உன்னிடம்
சொல்வதற்க்கு எதுவுமில்லை..
சொல்லாமல் இருக்க காரணம் ஆயிரம் உண்டு..
சொல்லித் தெரிவதில்லை
நான் சொல்லாமல் சொல்லியதெல்லாம்..
சொல்லியேதீர வேண்டுமென்றால்
கண்டிப்பாக சொல்கிறேன் சொல்லாமல்...
ஆனால் ஒன்று
எண்ணியதை சொன்ன பிறகு
நான் சொன்னதை சொல்வாயா
என்னிடம்?!!
“சொல்கிறேன்” என்றால் நானும் சொல்கிறேன்
“சொல்ல மாட்டேன்” என்றாலும் நான் சொல்லுவேன்
சொல்லாமல்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment