவர்கள் விபத்தில் இறந்த பொழுது அந்த மருத்துவமணை வாசலிலேயே இருக்கும் பிரேதபரிசோதனை கூடம் முன்பு நின்றிருக்கிறேன். மற்றபடி வேறு எங்கும் சென்றதில்லை.
அந்த இரண்டு முறையில் ஒருவரின் உடலை பார்க்க பிணவரைக்குள் வரிசையாக சென்று வர அனுமதித்தனர்.
நானும் வரிசையில் நின்றேன்.
அந்த மருந்து நெடியும் குலோரின் பவுடர் நெடியும் ஒன்று சேர்ந்து அடித்த வீச்சு என்னமோ செய்தது.
வரிசை மெதுவாக நகர்ந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு சிறு அறை. அதில் ஓரமாக ஸ்ட்ரெக்சரில் ஒருவரின் உடல் பேண்ட் சட்டையுடன் கிடந்தது.
முகம் என்னை பார்க்காமல் சுவற்றை பார்த்து திரும்பியிருந்தது.
மேல் நோக்கியிருந்த நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து திரும்பியிருந்த முகத்தின் வழி போயிருந்தது.
எவனோ ஒருவன் அந்த ஸ்ட்ரெக்சரை சுற்றி சுற்றி பார்த்துகொண்டிருந்தான். முகத்தின் முன் போய் நின்று குனிந்து எதையோ பார்த்து திரும்பியவன் நான் பார்ப்பதை பார்த்தவுடன் பல் எல்லாம் விரிய சிரித்துக்கொண்டு “என் சித்தப்பன் தான்” என்றான்.
நான் திரும்பிக்கொண்டு வரிசையில் நகர்ந்தேன்.
அப்பொழுது இன்னொரு நெடியும் சேர்ந்து மூக்கில் ஏறி மூளையை எதோ செய்தது. அது என்ன நெடி என்பதை இன்று வரை என்னால் தெளிவாக கூற முடியவில்லை.
அந்த சிறு அறை முடிவில் இருந்த கதவு வழியாக வலது பக்கம் வரிசை சென்று கொண்டிருந்தது.
கதவு கிட்ட போகும் பொழுது தான் தரையில் பார்த்தேன்.
இரண்டு கால்கள் மட்டும் கொலுசுடன் தெரிந்தது.
கையை எடுத்து வாயை அழுத்திகொண்டு வரிசைவிட்டு விலகி கதவை நோக்கி ஓடினேன். என் கையை பிடித்த நண்பனின் கையை உதரி விட்டு வாசலை கடந்து வெளியே வந்து இருட்டில் சென்று வாயில் அழுத்தியிருந்த கையை எடுத்தேன்.
வாந்தி... பயம்... நடுக்கம்..... அதன் பிறகு அங்கு செல்லவே இல்லை.
போன வாரம் தான் போனேன். ஏன் என்றெல்லாம் தெரியாது... போனேன்.. நான் அப்படி தான்..
உள்ளே நுழைந்ததும் அந்த பிணவறை முன்பு நிறைய பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்களிடமிருந்து மெல்லிய சத்தத்தில் அழுகை கேட்டுக்கொண்டிருந்தது. எந்த ஒரு ஒலிக்கும் இல்லாத ஒரு குணம் அந்த ஒப்பாரி சத்தத்திற்கு இருக்கிறது.
அந்த சத்தத்தை கேட்கும் பொழுது அது நம்மை இந்த மண்ணை விட்டு பிரித்து நிறுத்திவிடும். உள்ளுக்குள் ஆழ்ந்து எதையுமே அந்த சத்தம் நம்மை யோசிக்க விடாது.
பெண்களின் உடைந்த குரலும்.. சுற்றியிருக்கும் ஆண்களின் மவுனமும்... அந்த சாவும்... இறப்பு அடுத்தவர்களுக்கு தரும் பயமும்.. எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு கிரக்கத்தில் வைத்துவிடும்.
சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து அந்த ஆஸ்பத்திரி முழுவதும் சுற்றினேன். எங்கு பார்த்தாலும் கூட்டம். மருந்து நெடி... மருந்துக்கு வரிசையாக நிற்கும் நோயாளிகள். அங்கங்கு படுத்து கிடந்த வயதானவர்கள். தரை எங்கும் எச்சில் துப்பிய காயங்கள்.. என்னை கடந்து சென்ற முகங்களிலெல்லாம் நோயை விட ஏழ்மையே மிஞ்சியிருந்தது. நோய் அனைவருக்கும் பொது தான். ஆனால் அது வசதிபடைத்தவரகளுக்கு வரும் பொழுது இருக்கும் அந்த நோயின் பகட்டு இந்த சாமானியர்களின் முகங்களில் தெரியவில்லை. அவர்கள் முகம் எப்பொழுதும் ஒரே உண்ர்ச்சியே வெளிபடுத்துகிறது.
