Saturday, 15 November 2014

ஒரு பெயர் தெரியாத தெரசா



காலை 8 மணி
 
இன்று ஏனோ மழை இல்லை
 
கொஞ்சம் மேக மூட்டமாகவும் கொஞ்சம் வெயிலாகவும் இதமாக இருந்தது
நான் அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்ததில் நின்றிருந்தேன்
எனக்கு பஸ் வர இன்னும் நேரம் இருந்தது.
 
அது வரை என்ன செய்யலாமென்று யோசித்துகொண்டிருந்தேன்
அருகில் வயர் கூடையோடு ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க அம்மா நின்றிருந்தார்
ஒருவர் என்ன பேசிகொண்டிருக்கிறார் என்று உற்று கவனித்தால் அவர்கள் வாழ்கையை நாம் ஒரளவு படித்துவிட முடியும்.
இந்த அம்மாவின் வாழ்கையை படிக்கலாமென நினைத்தேன்.
இப்போதைக்கு இவரை பற்றி எதுவுமே தெரியாது.
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
 
 ஒரு மாசமா எங்கையும் வேலையே இல்ல...இந்த மழையால.....இன்னைக்கு தான் போறேன்” என்று தன் அருகில் இருந்த பெண்ணிடம்(அவருக்கு தெரிந்தவர் என நினைக்கிறேன்) சொல்லிகொண்டிருந்தார்.
என்னை போன்ற ஒரு சிலருக்கு ‘இதமாக’ இருக்கும் இந்த மழை மற்றொருவருக்கு ‘இடியாக’ இருக்கிறது. இந்த உலகம் விசித்திரமானதுதான்.!!
இவர் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது இவர் செய்யும் வேலை மழையால் பாதிக்க கூடியது. வயல் வேலையாகவோ இல்லை சித்தால் வேலையாவோ இருக்கலாம்.
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்           :தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
 
 “ஒரு மாசமா வேளை இல்லையாக்கா?? எப்படி சமாலிச்சீங்க?? கஸ்டம் ல!!” என அவரிடம் அந்த பெண் ஆச்சரியமாக கேட்டாள்.
“ஆமா. ஆன பஸ்க்கு போகுற காசு மிச்சம்ல. காலைல 10..சாயந்திரம் 10 ரூவா. அத வச்சு தான்”
 
எனக்குள்ளவே கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு நாளைக்கு 20 ரூபாய் என்றால் மாசம் 600 ரூபாய் மிச்சமாகும். அதை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்ன!! நாம் KFC லயும்  MC.Donalds   லயும் ஒரு வேளை சாப்பிடவே இந்த 600 ரூபாய் பத்தாது. நாம் சாப்பிடும் அந்த ஒரு சிக்கன் பீஸில் ஒரு குடும்பமே ஒரு மாதம் சாப்பிடுகிறது. ஆச்சரியமாக இருந்தது ஆனாலும் உண்மை. இதை நமது ஒரு மாத செலவுக்கு ஒப்பிடும் பொழுது நமக்கு அவசியம் என நினைக்கும் சில செலவு கூட இப்பொழுது நக்கலாக சிரிக்கும்.
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்           :தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     :வருமை கோட்டுக்கு கீழ்

மழை வந்துவிட கூடாது என மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.
“பையன் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கான்”
“என்ன செய்றான்?..வேலைக்கு எல்லாம் போரது இல்லையாக்கா?”
“இல்லை, வீட்டுல தான் இருக்கான்” சொன்ன அந்த அம்மாவை பார்க பாவமாக இருந்தது.
“வீட்டு வேலை எதாவது செய்வானா?”
“அதெல்லாம் எல்லா வேலையும் செய்வான்” தன் மகனை விட்டு தராத அந்த அம்மா சொன்னாள். இது அம்மாக்களுக்கு மட்டுமே உள்ள குணம் போல!! எனக்கு வேளை இல்லாமல் சுற்றிய நாட்கள் ஞாபகம் வந்து விட்டது
 
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : ஒரு வேலை இல்லாத மகன்
 
அவர் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் போக வேண்டிய பஸ் வந்ததும் விடை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இன்னும் நான் போக வேண்டிய பேருந்து வரவில்லை.வாட்சை பார்த்தேன்.
 
மணி 8:20.

அந்த அம்மா-வுக்கும் இன்னும் பஸ் வரவில்லை
எல்லா பேருந்திலும் நல்ல கூட்டம். படிகளில் கலர் கலராக பள்ளி சீருடை கூட்டம் தொங்கிகொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னையும் இப்படிபட்ட ஒரு தொங்களில் பார்க்கலாம்.

நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே இந்த அம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே அருகில் வந்தார்
“என்னம்மா..நல்லா இருக்கீங்களா?”
 
“நல்லா இருக்கேன்ங்க.. நீங்க எப்டி இருக்கீங்க?..வீட்டுல எல்லாம்”

“எல்லா நல்லா இருக்காங்கமா.. என்ன ரொம்ப நாளா பாக்க முடியல”

மழை கொண்டு வந்த கஷ்டத்தை பட்டும் படாமலும் சொன்னாள்.

