Sunday, 30 November 2014

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

புகை பிடிப்பவர்களை திருத்த மத்திய அரசு ஒரு அதி புத்திசாலிதனமான யோசனை சொல்லி இருக்கிறார்கள்.


அதாவது சிகரெட்டை சில்லரையாக விற்க கூடாதாம்.
பாக்கெட் பாக்கெட்டாக தான் விற்க வேண்டுமாம்.
அதாவது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க சங்கட பட்டுக்கொண்டு புகை பிடிப்பதையே நிறுத்தி விடுவார்களாம்.
ஆஹா!!
என்ன ஒரு அற்புதமான ஐடியா??!!
உங்களுக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கொடுக்க வில்லை.!!
போங்கடாங்க பொடலங்கா

தமிழ் நாட்டுல இந்த டெக்னிக் எல்லாம் பல வருஷங்களுக்கு முன்னாடியே யூஸ் பன்னிட்டாங்க பாஸ்.

அந்த காலத்துல எல்லாம் டாஸ்மாக் ல “கட்டிங்” மட்டும் தனியாக கிடைக்கும்.
அதன் பிறகு தான் குடிப்பவர்களை திருத்த கட்டிங்கை தடை செய்து குவாட்டர் தான் வாங்க வேண்டும் என சட்டம் வந்தது.
இந்த விஷயம் இப்பொழுது குடிக்க ஆரம்பிச்ச பசங்களுக்கு தெரிய சாத்தியம் இல்லை.
தெரிந்து கொள்ளுங்கள்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

ஆனால் என்ன நடந்தது?
நாள் முழுக்க வேலை செய்து அழுப்பில் ஒரே ஒரு கட்டிங் சாப்பிட்டுவிட்டு சமத்தாக வீட்டுக்கு போய்விடும் உழைப்பாளிகள் எல்லாம் பாட்டில் பாட்டிலாக வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.
ஒரு பாட்டிலை வாங்கிவிட்டு பழையபடி தினமும் ஒரு கட்டிங் மட்டும் குடிக்க இங்கு எவனும் புத்தன் இல்லை.

முடிவில் தினமும் உடல் வலிக்கு ஒரு டம்ளர் குடித்தவன் தினமும் ஒரு பாட்டில் குடிக்கும் குடிகாரன் ஆனான்.
அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.
அரசாங்கத்தின் வருமானம் அசுர வளர்ச்சி கண்டது.
இது நம் வரலாறு.

இன்று மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் தான் இது

எவனும் ஒரு பாக்கெட் சிகரெட்டை சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு பூஜை செய்ய போவதில்லை.
முன்பு நாளைக்கு இரண்டு சிகரெட் குடித்தவன் இனி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பான்.
புற்று நோய் வந்து சாவான்.
சாகட்டுமே!
அவன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும்.
வரட்டுமே!
அதற்கு தானே இத்தனை கோடி பேர் உங்களுக்கு ஓட்டு போட்டு அரியனை ஏற்றி இருக்கிறோம்.

அடுத்த கட்சியை பற்றி குறை கூற எத்தனை ஆராய்ச்சி செய்கிறீர்கள்.??!! பல வருடங்களுக்கு முன்னால் நடந்ததை தேதியுடன் ஞாபகபடுத்தி குறை சொல்லி அறிக்கை விடுகிறீர்கள்.
இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு கொஞ்சம் அதன் சாத்தியகூறுகளை ஆராயந்தால் என்ன குறைந்தா போய்விடும்??

நம்மை நாமே காத்துகொள்ளவில்லை எனில் இவர்கள் போடும் சட்டமே நமக்கு சங்கூதிவிடும் போல!!


பிரபு மித்ரன்






Saturday, 29 November 2014

சினிமா விபச்சாரிகள்

ஒரு முன்னனி நடிகனின் படம் வர இரண்டு நாள் இருந்த சமயம்
அதை பற்றி ஒரு பேச்சு என் காதில் விழ நேர்ந்தது
“அவன் படத்துல என்னடா இருக்க போகுது??
ஒன்னா அம்மா வ காப்பாத்துவான் இல்ல தங்கச்சிய காப்பாத்துவான்
அப்படியும் இல்லனா ஊர காப்பாத்துவான்”
இப்படி ஒருவன் பேசி கொண்டிருந்ததான்.

இல்லை நான் கேட்கிறேன்
அம்மா தங்கை பாசம் யென்ன அவ்வளவு கேவலமான செயலா??
அதை ஏன் இவ்வளவு அசிங்கமாக சொல்கிறார்கள்??

இவர்களை சொல்லி தப்பில்லை.
சினிமாவை புரட்டி போடுகிறேன் என ஒரு கூட்டம் சுத்துகிறதே அதை சொல்ல வேண்டும்.
ஒரு காலத்தில் நல்லவர்களையும்...தியாகிகளையும்.. புரட்சியாலனையும் கதாநாயகனாக காமித்தவர்கள்
இப்பொழுது  குடிகாரனையும்...கொலைகாரனையும்...கொள்ளைகாரனையும்...பொம்பளைபொருக்கியையும் நாயகர்களாக காமிக்கிறார்கள்.
உடனே ரசிகன் மாறிவிட்டான் என அவன் மேல் பழி போட்டு விடுவார்கள்.
எந்த ரசிகனும் உன் சட்டையை பிடித்து குடிகாரனை நாயகனாக வைக்க சொல்லி கேட்கவில்லை.
நீ தான் உன் சுய லாபத்திற்கு ரசிகனின் ரசனையை மாற்ற பார்க்கிறாய்.
எல்லாரும் ஒரு விதத்தில் படம் எடுத்தால் நான் வித்யாசமாக செய்கிறேன் என ஆரம்பித்து இப்பொழுது வரும் அத்தனை படங்களும் இப்படி சினிமாவை சகதியாக மாற்றிவிட்டது.

“கவிதை போல படம் எடுக்கனும் என சொல்லி கொண்டிருந்த இயக்குனர்கள் இப்பொழுது “ரத்தம் தெரிக்க தெரிக்க ஒரு படம் பன்னனும்” னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மாமனாருக்கும் மருமகளுக்கும் நடுவில் நடக்கும் ஒரு விரசத்தை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுத்தான்.
அதை கேட்டதற்கு
“உலகத்தில் நடக்காததா எடுக்கிறேன். நடப்பதை வைத்து தான் எடுக்கிறேன்” என அதற்கு விளக்கம் சொன்னார்.
ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சாக்கடையை கையில் வாரி எடுத்து ரோட்டில் போபவர்கள் மீதெல்லாம் தெளிப்பது போல
இந்த பைத்தியகாரர்கள் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் ஒரு அசிங்கத்தை வெளிச்சம் போட்டு ஊருக்கே காட்டி ஒட்டு மொத்த சமூகத்தையும் நாரடித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் சாமியார்களும் மதவாதிகளும் நிறைந்திருந்தாளும் நம் தமிழ் நாட்டில் மட்டும் எந்த மதக் கட்சியும் இன்று வரை வேரூண்ற முடியவில்லையே!!!
அது ஏன் என்று தெரியுமா???
இதே சினிமா தான் காரணம்


1950-1970 ஆம் வருடங்களில் வரிசை கட்டிக்கொண்டு வந்த திராவிட கொள்கைகளும் பகுத்தறிவு சிந்தனைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஒரு தலைமுறையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது.
உலகிலேயே வேறு எவருக்கும் இல்லாத மொழிப்பற்று நம்மிடம் மட்டும் இருக்க காரணம் அப்பொழுது வந்த சினிமாக்கள் தான்.
சினிமாவை மிக சரியாக பயன்படுத்திய காலகட்டம் அது.
இயக்குனர்கள்...கதாசிரியர்கள்...நடிகர்கள்...பாடலாசிரியர்கள் என ஒவ்வொருத்தரும் அவரவர் பொறுப்புணர்ந்து சமூகத்திற்காக போராடிய காலக்கட்டம்.

எம்.ஜி.ஆர் “திருடாதே..பாப்பா திருடாதே” என பாடிய பொழுது எத்தனை திருடர்கள் திருந்தினார்கள் என தெரியுமா?
ரஜினி கண் தானம் செய்த பொழுது எத்தனை ரசிகர்கள் கண் தானம் செய்தார்கள் என அப்பொழுது வந்த நாளிதழ்களை புரட்டி பாருங்கள்.
இது தான் அன்றைய சினிமா.
தாங்கள் கனவு காணும் சமூகத்தை திரையில் காட்ட நினைத்தார்கள்.
அந்த திரைப்படங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எப்பொழுதும் சமூகம் சினிமாவை பிரதிபளிக்கும்.

இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோம்???
எந்த சமூக பிரச்சனையை வைத்து படம் எடுக்கிறோம்?

ஒவ்வொரு மனிதனும் தன்னை ஹீரோவாக தான் நினைத்துக் கொள்கிறான்.
அவன் பார்க்கும் சினிமாவில் வரும் ஹீரோவை அந்த இரண்டு மணி நேரமும் தன்னை தானே அந்த ஹீரோவாக என்ணி படம் பாக்கிறான்.
அந்த கதாபாத்திரம் என்ன சொல்கிறதோ அது அவனுள் விதைக்க படுகிறது.
அந்த விதை நல்லதாக இருந்தால் மாற்றமும் நல்லதாக தான் நடக்கும்.
கெட்டதாக இருந்தால்????

இன்று பேப்பரில் வரும் பாதி குற்ற செய்திகளுக்கு காரணம் இந்த சினிமா தான் என அடித்து சொல்லுவேன்.


பணம் பணம் என அலையும் ஹீரோ... (!)
பெண் பித்து பிடித்து பின்னால் சுத்தும் ஹீரோ... (!).
எப்பொழுதும் குடித்துக்கொண்டிருக்கும் ஹீரோ....(!)
அருவாலும் கையுமாக சுத்தும் ஹீரோ....(!)

ஒரு கதையில் எந்த கதாபாத்திரத்தின் மேல் வெளிச்சம் படுகிறதோ அது தான் கதாநாயகன்.
அந்த காலத்தில் எவனை எல்லாம் நம் சினிமா வில்லனாக பார்த்ததோ அவனை எல்லாம் இன்று ஹீரோவாக்கிவிட்டார்கள்.
ஒன்றுமில்லை
குடிப்பதை தவறு என சொல்ல ஒரு படம் இருக்கிறதா??
குடியை காட்டாமல் இங்கு ஒரு படமும் வருவதில்லை அது தான் உண்மை.

சமுதாயத்தில் நடப்பதை சினிமாவில் சொல்கிறோம் என்கிறீர்களா?
அதை சொல்ல நாளிதழ்கள் இருக்கிறது.
சமுதாயத்தை மாற்ற எதாவது சொல்லுங்கள்.
புண்ணியமா போகும்.

வித்யாசமாக எடுக்க வேண்டும் என எடுக்கிறேன் என்கிறீர்களா??
மனிதன் தோன்றிய காலம் முதல் வாயால் தான் சாப்பிடுகிறான்.
அதில் வித்யாசம் எதிர்பார்த்தால் என்ன ஆகும்.???
முடிந்தால் செய்து பாருங்கள்.

வித்யாசமாக சொல்ல ஆயிரம் நல்ல விஷயங்கள் இருக்கிறது.

“தாலி சென்டிமென்ட்” என்ற வார்த்தையே நம் நாட்டில் தாலி மேல் இருந்த மரியாதையை ஏதோ ஓல்டு ஃபேஸன் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டது.
அதை செய்ததும் இந்த சினிமா தான்.


“பாசமலர்” போன்ற உறவுகளை கொண்டாட பட்ட அதே சினிமா தான் இன்று “சிந்து சமவெளி” போன்ற அசிங்கத்தை தந்து கொண்டிருக்கிறது
“மனதில் உறுதி வேண்டும்” என பெண்களை தலை நிமிரவைத்த சினிமாக்கள் எடுத்த இதே ஊரில் தான் “ஐட்டம் சாங்க்” என்ற ஜிகினா பெயரில் பெண்னை துகிழுரித்து கொண்டிருக்கிறீர்கள்.

சமீபத்தில் வந்த ஒரு படத்தில் கர்பமாக இருக்கும் கதாநாயகியை நான்கு பேர் கொட்டும் மழையில் கற்பழிக்கிறார்கள்.
ப்துஊ......
என்ன ஒரு வக்ரமான சிந்தனை..
இது சமூதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..
நாளை உன் மனைவி குழந்தையுடன் அந்த சினிமாவை எப்படி பார்ப்பாய்???
அந்த காட்சியை எத்தனை கர்பிணிகள் பார்த்து பதறியிருப்பார்கள்???
அது தான் வேண்டுமா??

குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கிறது.
அதை மாற்ற வழி சொல்லுங்கள்.

மனிதன் இயந்திரமாக மாறி விட்டான்
அதை மாற்ற எதாவது சொல்லுங்கள்.

பாலியல் வன்முறையை எதிர்த்து உங்கள் படங்களில் குரல் கொடுங்கள்

இப்படி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு உங்கள் படத்தில் தீர்வு சொல்லுங்கள்.

நீங்கள் மட்டும் ஒரு மாற்றத்திற்காக உங்கள் திரைப்படங்கள் மூலம் போராடினால் இரண்டே வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்க்கு  அதன் தாக்கம்  இந்த சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும்.

அப்படி எல்லாம் படம் எடுத்தால் ரசிக்க மாட்டார்கள் என சொல்கிறீர்களா??
ரசிப்பது போல் நீ படம் எடு.
எடுக்க தெரியவில்லை எனில் சினிமாவை விட்டு ஓடிவிடு.
கலை என்பது மக்களை நல்வழி படுத்த பயன்படட்டும்.
கலையை வியாபாரம் செய்வதற்க்காக கொச்சை படுத்தினால்
நீங்கள் கலைஞர்கள் இல்லை.
விபச்சாரிகள்.
சினிமா விபச்சாரிகள்.


பிரபு மித்ரன்


Saturday, 15 November 2014

காதல் சொல்ல வந்தேன்- சிறுகதை




இன்று கண்டிப்பாக சொல்லிவிடுவேன்
அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.

ஒரு வேளை இப்பொழுது இருக்கும் நட்பும் கெட்டுவிட்டால் என்ன செய்ய??
எல்லாம் யோசித்தாகிவிட்டது.

அந்த நட்புக்காக தான் நான்கு வருடம் எனக்குள்ளயே வைத்திருந்தேன். இனி முடியாது.
ஒரு வேளை முடியாது என சொல்லிவிட்டால்??
சொன்னால் சொல்லிட்டு போகட்டும். அதனால் என்ன?
அதனால் என்னவா?

நான் காலை எழுந்ததும் முதல் நினைப்பதும் அவள் தான்.
அப்பொழுது ஆரம்பித்து இரவு தூங்குவதற்கு முன்புவரை அவளிடம் தான் பேசிகொண்டிருக்கிறேன்.
கனவிலும் அவள் தான்.
ஒரு வேளை அவள் இன்று முடியாது என சொல்லிவிட்டால் நாளை நான் என்ன செய்ய!! அவ இல்லைனா வாழ்கை போர் அடித்துவிடும்.
அப்பறம் நான் குடிப்பேன்.
தாடி வைப்பேன்.
இளையராஜா பாட்டுக்களாக கேட்பேன்.
அவள் என்னை பார்க்கும் பொழுதெல்லாம் நான் முகத்தை சோகமாக வைத்துக்கொள்வேன்.
தூங்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் அழுவேன்
பரவாயில்லை.
அவளுக்காகதானே!! 

என்ன தான் அவ்வளவு சோகங்கள் இருந்தாலும் ஆண்களுக்கு தன்னை “லவ் ஃபெய்லியர்” என சொல்லிகொள்வதில் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது.

அய்யய்யோ நான் இன்னும் லவ்வே சொல்லவில்லை அதற்குள் லவ் ஃபெய்லியருக்கு தயாராகிவிடேன்.

என்ன ஆனாலும் சொல்லிவிடுவேன்.
ஃப்ரெண்டாக இருந்தால் லவ் பண்ண கூடாதா.!!
அவள் அப்படிதான் சொல்லுவாள்
நான் விடுவதாக இல்லை.
எந்த ஃப்ரெண்டை நாம் தூரத்திலிருந்து பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம்.
நான் செய்திருக்கிறேன்
பனிமூட்டத்துக்கு நடுவே பளிங்குகல்லில் செய்யபட்ட தாஜ்மஹாலை பார்ப்பது போல அவளை பார்த்துகொண்டே இருந்திருக்கிறேன்.
அது பெயர் நட்பா??
அவள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒலியே இல்லாமல் பாலு மஹேந்திரா படம் பார்ப்பது போல அவளை கண் இமைக்காமல் பார்த்திருக்கிறேன்.
நான் கொஞ்சம் சினிமா பைத்தியம்.
அது அவளுக்கும் தெரியும்.
ஆனால் நான் இன்று என் காதலை சொல்லும் பொழுது அது எந்த சினிமாவிலும் வராத அளவுக்கு சொல்ல வேண்டும்.
இந்த நான்கு வருடத்தில் நாலாயிரம் தடவை சொல்லியிருப்பேன். பாத்ரூம் கண்ணாடி முன்னால்.