இந்த ஊரில் இவ்வளவு நோயாளிகள் இருக்கிறார்களா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் வாழும் உலகத்திற்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது அந்த இடமும் அதன் நாற்றமும்..
ஆனால் இவ்வளவு சீக்கிரம் நான் மறுபடியும் அங்கு செல்வேன் என நினைக்கவில்லை. ஒரு வேளை இப்படி அங்கு செல்லவேண்டியது இருக்கும் என முன்னரே தெரிந்துதான் என்னை அங்கு எதுவோ இழுத்து போனதோ என்னவோ.
மருத்துவமனை நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகமானது.
மற்ற அரசு அலுவலகம் போல இங்கும் அலட்சியம் தானே இருக்கும்.. அந்த பயம் தான்.
சினிமாக்களில் காட்டுவது போல இரத்தம் எடுக்குமிடமெல்லாம் சுத்தமில்லாமல் இருந்தால் என்ன செய்வது?
அடுத்தவர்களுக்கு பயன் படுத்திய ஊசியையே எனக்கும் பயன் படுத்த மாட்டார்கள் என என்ன நிச்சயம்.?
அவர்களின் அலட்சியத்தால் ஊசியை மாத்தி குத்தி இரத்தம் வராமல் திரும்பவும் எடுத்து மறுபடியும் சொருகினால்?
தனியார் மருத்துவமனை போல இங்கு நம்மை நடத்தமாட்டார்கள் என தெரியும்.. ஆனால் ஊசி தப்பாக போட்டு எதாவதாகிவிட்டால் என்ன செய்ய?
நர்ஸ் தெரியாமல் இரத்தம் அளவுக்கு அதிகமாக எடுத்துவிட்டால்?
ஆனால் இதற்காக எல்லாம் பின் வாங்குவது பாவம் அல்லவா... அப்படி எனக்கு இங்கு தான் எதாவது நடக்கனும் என்றிருந்தால் நடந்துவிட்டு போகட்டும் என்று தைரியம் கொண்டேன்.
ஆனால் என் தைரியம் எல்லாம் அந்த மருத்துவமனை வாயிலில் நுழைந்து உள்ளுக்குள் அடித்த அந்த குளோரின் பவுடர் நெடி அடித்த வரை தான்.
இந்த முறை எந்த ஒப்பாரியும் இல்லை. அந்த இடம் அமைதியாக இருந்தது.
கடந்து சென்றால் எப்பொழுதும் போல நல்ல கூட்டம்
ஒவ்வொரு பிரிவிலும் வரிசை வரிசையாக மனிதர்கள்.
எச்.ஐ.வி மருந்து கொடுக்குமிடம் என்று போட்டிருந்ததில் கொஞ்சம் கூட்டமிருந்தது. அதில் கடைசியாக முகத்தில் கர்சீப் கட்டும் தோளில் புத்தக பையுடனும் இரண்டு பேர் நின்றிருந்தனர்.
அனைத்தையும் கடந்து சென்றோம்.
என்னுடன் வந்த என் நண்பர் பைக்கை ஸ்டேண்டில் போட்டுவிட்டு வந்தார். போன வாரம் வந்த பொழுதே இரத்தம் கொடுக்குமிடம் பார்த்திருந்ததனால் யாரிடமும் வழி கேட்காமல் நடந்தோம். எங்கு பார்த்தாலும் ஆளும்கட்சியின் கொடி கட்டிய கார்கள். ஏனென்றால் அன்று முதல்வரின் பிறந்தநாள். மேயர் கார் எல்லாம் நின்றிருந்தது.
வாசலிலேயே எங்களுக்காக அந்த பெண்ணின் கணவர் காத்திருந்ததால் அறிமுகமாகி உள்ளே சென்றோம்.
அங்கேயும் கூட்டம். ஒரு ஃபார்ம் கொடுத்தார்கள்.
வேக வேகமாக அதை பூர்த்தி செய்துவிட்டு வரிசைக்கு சென்றேன்.
நான் ஒரு மணிநேரத்தில் அலுவலகம் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு வந்தேன். இந்த வரிசையை பார்த்தால் நான் அதற்குள் போக முடியுமா என்பதே சந்தேகம் தான் என தோன்றியது.
அந்த பெண்ணிற்கு அதற்கு முந்திய நாள் தான் குழந்தை பிறந்திருக்கிறது... அதனால் ஏற்பட்ட இரத்தபோக்கினால் தான் இரத்தம் தேவைபட்டதாக சொல்லிக்கொண்டிருந்தனர்.
நான் பூர்த்தி செய்த படிவத்திதை சரி பார்த்தேன். ஓர் இடத்தில் “கடைசியாக இரத்ததானம் செய்த தேதி” என கேட்க பட்டிருந்தது. அதற்கு எனக்கு சரியான நாள் தெரியாததால் அதை விட்டிருந்தேன். மற்றபடி எல்லாத்தையும் பூர்த்தி செய்துவிட்டேன். இதுவே தனியார் மருத்துவமனையாக இருந்தால் அவர்களே இதை எல்லாம் எங்களுக்காக எழுதி தருவார்கள்.
வரிசை மெதுவாக நகர்ந்தது. இரத்த மாதிரி பரிசோதித்த பிறகு இன்னொரு வரிசையில் நிக்க சொன்னார்கள். இரத்த அழுத்தம் பரிசோதிக்கும் இடம். அப்பொழுதே அரை மணிநேரத்திற்கும் அதிகமாகியிருந்தது. தனியார் மருத்துவமனையில் இது எல்லாம் முடிந்து இரத்தம் எடுத்து முடிக்கவே அரை மணி நேரம்தானாகும்.
அது முடிந்ததும் இன்னொரு வரிசையில் நிக்க சொன்னார்கள். அப்பொழுது உள்ளே இருந்து ஒரு வெள்ளை கோட் மாட்டிய பெண் டாக்டர் வெளியே வந்து நர்சை பார்த்து கத்தினார். ‘அண்டர் வெயிட்’ எல்லாம் எதுக்கு உள்ள அனுப்புற...அவங்க கிட்ட வெயிட் கேட்டுட்டு அப்பறம் உள்ள விடு என கத்திவிட்டு உள்ளே சென்றார். இன்னொருத்தர் உள்ளே இருந்து ‘ஜூஸ் குடிச்சுட்டு வர சொல்லிட்டாங்க’ என சொல்லிகொண்டே வெளியே வந்தார். எனக்கு பின்னிருந்த ஒரு பையன் என் முகத்தை பார்த்தான்.
இரத்த மாதிரி பரிசோதனை செய்யும் இடத்தில் ஒரு குண்டு பெண்மணி வந்து அமர்ந்தார். எதோ பேப்பருடன் வெளியே வந்த பெரிய நர்ஸ் அங்கு இருந்தவர்களிடம் ‘லேடீஸ் எல்லாம் வந்தா கடைசியா எப்போ பீரியட்ஸ் ஆச்சுனு கேட்டுக்கோ” என கத்தி சொன்னார். சொல்லிவிட்டு அந்த பெண்ணை பார்த்து குரலை கொஞ்சமும் தாழ்த்தாமல் “கடைசியா எப்போமா பீரியட்ஸ்” என அதட்டலில் கேட்டார். அந்த பெண்ணினால் தலையை கூட நிமிர முடியவில்லை.. அங்கு அவரை தவிர அத்தனையும் ஆண்கள்..
‘இப்போ இல்ல’ என மெதுவாக சொன்னார்
“கடைசியா எப்போனு தான் கேட்டேன்” என இன்னும் அதிகமாக கத்தி கேட்டார் அந்த பெரிய நர்ஸ்.
அந்த பெண்ணுடன் சேர்ந்து மற்ற சின்ன நர்ஸ்களும் என்ன செய்வது என தெரியாமல் தலையை குனிந்து எதோ வேலை செய்வது போல முகத்தில் அவஸ்தையை வெளிபடுத்தி கொண்டிருந்தனர்.
“10த்” என எதோ சத்தத்தை மென்று சொன்னார்.
“அப்போ சரி இன்னும் 10 நாள் இருக்கு.. எடுமா” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
ச்சே என்ன மனிதர்கள் இவர்கள். சினிமாவில் காட்டப்படும் அரசு மருத்துவமனை காட்சிகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல நான் பார்த்தது எல்லாம். அந்த பெரிய நர்ஸ் கதாபாத்திரம் கூட நாம் எல்லா அரசு அலுவலகங்களிளும் பார்க்க முடிகிற கதாபாத்திரம் தான். அவர் வயது 50க்கு மேல் இருக்கும். பெரிய உடம்பு.. குரலிலேயே எல்லாரையும் அதட்டும் தொனி... இவர்களும் பெண் தானே... இப்படி இரத்த தானம் செய்ய வரும் பெண்களை இப்படி நடத்தினால் எப்படி அடுத்த முறை இரத்தம் கொடுக்க நினைப்பார்கள்.?
“ம்மா உனக்கே இரத்தமில்லை.. உன்னால குடுக்க முடியாது” என சொல்லி அந்த பெண்ணை அனுப்பினார்கள்.
எனக்கு முன்னால் இருந்தவர்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டனர். நான் கையில் வைத்திருந்த படிவத்தை யாரிடம் கொடுப்பது என தெரியாமல் நின்றிருந்தேன். உள்ளே எட்டி பார்த்தால் அந்த பெரிய நர்ஸ் தான் இருந்தார். அவரிடம் போக பயந்து அப்படியே நின்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே இருந்து வெளியே வந்த ஒருவரிடம் கேட்டேன்.
‘உள்ளே டாக்டர் இருப்பாங்க.. அங்க குடுங்க’ என சொல்லிவிட்டு சென்றார்.
உள்ளே போய் டாக்டரை பார்த்தேன்..
“உட்காருங்க”
அங்கு இருந்த பெயின்ட் போன ஸ்டூலில் அமர்ந்தேன்.
