Tuesday, 3 March 2015

நிர்பயா வழக்கு: குற்றவாளியின் துணிச்சல் பேட்டி




டெல்லியின் இளம் பெண்கள் ஒன்று திரண்டு 'என் உடல்.. என் உரிமை..' என்ற கோஷம் போட வைத்த சம்பவம்.
ஓடும் பஸ்சில் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்து பின்னர் நிர்வாணமாக சாலையில் வீசி சென்ற படு பயங்கர காட்டுமிராண்டித்தனம்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இதில் குற்றவாளிகள் முகேஷ் சிங் (26) என்பவன் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நான்கு பேரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சியில் "இந்தியாவின் மகள்" என்ற தலைப்பில் ஒளிபரப்புவதற்காக, சிறையில் உள்ள முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்துள்ளனர். இந்த பேட்டி வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ளது.

பேட்டியில் முகேஷ் சிங் கூறியிருப்பதாவது:



பலாத்காரம் நடைபெறுவதற்கு ஆணை விட பெண்ணுக்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இரவு நேரத்தில் வெளியில் சுற்றித் திரியும் பெண்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள்தான் ஆண்களை கவர்ந்திழுக்கிறார்கள்.

அன்று நடந்தது ஒரு விபத்துதான். பலாத்காரம் நடக்கும் போது அந்தப் பெண் திருப்பி சண்டை போட்டிருக்க கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும். பலாத்காரத்துக்கு அனுமதித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணை கும்பல் பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கும். 

ஆண் நண்பரை மட்டும் தாக்கி இருப்போம். 
அவர்கள் திருப்பி தாக்கியதால்தான், நாங்கள் அவர்களை கொடூரமாக தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. 


இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். 

நாகரிகமான இளம்பெண் இரவு 9 மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்க மாட்டாள். எனவேதான் பலாத்கார விஷயத்தில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்புள்ளது என்கிறேன்.

ஆணும் பெண்ணும் சமம் அல்லர். வீட்டு வேலைகள், வீட்டைப் பராமரிப்பதுதான் பெண்களின் வேலை. 

அரை குறை ஆடை அணிந்து கொண்டு டிஸ்கோக்களுக்கும் பார்களுக்கும் இரவு நேரங்களில் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவது பெண்களின் வேலை இல்லை.

வெறும் 20 சதவீத பெண்கள்தான் நல்லவர்களாக இருக்கின்றனர்.


என்னையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தூக்கில் போட்டால், எதிர்காலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும்.


மரண தண்டனைப் பெண்களுக்கு பிரச்சினையை மேலும் பயங்கரமாக்கி விடும்.


இதற்கு முன்பெல்லாம் பலாத்காரம் நடந்த போது அதில் ஈடுபட்டவர்கள், ‘அவளை விட்டுவிடு.. வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள்’ என்பார்கள்.

இனிமேல் பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொன்று விடுவார்கள்.
”                          

இவ்வாறு முகேஷ் சிங் கூறியுள்ளான்.


இவன் சொல்வது என்ன தவறு இருக்கிறது??

உண்மை தானே!

இவனுக்கு மரண தண்டனை குடுத்ததுக்கு அப்புறமும்

இவனிடமிருந்து இவ்வளவு தைரியமாக...


இவ்வளவு திமிராக..

இப்படி ஒரு பதில் வருகிறது  என்றால் தப்பு யார் மேல்?

இவனுக்கு மரண தண்டனை கொடுத்து கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா??

எல்லோரும் திருந்தி விடுவார்களா?


இவன் பேசியதில் ஒரு இடத்தில் கூட இவன் செய்தது தவறு என்ற சின்ன குற்ற உண்ர்ச்சி கூட இல்லையே!!

அப்புறம் இவனுக்கு எதற்கு இந்த தண்டனை?

நம் திருப்திக்காகவா?

இல்லை அந்த பெண்ணின் ஆன்மா சாந்தியடையவா?
உண்மையாகவே சாந்தி அடைந்து விடுமா??
சத்தியமாக அடையாது..

அவன் சொல்வதை பாருங்கள்

இவர்கள் கற்ப்பழித்த பொழுது அந்த பெண் எதிர்த்து சண்டை போட்டிருக்கக் கூடாதாம்
அமைதியாக கண்ணை மூடி படுத்திருக்க வேண்டுமாம்.

ப்தூஊஊஊஊ

இதை பேட்டி எடுத்த நாயிக்காவது கோவம் வந்து அங்கயே மிதித்திருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை
அவங்களுக்கு டி.ஆர்.பி தானே வேண்டும்

இத்தனை நடந்தும் இவனுக்கு எப்படி இப்படி ஒரு கருத்து வாயில் வரும்??

அப்போ செத்து போன பெண்?
அவள் செத்தது செத்தது தானே!

இரத்தமும் சதையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் தனே!!

வலி மட்டும் பெண்ணுக்கா??

அவளுக்கு போனது உயிர் இல்லையா??

இந்த மாதிரி நாய்களுக்கு இதை எப்படி புரிய வைப்பது!

புரிய வைக்க வேண்டுமே
எப்படி?

அவனை விடுதலை செய்ய வேண்டும்

சும்மா இல்லை
விடுதலை செய்து அவனுக்கு என்ன என்ன வேண்டுமோ எல்லாத்தையும் கொடுக்க வேண்டும்

ஆனால் ஒன்று

இதற்கு எல்லாவற்றிர்கும் முன்

எந்த 'ஆண்' என்ற திமிருடன் இவ்வளவு பேசுகிறானோ

அந்த அடையாளத்தை அழிக்க வேண்டும்

ஆண் என்ற அடையாளத்தை அழித்துவிட்டு விடுதலை செய்ய வேண்டும்


தன் ஆண் என்ற அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என்ற பயமே அவர்களை இப்படி பட்ட வக்கிர சிந்தனையில் இருந்து தள்ளி நிருத்தும்.

அதன் பிறகு எவனுக்கு இப்படி பெண்ணை அவள் சம்மதம் இல்லாமல் தொட தைரியம் வரும்!!

அதன் பிறகு அவன் வாழ்நாள் முழுவதும்
அவன் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணாலும் அவனுக்கு மரண தண்டனை தான்.

அதை அனுபவித்து அனுபவித்து சாகட்டும்


தெரு நாய்கள்..

செத்து ஒழியட்டும்.






பிரபு மித்ரன்



No comments:

Post a Comment

Related Articles