Friday, 9 September 2016

கிருஷ்ண ஜெயந்தி

இன்று கிருஷ்ண ஜெயந்தியாமே!!!
FM இல் சொன்னார்கள்.

கிருஷ்ணன் என்றவுடன் எனக்கு என் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த  சம்பவம் ஞாபகம் வருகிறது

அவர் எப்பொழுதும் எதையாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார்
வேலையை பற்றி..
பணம் காசு பற்றி...
சொந்தக்காரர்களை பற்றி...
எதுவும் கிடைக்கவில்லை என்றால் தனக்கு வந்த கனவை பற்றி கூட புலம்புவார்.
அப்படி ஒரு தேர்ந்த புலம்பர்.

அந்த மாதிரி ஒரு நாள் தன்னுடன் வேலை பார்க்கும் அக்காவிடம் புலம்புகையில்

அந்த அக்கா அவரை நிறுத்தி

"உனக்கு ஒன்னு தெரியுமா?
ராமன் இருக்கார்ல.... அவர் பெரிய மகாராஜா மகனா, ஒரு இளவரசனா அரண்மனைல பிறந்தாரு.. ஆனா அவர் வாழ்க்கைய பாதியை காட்டுல வாழ்ந்து சீதையையும் கஷ்டபடுத்தி
அப்புறம் சீதையை சந்தேகம் கொண்டு தீயில் இறக்கி
அப்புறம் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பி தன் மகன்களைப் பிரிந்து இப்படி வாழ்க்கையே கஷ்டத்துல தான் கழித்தான்.

ஆனா கிருஷ்ணன பாரு
அவன் பிறந்தது சிறையில
பிறந்த உடனே அப்பா அம்மாவை பிரிந்து அநாதையா மாடு மேய்க்கும் வளர்ப்பு பெற்றோர்கிட்ட வளர்ந்தான்
இருந்தாலும் அவன் எப்பவும் தானும் சந்தோஷமாவும் தன்னை சுற்றி இருந்தவர்களையும் தன்னோட குறும்பால் கலகலப்பா வச்சுருந்தான்.

நம்ம வாழ்க்கை நாமலே அமைச்சுக்கிறது தான்.
Life ல எப்பவுமே புலம்புறதுக்கு காரணம் இருந்துட்டே தான் இருக்கும்.
அதுல இருந்து வெளிய வா" என சொல்லி முடித்திருக்கிறார் அந்த அக்கா.

நண்பர் அதை கேட்டுவிட்டு ரெண்டு நாள் அதையே தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

செம இல்ல., நான் அன்னைக்கு தான் first கேட்குறேன்.

சரிங்க.....

எனக்கு இன்னிக்கு லீவ் எல்லாம் இல்லை.
நான் சந்தோஷமா தான்பா சொல்றேன்.
புலம்ப எல்லாம் இல்ல.😂😂

No comments:

Post a Comment

Related Articles