“உங்க பேர் என்ன?” படிவத்தை பார்த்துக்கொண்டே கேட்டார்
“பிரபு”
“வயசு?”
“24”
ஒவ்வொரு வியாதியாக சொல்லி ‘இருக்கா?’ ‘இருந்துச்சா?’ என கேட்டுக்கொண்டே போனார்
‘இல்லை..இல்லை’ என சொல்லிக்கொண்டே இருந்தேன்.
ச்சே என்ன இவ்வளவு கேட்கிறார்கள்? இதுவே தனியார் மருத்துவமனையாக இருந்திருந்தால் என நினைத்துகொண்டேன்.
“இதுக்கு முன்னாடி இரத்தம் கொடுத்துருக்கீங்களா?”
“ஆமாம்” என்றேன்
“கடைசியா எப்போ குடுத்தீங்க” என கேட்டார்
“மூன்று மாசம் இருக்கும்” என்றேன்.
“எந்த மாசம் குடுத்தீங்க?”
“அக்டோபர்..நவம்பர்.. இருக்கும்” என்றேன்
“நவம்பர் என்றால் இன்னும் மூனு மாசம் ஆகலயே... உங்களால குடுக்க முடியாது” என்றார்
எனக்கு எரிச்சலாக இருந்தது
“இல்லை அக்டோபர் க்கு முன்னாடி தான்” என்றேன்
“100 நாள் ஆகாம எடுக்க கூடாது....நீங்க குடுத்த ஆஸ்பத்திரிக்கு போன் பன்னி கேட்டுட்டு வாங்க” என சொல்லி படிவத்தை திருப்பி கொடுத்தார்
“மேடம்...எனக்கு தெரியும்... நான் குடுத்து மூனு மாசத்துக்கும் மேல ஆயிடுச்சு” என்றேன் பிடிவாதமாக
சின்னதாக சிரித்துவிட்டு “காலைல சாப்டீங்களா?” என்றார்
“சாப்டேன்” என்றேன்
“என்ன சாப்டீங்க?” என்றார்
“”இட்லி”
“எவ்வளவு இட்லி சாப்டீங்க?”
எனக்கு கோவம் வேறு..இரண்டு தான் சாப்பிட்டேன்... டாக்டரிடம் பொய் சொல்ல கூடாது என்ற மரபை மீறி
“மூன்று” என்றேன்
“பத்தாது... போய் ஜூஸ் குடிச்சுட்டுவாங்க” என்றார்..
நான் தயங்கியதை பார்த்துவிட்டு “மூனு இட்லி எல்லாம் பத்தாது..நீங்க ஜூஸ் குடிச்சுட்டு வரலைனா எடுக்க முடியாது” என்றார்.
நான் பொய் சொன்னதுக்கு தண்டனையாக நினைத்துவிட்டு கிளம்பினேன்.
இண்டர்வியூ முடிச்சு வெளியே வருபவர்களிடம் என்ன கேள்வி என்று கேட்கும் ஆவலுடன் எனக்கு பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் “என்னாச்சு” என கேட்டார்கள்.
சொன்னேன்... ‘ஓஓ..’ என சிரித்தார்கள்.
வெளியே வந்து என் நண்பரிடம் “இப்படி இரத்தம் கொடுக்க வர்ரவங்கள அலைக்களிச்சா எப்படி கொடுக்க தோனும்.. தனியார் ஆஸ்பத்திரில எல்லாம் ஒரே நர்ஸ் தான் இருப்பாங்க.. ஆனா அரை மணி நேரம் தான் ஆகும்..ஆனா இங்க இவ்வளவு பேர் இருந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆய்டுச்சு” என்றேன்.
அதை கேட்ட ஒருத்தர் “ஆமா சார்...சிஸ்டமே சரி இல்லை” என்றார்.
இன்னொருத்தர் “இரத்தம் குடுக்க வந்தவங்க நிறைய பேர அது இல்ல..இது இல்ல என சொல்லி அனுப்சுட்டாங்க” என்றார் கோபமாக.
ச்சே.. அரசு ஆஸ்பத்திரியே இப்படி தானா.. என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லை.
மருத்துவமனை நெருங்க நெருங்க எனக்கு பயம் அதிகமானது.
மற்ற அரசு அலுவலகம் போல இங்கும் அலட்சியம் தானே இருக்கும்.. அந்த பயம் தான்.
சினிமாக்களில் காட்டுவது போல இரத்தம் எடுக்குமிடமெல்லாம் சுத்தமில்லாமல் இருந்தால் என்ன செய்வது?
அடுத்தவர்களுக்கு பயன் படுத்திய ஊசியையே எனக்கும் பயன் படுத்த மாட்டார்கள் என என்ன நிச்சயம்.?
அவர்களின் அலட்சியத்தால் ஊசியை மாத்தி குத்தி இரத்தம் வராமல் திரும்பவும் எடுத்து மறுபடியும் சொருகினால்?
தனியார் மருத்துவமனை போல இங்கு நம்மை நடத்தமாட்டார்கள் என தெரியும்.. ஆனால் ஊசி தப்பாக போட்டு எதாவதாகிவிட்டால் என்ன செய்ய?
நர்ஸ் தெரியாமல் இரத்தம் அளவுக்கு அதிகமாக எடுத்துவிட்டால்?
ஆனால் இதற்காக எல்லாம் பின் வாங்குவது பாவம் அல்லவா... அப்படி எனக்கு இங்கு தான் எதாவது நடக்கனும் என்றிருந்தால் நடந்துவிட்டு போகட்டும் என்று தைரியம் கொண்டேன்.
ஆனால் என் தைரியம் எல்லாம் அந்த மருத்துவமனை வாயிலில் நுழைந்து உள்ளுக்குள் அடித்த அந்த குளோரின் பவுடர் நெடி அடித்த வரை தான்.
இந்த முறை எந்த ஒப்பாரியும் இல்லை. அந்த இடம் அமைதியாக இருந்தது.
கடந்து சென்றால் எப்பொழுதும் போல நல்ல கூட்டம்
ஒவ்வொரு பிரிவிலும் வரிசை வரிசையாக மனிதர்கள்.
எச்.ஐ.வி மருந்து கொடுக்குமிடம் என்று போட்டிருந்ததில் கொஞ்சம் கூட்டமிருந்தது. அதில் கடைசியாக முகத்தில் கர்சீப் கட்டும் தோளில் புத்தக பையுடனும் இரண்டு பேர் நின்றிருந்தனர்.
அனைத்தையும் கடந்து சென்றோம்.
என்னுடன் வந்த என் நண்பர் பைக்கை ஸ்டேண்டில் போட்டுவிட்டு வந்தார். போன வாரம் வந்த பொழுதே இரத்தம் கொடுக்குமிடம் பார்த்திருந்ததனால் யாரிடமும் வழி கேட்காமல் நடந்தோம். எங்கு பார்த்தாலும் ஆளும்கட்சியின் கொடி கட்டிய கார்கள். ஏனென்றால் அன்று முதல்வரின் பிறந்தநாள். மேயர் கார் எல்லாம் நின்றிருந்தது.
வாசலிலேயே எங்களுக்காக அந்த பெண்ணின் கணவர் காத்திருந்ததால் அறிமுகமாகி உள்ளே சென்றோம்.
அங்கேயும் கூட்டம். ஒரு ஃபார்ம் கொடுத்தார்கள்.
வேக வேகமாக அதை பூர்த்தி செய்துவிட்டு வரிசைக்கு சென்றேன்.
நான் ஒரு மணிநேரத்தில் அலுவலகம் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு வந்தேன். இந்த வரிசையை பார்த்தால் நான் அதற்குள் போக முடியுமா என்பதே சந்தேகம் தான் என தோன்றியது.
அந்த பெண்ணிற்கு அதற்கு முந்திய நாள் தான் குழந்தை பிறந்திருக்கிறது... அதனால் ஏற்பட்ட இரத்தபோக்கினால் தான் இரத்தம் தேவைபட்டதாக சொல்லிக்கொண்டிருந்தனர்.
நான் பூர்த்தி செய்த படிவத்திதை சரி பார்த்தேன். ஓர் இடத்தில் “கடைசியாக இரத்ததானம் செய்த தேதி” என கேட்க பட்டிருந்தது. அதற்கு எனக்கு சரியான நாள் தெரியாததால் அதை விட்டிருந்தேன். மற்றபடி எல்லாத்தையும் பூர்த்தி செய்துவிட்டேன். இதுவே தனியார் மருத்துவமனையாக இருந்தால் அவர்களே இதை எல்லாம் எங்களுக்காக எழுதி தருவார்கள்.
வரிசை மெதுவாக நகர்ந்தது. இரத்த மாதிரி பரிசோதித்த பிறகு இன்னொரு வரிசையில் நிக்க சொன்னார்கள். இரத்த அழுத்தம் பரிசோதிக்கும் இடம். அப்பொழுதே அரை மணிநேரத்திற்கும் அதிகமாகியிருந்தது. தனியார் மருத்துவமனையில் இது எல்லாம் முடிந்து இரத்தம் எடுத்து முடிக்கவே அரை மணி நேரம்தானாகும்.
அது முடிந்ததும் இன்னொரு வரிசையில் நிக்க சொன்னார்கள். அப்பொழுது உள்ளே இருந்து ஒரு வெள்ளை கோட் மாட்டிய பெண் டாக்டர் வெளியே வந்து நர்சை பார்த்து கத்தினார். ‘அண்டர் வெயிட்’ எல்லாம் எதுக்கு உள்ள அனுப்புற...அவங்க கிட்ட வெயிட் கேட்டுட்டு அப்பறம் உள்ள விடு என கத்திவிட்டு உள்ளே சென்றார். இன்னொருத்தர் உள்ளே இருந்து ‘ஜூஸ் குடிச்சுட்டு வர சொல்லிட்டாங்க’ என சொல்லிகொண்டே வெளியே வந்தார். எனக்கு பின்னிருந்த ஒரு பையன் என் முகத்தை பார்த்தான்.
