Friday, 9 September 2016

குரங்குத்தனம்

விடிந்து சில நிமிடங்களே கடந்திருக்கும்.

அந்த ரோடும் தெருவும் அப்பொழுது தான் குளித்தது போல பளிச்சென ஈரத்துடன் இருந்தது.
அனைக்க மறந்த தெரு விளக்குகள் மங்கலாக தூங்கி வழிந்து கொண்டிருந்தது.
காற்று வீசுவதே தெரியாதது போல இதமாக வருடிச் சென்றது.

நான் அந்த அமைதியான ரோட்டில் தன்னந்தனியாக ஒரு ஒலிச்சுருக்கியை (ஹெட் செட்) காதில் மாட்டிக்கொண்டு பழைய பாடலை கேட்டவாரு  ஒரு துறவியின் மன நிலையில் பற்றற்று நடந்து வந்து கொண்டிருந்தேன்.

எதிரே தூரத்தில் ஒரு ஸ்கூட்டி வருவது தெரிந்தது.
மெதுவாக என சொல்வதை விட கம்மியான வேகத்தில் ஊர்ந்து வருகிறது.
அதில் நைட்டி அணிந்த 30 வயது மதிக்கதக்க அக்கா ஒருவர் இருந்தார்.
அது ஆடாமல் அசையாமல்  பயணித்து வரும் நேர் கோட்டை பார்த்தால் அவர் ஓட்டி பழகுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
முகத்தை ஒரு வித இறுக்கத்தில் வைத்திருந்தார்
விழுந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையால் என நினைக்கிறேன்.

அதே மெதுவான வேகத்தில் எனக்கு அருகில் வந்த பொழுது...
நான் திடீரென அவரை நோக்கி என் ஒரு காலை முன்னால் வைத்து இரண்டு கைகளையும் விரித்து
"ப்ப்ப்பப்ப்ப்பே......"
என கத்தி பயப்படுத்த வேண்டும் போல இருந்தது.

நல்ல வேளை அப்படி எல்லாம் எதுவும் செய்து வைக்கவில்லை.
சிக்கினால் செருப்படி நிச்சயம் என தெரியும்.

ச்சீ...மோசமானவன்யா நீ!! என்ன ஒரு கெட்ட எண்ணம்.!

அட என்ன செய்ய ..!!?
மனசு அப்படி தான்..... சும்மாவே இருப்பதில்லை....குரங்கு மாதிரி ஏதாவது செய்ய சொல்லிக்கொண்டே இருக்கும்.
நாம் தான் பக்குவமாக அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.

பரவாயில்லை..அதனால் என்ன?
அடுத்தவர்களை காயப்படுத்தாத எந்த ஒரு குரங்குத்தனங்களும் வாழ்கையை சுவாரசியமாக வைத்துக்கொள்ளும்.

அந்த அக்கா என்னை கடந்து போன பிறகு   நினைத்து தனியாக சிரித்துக்கொண்டே நடந்தேன்.

நான் மட்டும் அதை செய்திருந்தால் அடி பிச்சிருப்பார்கள்😁

No comments:

Post a Comment

Related Articles