அத்தனை ஒத்திகைக்கும் இன்று தான் கடைசி நாள்.
என்னை பொறுத்த வரையில் தோழிக்கும் காதலிக்கும் பெயர் மட்டும் தான் வித்யாசம்.
அதை அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே.

வேண்டாம் என சொல்லிவிட்டால் என்னால் தாங்கிகொள்ள முடியாது.
என்னை கேவலமாக நினைத்துவிட்டால் நான் உயிரோடே இருக்க முடியாது.
ஒரு வேளை என்னை அசிங்கமாக திட்டிவிட்டால்.
கடவுளை வேண்டிகொண்டேன். அப்படி எதுவும் நடந்துவிட கூடாதென.
அவள் வருகிறாள்.
உள்ளுக்குள் லேசான..இல்லை இல்லை... பயங்கரமான நடுக்கம்.
பக்கத்தில் வந்து விட்டாள்.
அதே பாலு மஹேந்திரா படம் போல
ரசிக்க நேரமில்லை
சொல்கிறேன்
“இவ்வளவு நாளா....”
அய்யோ இப்போனு பார்த்து வர மாட்டிங்குதே...
இவ்வளவு நாளா எனக்கு நீ சந்தோஷத்தை மட்டும் தான் குடுத்திருக்க.
வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு....
இனிமேல் நான் அதை திருப்பி குடுக்கனும்னு ஆசை படுறேன்.
உன் வாழ்கை ஃபுல்லா..
என்னை....
என்னை லவ் பன்னுவியா????
ஹப்பா சொல்லிட்டேன்
நாலு வருஷம் வராத தைரியம் இன்னைக்கு வந்திடுச்சு
அவ லேசா சிரிக்குறா
ஐஐஐ........
இன்னும் நல்லா சிரிக்குறா..
ரொம்ப சிரிக்குறா...
எனக்கு ஏன்னு புரியல... இந்த ரியாக்சன நான் எதிர்பாக்கவே இல்லையே..
சிரிச்சுட்டே எதோ சொல்ரா..
“டேய் மொக்க.... ஏப்ரல் ஃபூல் பன்ன வேர ஐடியாவே கிடைக்கலயா??... லூசு.... போடாங்க...” சொல்லிவிட்டு சிரித்து கொண்டே என்னை கடந்து போகிறாள்.
ஆம் இன்று தேதி ஏப்ரல் 1
காதலே முட்டாள் தனம். அதை முட்டாள்கள் தினத்தன்று சொன்ன நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பேன்.
எனது நான்கு வருட உழைப்பு இப்படி வீணாகிவிட்டதே.
இதற்கு சிரிப்பதா இல்லை அழுவதா!!!!

இப்பொழுது
எனக்கு இளையராஜா இசை கேட்க வேண்டும் போல இருக்கிறது.


பிரபு மித்ரன்

ஒரு பெயர் தெரியாத தெரசா



காலை 8 மணி
 
இன்று ஏனோ மழை இல்லை
 
கொஞ்சம் மேக மூட்டமாகவும் கொஞ்சம் வெயிலாகவும் இதமாக இருந்தது
நான் அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்ததில் நின்றிருந்தேன்
எனக்கு பஸ் வர இன்னும் நேரம் இருந்தது.
 
அது வரை என்ன செய்யலாமென்று யோசித்துகொண்டிருந்தேன்
அருகில் வயர் கூடையோடு ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க அம்மா நின்றிருந்தார்
ஒருவர் என்ன பேசிகொண்டிருக்கிறார் என்று உற்று கவனித்தால் அவர்கள் வாழ்கையை நாம் ஒரளவு படித்துவிட முடியும்.
இந்த அம்மாவின் வாழ்கையை படிக்கலாமென நினைத்தேன்.
இப்போதைக்கு இவரை பற்றி எதுவுமே தெரியாது.
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
 