இரத்த மாதிரி பரிசோதனை செய்யும் இடத்தில் ஒரு குண்டு பெண்மணி வந்து அமர்ந்தார். எதோ பேப்பருடன் வெளியே வந்த பெரிய நர்ஸ் அங்கு இருந்தவர்களிடம் ‘லேடீஸ் எல்லாம் வந்தா கடைசியா எப்போ பீரியட்ஸ் ஆச்சுனு கேட்டுக்கோ” என கத்தி சொன்னார். சொல்லிவிட்டு அந்த பெண்ணை பார்த்து குரலை கொஞ்சமும் தாழ்த்தாமல் “கடைசியா எப்போமா பீரியட்ஸ்” என அதட்டலில் கேட்டார். அந்த பெண்ணினால் தலையை கூட நிமிர முடியவில்லை.. அங்கு அவரை தவிர அத்தனையும் ஆண்கள்..
‘இப்போ இல்ல’ என மெதுவாக சொன்னார்
“கடைசியா எப்போனு தான் கேட்டேன்” என இன்னும் அதிகமாக கத்தி கேட்டார் அந்த பெரிய நர்ஸ்.
அந்த பெண்ணுடன் சேர்ந்து மற்ற சின்ன நர்ஸ்களும் என்ன செய்வது என தெரியாமல் தலையை குனிந்து எதோ வேலை செய்வது போல முகத்தில் அவஸ்தையை வெளிபடுத்தி கொண்டிருந்தனர்.
“10த்” என எதோ சத்தத்தை மென்று சொன்னார்.
“அப்போ சரி இன்னும் 10 நாள் இருக்கு.. எடுமா” என சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
ச்சே என்ன மனிதர்கள் இவர்கள். சினிமாவில் காட்டப்படும் அரசு மருத்துவமனை காட்சிகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல நான் பார்த்தது எல்லாம். அந்த பெரிய நர்ஸ் கதாபாத்திரம் கூட நாம் எல்லா அரசு அலுவலகங்களிளும் பார்க்க முடிகிற கதாபாத்திரம் தான். அவர் வயது 50க்கு மேல் இருக்கும். பெரிய உடம்பு.. குரலிலேயே எல்லாரையும் அதட்டும் தொனி... இவர்களும் பெண் தானே... இப்படி இரத்த தானம் செய்ய வரும் பெண்களை இப்படி நடத்தினால் எப்படி அடுத்த முறை இரத்தம் கொடுக்க நினைப்பார்கள்.?
“ம்மா உனக்கே இரத்தமில்லை.. உன்னால குடுக்க முடியாது” என சொல்லி அந்த பெண்ணை அனுப்பினார்கள்.
எனக்கு முன்னால் இருந்தவர்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டனர். நான் கையில் வைத்திருந்த படிவத்தை யாரிடம் கொடுப்பது என தெரியாமல் நின்றிருந்தேன். உள்ளே எட்டி பார்த்தால் அந்த பெரிய நர்ஸ் தான் இருந்தார். அவரிடம் போக பயந்து அப்படியே நின்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே இருந்து வெளியே வந்த ஒருவரிடம் கேட்டேன்.
‘உள்ளே டாக்டர் இருப்பாங்க.. அங்க குடுங்க’ என சொல்லிவிட்டு சென்றார்.
உள்ளே போய் டாக்டரை பார்த்தேன்..
“உட்காருங்க”
அங்கு இருந்த பெயின்ட் போன ஸ்டூலில் அமர்ந்தேன்.
“உங்க பேர் என்ன?” படிவத்தை பார்த்துக்கொண்டே கேட்டார்
“பிரபு”
“வயசு?”
“24”
ஒவ்வொரு வியாதியாக சொல்லி ‘இருக்கா?’ ‘இருந்துச்சா?’ என கேட்டுக்கொண்டே போனார்
‘இல்லை..இல்லை’ என சொல்லிக்கொண்டே இருந்தேன்.
ச்சே என்ன இவ்வளவு கேட்கிறார்கள்? இதுவே தனியார் மருத்துவமனையாக இருந்திருந்தால் என நினைத்துகொண்டேன்.
“இதுக்கு முன்னாடி இரத்தம் கொடுத்துருக்கீங்களா?”
“ஆமாம்” என்றேன்
“கடைசியா எப்போ குடுத்தீங்க” என கேட்டார்
“மூன்று மாசம் இருக்கும்” என்றேன்.
“எந்த மாசம் குடுத்தீங்க?”