“பையன் வேலைக்கு எதாவது போறானா..இல்லை சும்மாதான் இருக்கானா?”
ஏண்டா எல்லாரும் இதையே கேக்குறீங்க!! எனக்கு அந்த அம்மாவின் நிலை பாவமாக இருந்தது. இப்படி எத்தனை அம்மாக்கள் பதில் சொல்ல கஷ்டப்படும் கேள்வியை எதிர்கொள்கிறார்களோ!!

“பையனுக்கு என்ன வயசாகுது?”

“கார்த்திகை வந்தால் 32 வயசுங்க”
32 வயசாகியும் வேலைக்கு போகாம இருக்கானா!! இப்போ அந்த பையன் மேல் தான் கோபம் வந்தது. வயதான அம்மா கூலி வேளைக்கு போய் சம்பாதிப்பதில் சாப்பிடுகிறானா?? ச்சே.

Updated info
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : ஒரு வேலை இல்லாத 32 வயது உதவாக்கரை மகன்
 
இன்னும் சிலவற்றை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
மறுபடியும் அவர் அந்த அம்மாவின் மகனை பற்றி கேட்க ஆரம்பித்தார். இவன் விட மாட்டான் போல. அப்படி மற்றவர்களை காய படுத்துவதில் என்ன கிடைக்கிறது இவர்களுக்கு.

“பையனால இப்போ நடக்க முடியுதா..இல்ல முன்ன மாதிரிதானா?”

எனக்கு இந்த கேள்வி தூக்கி வாரி போட்டது. சில சமயம் நாம் பார்க்கும் விஷயங்களுக்கு மற்றொரு பரிமானமும் இருக்கும் என நினைக்க மறந்து விடுகிறோம். தப்பு செய்து விட்டேன்.

Updated info
பெயர்             : தெரியாது
வயது             : 50-60
தொழில்          : தினக்கூலி(வயல் வேலை/சித்தால்)
            பொருளாதாரம்     : வருமை கோட்டுக்கு கீழ்
குடும்பம்          : 32 வயது மகன் (நடக்க முடியவில்லை என்றாலும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்யும் தங்கமான மகன்)

“நடக்க மாட்டான். ஆனா தவழ்ந்து தவழ்ந்து எல்லா வேலையும் செஞ்சுக்குவான். கெட்டிக்காரன்” (என்ன ஆனாலும் தன் மகனை விட்டு கொடுக்கமாட்டாள் போல. பெருமையாக இருந்தது அவளை பார்க்க)
“எதாவது ஆப்ரேஷன் பன்னுனா சரி ஆகுமானு பாத்தீங்களா?”
“எல்லாம் பாத்தாச்சுங்க. 4 லட்சம் ஆகுமாமா. அப்பவும் நடப்பானான்னு உறுதியா சொல்ல முடியாதுனு சொல்லிட்டாங்க”

என்னால் அதற்க்கு மேல் அவர்கள் பேசுவதை  கேட்க முடியவில்லை. என்னை என்னமோ செய்கிறது. அய்யோ எவ்வளவு கொடுமை. மாதம் 600 ரூபயில் குடும்பம் நடத்தும் இந்த அம்மாவால் எப்படி 4 லட்சம் குடுத்து வைத்தியம் பார்க்க முடியும்.
இப்பொழுதே 50 வயதை கடந்து இருக்கும் இந்த அம்மாவால் இன்னும் எவ்வளவு நாள் இப்படி கூலி வேளை பார்க்க தெம்பு இருக்கும்!! அப்படி பட்ட நிலைமை வரும் பொழுது இருவரும் என்ன செய்ய முடியும்.
தினம் தினம் தவழ்ந்து நடந்து கொண்டிருக்கும் தன் மகனை பார்க்க எவ்வளவு வலியை அந்த அம்மா தாங்க வேண்டும். நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இனி சாகும் வரை தன் மகனை அப்படி தான் பார்க்க வேண்டுமா?
இந்த அம்மாவுக்கு பிறகு அவரை யார் பார்த்துகொள்வார்கள் கவலையிலேயே வாழ வேண்டுமா?
இன்னும் பல பதில் தெரியாத வலி நிறைந்த கேள்விகள்.
என்னால் அதை நினைக்க முடியவில்லை

ஒரு பேருந்து வந்து வழக்கம் போல நிருத்தத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நிற்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுகிறார்கள். ஒரு கால் மட்டும் படியில் வைத்துக்கொண்டு இன்னொரு கால் காற்றில் ஆட தொங்கிகொண்டிருக்கிறார்கள். பேருந்து கிளம்புகிறது.
பக்கத்திலிருந்த அம்மா சொல்கிறாள்
“அய்யோ இப்படி பசங்க தொங்கிட்டு போறாங்களே!! எங்காவது கீழ கீது விழுந்து கை கால் எதாவது ஆனா என்ன பன்றது!!!!”
உண்மையான பதட்டத்துடன். அவளுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி.

நம்மை சுற்றி இப்படி பெயர் தெரியாத எத்தனையோ அன்னை தெரசாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பிரபு மித்ரன்

2 comments:

Related Articles