 ஒரு மாசமா எங்கையும் வேலையே இல்ல...இந்த மழையால.....இன்னைக்கு தான் போறேன்” என்று தன் அருகில் இருந்த பெண்ணிடம்(அவருக்கு தெரிந்தவர் என நினைக்கிறேன்) சொல்லிகொண்டிருந்தார்.
என்னை போன்ற ஒரு சிலருக்கு ‘இதமாக’ இருக்கும் இந்த மழை மற்றொருவருக்கு ‘இடியாக’ இருக்கிறது. இந்த உலகம் விசித்திரமானதுதான்.!!
இவர் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது இவர் செய்யும் வேலை மழையால் பாதிக்க கூடியது. வயல் வேலையாகவோ இல்லை சித்தால் வேலையாவோ இருக்கலாம்.
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்           :தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
 
 “ஒரு மாசமா வேளை இல்லையாக்கா?? எப்படி சமாலிச்சீங்க?? கஸ்டம் ல!!” என அவரிடம் அந்த பெண் ஆச்சரியமாக கேட்டாள்.
“ஆமா. ஆன பஸ்க்கு போகுற காசு மிச்சம்ல. காலைல 10..சாயந்திரம் 10 ரூவா. அத வச்சு தான்”
 
எனக்குள்ளவே கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு நாளைக்கு 20 ரூபாய் என்றால் மாசம் 600 ரூபாய் மிச்சமாகும். அதை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்ன!! நாம் KFC லயும்  MC.Donalds   லயும் ஒரு வேளை சாப்பிடவே இந்த 600 ரூபாய் பத்தாது. நாம் சாப்பிடும் அந்த ஒரு சிக்கன் பீஸில் ஒரு குடும்பமே ஒரு மாதம் சாப்பிடுகிறது. ஆச்சரியமாக இருந்தது ஆனாலும் உண்மை. இதை நமது ஒரு மாத செலவுக்கு ஒப்பிடும் பொழுது நமக்கு அவசியம் என நினைக்கும் சில செலவு கூட இப்பொழுது நக்கலாக சிரிக்கும்.
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்           :தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     :வருமை கோட்டுக்கு கீழ்

மழை வந்துவிட கூடாது என மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.
“பையன் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கான்”
“என்ன செய்றான்?..வேலைக்கு எல்லாம் போரது இல்லையாக்கா?”
“இல்லை, வீட்டுல தான் இருக்கான்” சொன்ன அந்த அம்மாவை பார்க பாவமாக இருந்தது.
“வீட்டு வேலை எதாவது செய்வானா?”
“அதெல்லாம் எல்லா வேலையும் செய்வான்” தன் மகனை விட்டு தராத அந்த அம்மா சொன்னாள். இது அம்மாக்களுக்கு மட்டுமே உள்ள குணம் போல!! எனக்கு வேளை இல்லாமல் சுற்றிய நாட்கள் ஞாபகம் வந்து விட்டது
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : ஒரு வேலை இல்லாத மகன்
 
அவர் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் போக வேண்டிய பஸ் வந்ததும் விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இன்னும் நான் போக வேண்டிய பேருந்து வரவில்லை.வாட்சை பார்த்தேன்.
 
மணி 8:20.

அந்த அம்மா-வுக்கும் இன்னும் பஸ் வரவில்லை
எல்லா பேருந்திலும் நல்ல கூட்டம். படிகளில் கலர் கலராக பள்ளி சீருடை கூட்டம் தொங்கிகொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னையும் இப்படிபட்ட ஒரு தொங்களில் பார்க்கலாம்.

நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே இந்த அம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வந்தார்
“என்னம்மா..நல்லா இருக்கீங்களா?”
 
“நல்லா இருக்கேன்ங்க.. நீங்க எப்டி இருக்கீங்க?..வீட்டுல எல்லாம்”

“எல்லா நல்லா இருக்காங்கமா.. என்ன ரொம்ப நாளா பாக்க முடியல”

மழை கொண்டு வந்த கஷ்டத்தை பட்டும் படாமலும் சொன்னாள்.

“பையன் வேலைக்கு எதாவது போறானா..இல்லை சும்மாதான் இருக்கானா?”
ஏண்டா எல்லாரும் இதையே கேக்குறீங்க!! எனக்கு அந்த அம்மாவின் நிலை பாவமாக இருந்தது. இப்படி எத்தனை அம்மாக்கள் பதில் சொல்ல கஷ்டப்படும் கேள்வியை எதிர்கொள்கிறார்களோ!!

“பையனுக்கு என்ன வயசாகுது?”

“கார்த்திகை வந்தால் 32 வயசுங்க”
32 வயசாகியும் வேலைக்கு போகாம இருக்கானா!! இப்போ அந்த பையன் மேல் தான் கோபம் வந்தது. வயதான அம்மா கூலி வேளைக்கு போய் சம்பாதிப்பதில் சாப்பிடுகிறானா?? ச்சே.

Updated info
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : ஒரு வேலை இல்லாத 32 வயது உதவாக்கரை மகன்
 
இன்னும் சிலவற்றை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
மறுபடியும் அவர் அந்த அம்மாவின் மகனை பற்றி கேட்க ஆரம்பித்தார். இவன் விட மாட்டான் போல. அப்படி மற்றவர்களை காய படுத்துவதில் என்ன கிடைக்கிறது இவர்களுக்கு.

“பையனால இப்போ நடக்க முடியுதா..இல்ல முன்ன மாதிரிதானா?”

எனக்கு இந்த கேள்வி தூக்கி வாரி போட்டது. சில சமயம் நாம் பார்க்கும் விஷயங்களுக்கு மற்றொரு பரிமானமும் இருக்கும் என நினைக்க மறந்து விடுகிறோம். தப்பு செய்து விட்டேன்.

Updated info
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : 32 வயது மகன் (நடக்க முடியவில்லை என்றாலும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்யும் தங்கமான மகன்)

“நடக்க மாட்டான். ஆனா தவழ்ந்து தவழ்ந்து எல்லா வேலையும் செஞ்சுக்குவான். கெட்டிக்காரன்” (என்ன ஆனாலும் தன் மகனை விட்டு கொடுக்கமாட்டாள் போல. பெருமையாக இருந்தது அவளை பார்க்க)
“எதாவது ஆப்ரேஷன் பன்னுனா சரி ஆகுமானு பாத்தீங்களா?”
“எல்லாம் பாத்தாச்சுங்க. 4 லட்சம் ஆகுமாமா. அப்பவும் நடப்பானான்னு உறுதியா சொல்ல முடியாதுனு சொல்லிட்டாங்க”

என்னால் அதற்க்கு மேல் அவர்கள் பேசுவதை  கேட்க முடியவில்லை. என்னை என்னமோ செய்கிறது. அய்யோ எவ்வளவு கொடுமை. மாதம் 600 ரூபயில் குடும்பம் நடத்தும் இந்த அம்மாவால் எப்படி 4 லட்சம் குடுத்து வைத்தியம் பார்க்க முடியும்.
இப்பொழுதே 50 வயதை கடந்து இருக்கும் இந்த அம்மாவால் இன்னும் எவ்வளவு நாள் இப்படி கூலி வேளை பார்க்க தெம்பு இருக்கும்!! அப்படி பட்ட நிலைமை வரும் பொழுது இருவரும் என்ன செய்ய முடியும்.
தினம் தினம் தவழ்ந்து நடந்து கொண்டிருக்கும் தன் மகனை பார்க்க எவ்வளவு வலியை அந்த அம்மா தாங்க வேண்டும். நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இனி சாகும் வரை தன் மகனை அப்படி தான் பார்க்க வேண்டுமா?
இந்த அம்மாவுக்கு பிறகு அவரை யார் பார்த்துகொள்வார்கள் கவலையிலேயே வாழ வேண்டுமா?
இன்னும் பல பதில் தெரியாத வலி நிறைந்த கேள்விகள்.
என்னால் அதை நினைக்க முடியவில்லை

ஒரு பேருந்து வந்து வழக்கம் போல நிருத்தத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நிற்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுகிறார்கள். ஒரு கால் மட்டும் படியில் வைத்துக்கொண்டு இன்னொரு கால் காற்றில் ஆட தொங்கிகொண்டிருக்கிறார்கள். பேருந்து கிளம்புகிறது.
பக்கத்திலிருந்த அம்மா சொல்கிறாள்
“அய்யோ இப்படி பசங்க தொங்கிட்டு போறாங்களே!! எங்காவது கீழ கீது விழுந்து கை கால் எதாவது ஆனா என்ன பன்றது!!!!”
உண்மையான பதட்டத்துடன். அவளுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி.

நம்மை சுற்றி இப்படி பெயர் தெரியாத எத்தனையோ அன்னை தெரசாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பிரபு மித்ரன்

Related Articles