“அக்டோபர்..நவம்பர்.. இருக்கும்” என்றேன்
“நவம்பர் என்றால் இன்னும் மூனு மாசம் ஆகலயே... உங்களால குடுக்க முடியாது” என்றார்
எனக்கு எரிச்சலாக இருந்தது
“இல்லை அக்டோபர் க்கு முன்னாடி தான்” என்றேன்
“100 நாள் ஆகாம எடுக்க கூடாது....நீங்க குடுத்த ஆஸ்பத்திரிக்கு போன் பன்னி கேட்டுட்டு வாங்க” என சொல்லி படிவத்தை திருப்பி கொடுத்தார்
“மேடம்...எனக்கு தெரியும்... நான் குடுத்து மூனு மாசத்துக்கும் மேல ஆயிடுச்சு” என்றேன் பிடிவாதமாக
சின்னதாக சிரித்துவிட்டு “காலைல சாப்டீங்களா?” என்றார்
“சாப்டேன்” என்றேன்
“என்ன சாப்டீங்க?” என்றார்
“”இட்லி”
“எவ்வளவு இட்லி சாப்டீங்க?”
எனக்கு கோவம் வேறு..இரண்டு தான் சாப்பிட்டேன்... டாக்டரிடம் பொய் சொல்ல கூடாது என்ற மரபை மீறி
“மூன்று” என்றேன்
“பத்தாது... போய் ஜூஸ் குடிச்சுட்டுவாங்க” என்றார்..
நான் தயங்கியதை பார்த்துவிட்டு “மூனு இட்லி எல்லாம் பத்தாது..நீங்க ஜூஸ் குடிச்சுட்டு வரலைனா எடுக்க முடியாது” என்றார்.
நான் பொய் சொன்னதுக்கு தண்டனையாக நினைத்துவிட்டு கிளம்பினேன்.
இண்டர்வியூ முடிச்சு வெளியே வருபவர்களிடம் என்ன கேள்வி என்று கேட்கும் ஆவலுடன் எனக்கு பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் “என்னாச்சு” என கேட்டார்கள்.
சொன்னேன்... ‘ஓஓ..’ என சிரித்தார்கள்.
வெளியே வந்து என் நண்பரிடம் “இப்படி இரத்தம் கொடுக்க வர்ரவங்கள அலைக்களிச்சா எப்படி கொடுக்க தோனும்.. தனியார் ஆஸ்பத்திரில எல்லாம் ஒரே நர்ஸ் தான் இருப்பாங்க.. ஆனா அரை மணி நேரம் தான் ஆகும்..ஆனா இங்க இவ்வளவு பேர் இருந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆய்டுச்சு” என்றேன்.
அதை கேட்ட ஒருத்தர் “ஆமா சார்...சிஸ்டமே சரி இல்லை” என்றார்.
இன்னொருத்தர் “இரத்தம் குடுக்க வந்தவங்க நிறைய பேர அது இல்ல..இது இல்ல என சொல்லி அனுப்சுட்டாங்க” என்றார் கோபமாக.
ச்சே.. அரசு ஆஸ்பத்திரியே இப்படி தானா.. என்ற நினைப்பை தவிர்க்க முடியவில்லை.
ஓடி சென்று ஜூஸ் குடித்துவிட்டு திரும்ப ஓடி வந்து “குடிச்சுட்டேன் மிஸ்” என்று பள்ளிகூட சிறுவனை போல டாக்டர் முன்பு நல்ல பிள்ளையாக நின்றேன்.
ஆரம்பத்திலிருந்து அவர் முகத்திலிருந்த புன்னகை மட்டும் அப்படியே இருந்தது
ஆரம்பத்திலிருந்து அவர் முகத்திலிருந்த புன்னகை மட்டும் அப்படியே இருந்தது
“என்ன ஜீஸ்?” என அடுத்த கேள்வியை ஆரம்பித்தார்
“ஆப்பிள்” என்றேன் சமத்தாக.
திரும்பவும் கடைசியா எப்போ இரத்தம் குடுத்தீங்க... எத்தனை தடவை... எந்த ஆஸ்பத்திரி என்றெல்லாம் மறுபடியும் கேட்டார்.
நொந்து போய் மறுபடியும் எல்லாவற்றிர்க்கும் பதில் சொன்னேன்.
“கை நீட்டுங்க” என்றார்
கைரேகை பார்ப்பவனிடம் நீட்டுவது போல உள்ளங்கையை நீட்டினேன்
பார்த்துவிட்டு “போய் நர்ஸ் கிட்ட ஃபார்ம் குடுங்க..” என்றார்.
ஒரு வேளை கை நடுங்குதா என பார்த்திருப்பாரோ
போய் அந்த பெரிய நர்ஸ்ஸிடம் கொடுத்துவிட்டு திரும்பினேன்.. டாக்டரும் என் பின்னாலயே வந்துவிட்டார்
“இவருக்கு சின்ன பேக் போடுங்க... கண் பாக்க ரொம்ப டயர்டா இருக்கு” என்றார்.
நம்ம எங்க டயர்டா இருக்கோம்னு சொன்னோம் என யோசித்தேன்.
சொல்லிவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றார்.
என்னை படுக்கவைத்து கையில் ஊசி குத்தினார்கள். புது ஊசியா என அவர்கள் அதன் கவரை பிரிக்கும் போது பார்த்துகொண்டேன்.
கண்ணை மூடி எப்பொழுதும் போல படுத்துகொண்டேன்,..சத்தியமாக குத்தின வலியே தெரியவில்லை.
நான் தான் தப்பாக நினைத்துவிட்டேன்.
டாக்டரின் சத்தம் கேட்டு கண் விழித்தேன்.
யாரோ ஒரு பையனிடம் பேசிக்கொண்டிருந்தார்
“நாளைக்கு வந்து குடுங்க.. நைட் வேலைக்கு போய்ட்டு வந்திருக்கீங்க.. இப்போ எடுக்க முடியாது” என்றார்
“டாக்டர்..ஒன்னும் பிரச்சனை இல்லை...நான் பாத்துக்குறேன்.. எடுங்க” என அவன் கெஞ்சுவது போல சொன்னான்
“சொன்ன புரிஞ்சுகோபா...நாளைக்கு வந்து குடுங்க”
“டாக்டர் அவங்களுக்கு எமெர்ஜென்ஸி..ப்லீஸ் எடுங்க”
“இங்க பாருப்பா... பேசண்ட்க்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்... இங்க இரத்தம் இருந்தா குடுப்போம்..இல்ல எங்க இருக்கோ கேட்டு வாங்குவோம்.. அதுக்காக வர்ர எல்லார் கிட்டயும் உரிய முடியாது.. அது உங்களுக்கு நல்லதில்லை.. அப்பறம் நீங்களும் நோயாளியா இங்க வர வேண்டியதா இருக்கும்..” என்றார்
எனக்கு உடலெல்லாம் என்னமோ செய்துவிட்டது.
தனியார் அஸ்பத்திரியில் உண்மையாகவே இவ்வளவு கேள்விகளை கேட்க மாட்டார்கள்.. வந்த எல்லோரிடமும் சடங்குக்கு சில கேள்வியை கேட்டுவிட்டு இரத்தம் எடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு எங்களைவிடவும் அவர்களின் தேவையே முக்கியமாக இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.
அங்கெல்லாம் ஒரு நர்ஸ் மட்டும் தான் அத்தனையும் பார்பார். ஆனால் இங்கு இதற்கென தனியாக மருத்துவர் அமர்தியிருக்கிறார்கள். நான் வந்ததிலிருந்து அதுவரை நான் அங்கு சந்தித்த கேள்வி அத்தனையும் நியாயமாகபட்டது.
தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்கலாம்..!. இல்லை என்றால் அந்த தானம் சரியானதாக இருக்காது என்பதை அந்த டாக்டர் சொன்ன பதிலில் உரைத்துகொண்டேன்.
நான் இரத்தம் கொடுத்துவிட்டு கிளம்பும் போது அந்த டாக்டர் “நிறைய தண்ணி குடிங்க” என்றார்.
நான் சிரித்து தலையாட்டிவிட்டு கிளம்பினேன்
எனக்கு பின்னால் வரிசையில் நின்றிருந்த பையன் அப்பொழுது உள்ளே வந்து “டாக்டர் கை கால் கழுவிட்டு வர சொன்னாங்க” என சொல்லிகொண்டிருந்தான்
அவர் என் கையை நீட்ட சொன்னது சுத்தமாக வைத்திருக்கிறோமா என பார்க்க தான் என புரிந்துகொண்டேன்.
என் வாழ்கையில் உன்மையான மருத்துவரை முதல் முதலாக பார்த்த திருப்தியில் அங்கிருந்து வந்தேன்.
அரசு மருத்துவமணையை பற்றிய என்னுடைய தவறான என்னமும் அங்கயே புதைத்துவிட்டுதான் கிளம்பினேன்.
முன் அறையில் நர்ஸ்ஸிடம் ஒருவர் சண்டையிட்டுகொண்டிருந்தார்
“சார்..’ஓ’ குரூப்க்கு ‘ஏ’ ‘பி’ இருக்கவங்க குடுக்கலாம்... ஆனா ‘ஏ’ இருக்கவங்களுக்கு ‘பி’ குடுக்க முடியாது..சொன்ன புரிஞ்சுக்கோங்க” என நர்ஸ் விளக்கிக்கொண்டிருந்தார்
“எல்லாம் குடுக்கலாம் மேடம்..பாத்து பண்ணுங்க” என சொல்லிக்கொண்டிருந்தார்.
சிரித்துகொண்டு வெளியே வந்தேன்..
வெளியே ஒருத்தர் “மூனு மாசத்துக்கு முன்னாடி கூட வேற ஆஸ்பத்திரில இரத்தம் குடுத்தேன்... இங்க என்னடான வெயிட் இல்லனு சொல்லி அனுப்புறாங்க” என கத்திக்கொண்டிருந்தார்.
அரசு ஆஸ்பத்திரியே இப்படிதான்பா..
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment