Sunday, 22 March 2015

இந்தியாவின் தேவை: ஒரு மௌனப் புரட்சி


இந்தியா

குப்பையும் தூசியும் நிறைந்த அழுக்கு நாடு.
எந்த நேரம் வேண்டுமானாலும் மதக்கலவரமும் சாதிக் கலவரமும் வந்துவிடக் கூடிய ஒரு ஒற்றுமையில்லாத நாடு.
ஊழல்வாதிகளைத்தவிர அரசியலில் யாருமே இல்லாத நாடு.
லஞ்சம் கொடுத்தால் எதைவேண்டுமானாலும் இந்த நாட்டில் சாதித்து விடலாம்.
எந்த ஒரு வேலையும் நேரத்திற்கு முடிக்காத பொறுப்பற்ற அதிகாரிகளைக் கொண்ட நாடு.
போலீஸுக்கும் திருடனுக்கும் சீருடை வித்யாசம் மட்டுமே உள்ள நாடு.
சினிமா கதாநாயகர்களை கடவுளைவிட பெரியதாக நினைக்கும் முட்டாள்கள் வாழும் நாடு.
எந்த சட்டத்தையும் மதிக்காத மக்களை உடைய நாடு.
இப்பொழுது கொஞ்ச நாளாக
கற்பழிப்புக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் பேர் போன நாடு.

இவைதான் இப்பொழுது இருக்கும் இந்தியாவின் முகம்.



இதே இந்தியா தான் உலகின் முதல் வல்லரசு நாடு என்பது எத்தனை பேருக்கு இங்கு தெரியும்?
எதோ வல்லரசு என்பது எட்டாத கனி போல நாம் எப்பொழுதும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
அந்த இடம் நம்மிடமிருந்து போன இடம் தான்.
உலக பேரரசுகள் அத்தனை பேருக்கும் கனவு பூமியாக இருந்தது தான் இந்த இந்தியா.
கொலம்பஸ் இந்தியாவை தேடி கடலில் சென்ற போது தான் அமெரிக்காவை எதிர்பாராமல் கண்டு பிடித்தார்.
அவர் அங்கு சென்ற போது துணி கூட இல்லாத மக்கள் வாழ்ந்த நாடு தான் இன்றைய வல்லரசான அமெரிக்கா.
அப்பொழுதே உலகிற்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாடு தான் நம் இந்தியா.
அதே இந்தியாவுக்குதான் இப்பொழுது இந்த நிலைமை.

இது எப்படி நடந்தது?
தவறு யார் மேல்?
அவ்வளவு எளிதாக சொல்லிவிட கூடியது அல்ல.
இதற்கு ஒரே காரணம் இங்கு வாழும் மக்களின் பயமும் அலட்சியமும் தான்.
இவர்கள் அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் கண்டு நடுங்குகிறார்கள்.
அதற்கு மக்கள் காரணமில்லை.
நாம் பிறந்ததிலிருந்து அப்படிப்பட்ட மன நிலையுடன் தான் வளர்க்க பட்டுள்ளோம்.
இந்திய அரசியலை பற்றிய அடிப்படை அறிவு இன்று படித்தவர்களிடமே இருப்பதில்லை.

உதாரணமாக
மக்கள் அத்தனை பேரிடமும் வரி என்ற ஒன்று வசூலிக்க படுகிறதே எதற்கு என இங்கு யாருக்காவது தெரியுமா?
சாலை வரி என்பது சாலை பராமரிப்பிற்க்காக செலுத்துகிறோம். எத்தனை சாலைகள் இன்னும் குண்டும் குழியுமாக உள்ளது.
குடிநீர் வரி நாம் குடிக்கும் தண்ணீருக்காக. ஆனால் எத்தனை ஊர் மக்கள் குடி நீர் இல்லாமல் கஷ்ட படுகிறார்கள்.
இப்படி நாம் அரசாங்கத்திற்கு செலுத்தும் ஒவ்வொரு வரியும் நம் நலனுக்காக கொடுப்பது தான்.
கடையில் ஒரு பொருளை வாங்க காசு கொடுக்கிறீர்கள். அவன் காசு வாங்கிவிட்டு பொருளை கொடுக்கவில்லை எனில் வாயை மூடிக்கொண்டு அமைதியாக வந்துவிடுகிறோமா?
சட்டையை பிடித்து கேட்கிறோமே!! இதை மட்டும் கேட்க என்ன பயம்??
நாம் அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரிக்கு உண்டான பயனைத்தான் கேட்கிறோம்.
நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையிலும் அந்த பொருளுக்கான வரியையும் சேத்தி தான் கொடுக்கிறோம்.
50 பைசா மிட்டாயிலும் வரியுடன் தான் வாங்குகிறோம். இந்த பணம் எல்லாம் எங்கு செல்கிறது.??

மாறி மாறி வரக்கூடிய புதிய புதிய கட்சிகளும் புது தலைவர்களும் மிக சாமர்த்தியமாக மக்களை மைக் பிடித்து பேசி பேசி முட்டாளாக்கிவிடுகிறார்கள்.


சாதாரண மக்களை பொருத்தவரை அவர்களுக்கு மேல் தான் அரசு அதிகாரிகள். அந்த அதிகாரிகளுக்கு மேலே அமைச்சர்கள். அதற்கு மேல் அரசாங்கம்.
இப்படிதான் நம்மில் பல பேர் நினைத்து கொண்டிருக்கிறோம். அப்படி தான் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
இது சுத்தமாக தவறு.

குடியரசு என்பது
மக்களால்
மக்களுக்காக
மக்களே உருவாக்கியது.

இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் நமக்காக வேலை செய்பவர்கள். நாம் தான் அவர்களுக்கு முதலாளி.
அமைச்சர்கள் அனைவரும் நாம் நமக்காக அந்த அதிகாரிகளிடம் பேச தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள்.
ஆனால் இங்கு நடப்பதோ தலை கீழ்.
அமைச்சர்கள் ஆணையிடுகிறார்கள்.
அதிகாரிகள் அவர்களுக்கு சேவை செய்கிறார்கள்.
ஓட்டு போட்ட மக்கள் பிச்சைகாரர்களை விட கேவலமாக சலுகைகளுக்கு அரசு அலுவலகங்களில் கால் வலிக்க நிற்க்கிறோம்.

நமக்காக வேலை செய்யும் அதிகாரிகளும் அமைச்சர்களும் இன்று விமானம் ஏறி உலகை சுற்றுகிறார்கள்.
அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி நாம் செருப்பு கூட இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறோம்.
நாம் 50 பைசா மிட்டாய்க்கு கொடுக்கிறோமே வரி அது இவர்களுக்கு தான் சம்பளமாக போய் கொண்டிருக்கிறது.

அரசு அலுவலங்கள்
அரசு வேலை என்றால் வேலை இருக்காது, சம்பளம் அதிகம் வரும் என்ற ஒரே காரணத்திற்க்காக தான் அதை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அப்படி பட்டவர்கள் எப்படி மக்களுக்கு வேலை செய்வார்கள்.
சாதாரன மக்கள் வாரத்திற்க்கு 7 நாளும் வேலை செய்கிறோம்
ஆனால் மக்களுக்கு வேலை செய்யும் அதிகாரிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் நாயை விட அசிங்கமாக நடத்தப்படுகிறார்கள்.
நம் உரிமை எங்கு போனது?
இதற்கு தான் அத்தனை உயிர் தியாகம் செய்து சுதந்திரம் வாங்கினோமா??
இந்த ஈன பிழைப்பிற்கு அந்த வெள்ளைகாரன் பூட்ஸ்ஸில் அடிவாங்கியே செத்திருக்கலாமே.!!

அரசு பேருந்து
அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளீர்களா??
அதில் இருக்கும் நடத்துனரின் வேலை என்ன?
டிக்கெட்டுக்கான பணத்தை வாங்கிகொண்டு சில்லரையை கொடுப்பது தானே!!
எத்தனை பேர் கொடுக்கிறார்கள்? ஏதோ அவன் காசை கொடுப்பது போல அவ்வளவு அசிங்கமாக திட்டுவான்.
நினைத்து பாருங்கள். நாம் பேருந்தை பயன் படுத்தவில்லை எனில் அவனுக்கு அந்த வேலை ஏது??
நாம் என்ன செய்வோம்? தப்பு நம் மேல் தான் என நினைத்துகொண்டு நம் காசைகூட கேட்டு வாங்க துப்பில்லாமல் இறங்கி விடுவோம்.

அரசு வங்கிகள்.
பேங்கில் கல்வி கடன் வாங்க சென்றிருக்கிறீர்களா? எவ்வளவு அசிங்க படுத்துவார்கள்.!
மக்கள் அங்கு பணம் போடவில்லை எனில் அவனுக்கு அந்த வேலை கிடைத்திருக்குமா??
அங்கும் நாம் வாயை பொத்திகொண்டு அமைதியாக நிற்ப்போம்.
எல்லா இடத்திலும் இப்படி அமைதியாக இருந்து இருந்து தான் நம் நாட்டிற்கு இந்த நிலைமை.
நம் உரிமையை கேட்டு வாங்க கூட நமக்கு தயக்கம்.

காவல்துறை
எத்தனை காவலர்கள் பொது மக்களிடம் அன்பாக பேசியுள்ளார்கள்.?
“காவல்துறை உன் நண்பன்” என எழுத்தளவில் மட்டும் தான் உள்ளது.
மக்களை பாதுகாக்க அரசாங்கத்தால் நம் வரி பணத்தில் உருவாக்கப்பட்டதே இந்த துறை.
நிஜமாகவே நாம் பாதுகாப்பாக உணர்கிறோமா??
அவர்கள் உண்மையாகவே அவர்கள் வேலையை செய்தால் இன்று ஏன் இத்தனை குற்றங்கள் நடக்கிறது?
போலிஸை பார்த்தால் தப்பு செய்தவன் தான் பயப்படனும்
ஆனால் நம் நாட்டில் சாதாரண பொது மக்கள் நாம் தானே பயப்படுகிறோம்!!
பத்து ஊருக்கு ஒரு காவல் நிலையம் உள்ளது.
அவர்கள் அந்த ஊரை மட்டும் ஒழுங்காக காவல் காத்தாலே குற்றங்கள் நடக்காதல்லவா?
இவர்களும் நமக்காக வேலை செய்து நம் வரிபணத்தில் வயிறு வளர்த்தவர்கள் தான்.


அரசியல்வாதிகள்
இந்த நாட்டின் உன்மையான கதாநாயகர்கள்.
மக்கள் முன் மேக்கப் போட்டு வீர வசனம் பேசி அதை உண்மை என நம்பவைத்து விடுவார்கள்.
நம் பிரச்சனையை பேசுவதற்க்காகவும், அதிகாரிகளை வைத்து அதை தீர்த்து வைப்பதற்க்காகவும் அந்த பதவியில் நம்மால் அமர்ந்தவர்கள்.
உன்மையாகவே நம் பிரச்சனையை அவர்கள் பேசுகிறார்களா?
கொள்கைகளை நம்பி கட்சி ஆரம்பித்த காலம் மாறி இப்பொழுது தலைவனை நம்பி கட்சி ஆரம்பிப்பது, சாதியை நம்பி கட்சி நடத்துவது...  என அதன் முகம் கோரமாக மாறி கொண்டிருக்கிறது.
இவர்கள் நம் பிரச்சனையை விட அவர்கள் சார்ந்த கட்சி பிரச்சனையையும் அவர்களின் தலைவர்..தலைவி.. பிரச்சனையை தான் பேசிகொண்டிருக்கிறார்கள்.
மக்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை... நம் நலனுக்காக எதாவது செய்வார்கள் என நம்பி ஓட்டு போடுவதை விட்டு விட்டு அவர் அவருக்கு பிடித்த தலைவர்கள் தோற்றுவிட கூடாது என்ற எண்ணத்தில் ஓட்டு போடுகிறார்கள். அந்த தலைவர் மீது எத்தனை ஊழல்...சொத்து குவிப்பு வழக்குகள் இருந்தாலும் அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை.
நம்மால் ஜெயித்து மந்திரியான ஒருவரை நம்மால் கிட்ட கூட நெருங்க முடிவதில்லை.
அப்படி என்ன அவர்கள் கடவுளா?? நம்மால் தானே ஜெயித்தான். நாம் பேச கூடாதா?
பேசினால் போலிஸை வைத்து பொய் கேஸ் போடுவார்கள் இல்லை என்றால் அவதூறு வழக்கு போடுவார்கள்.
நம்மால் ஜெயித்து நமக்கே வாய்கரிசி போட்டுவிடுகிறார்கள் துரோகிகள்.
இது சாதாரன மக்களுக்கு புரிவதே இல்லை. புரியவிடுவதும் இல்லை.

ஊடகங்கள்
இந்தியாவில் ஊடகங்கள் உருவாக காரணமாக இருந்தது விடுதலை போராட்டங்கள்.
மக்களிடம் எழுச்சியை உண்டாக்க பத்திரிக்கைகள் தான் பாடுபட்டது.
மூலை முடுக்கெல்லாம் சுதந்திர போராட்டம் பற்றி கொள்ள போராடியது தான் இந்திய ஊடகங்கள்.
அப்படிபட்ட ஊடகங்களுக்கு இன்றைய இந்தியாவில் சுதந்திரமே இல்லையே!!
எந்த ஆட்சி நடக்கிறதோ அதற்கு சாதகமான செய்திகளை மட்டும் தான் மக்களிடம் கொண்டு செல்வார்கள்.
தப்பை தட்டி கேட்க தகுதியும் வலிமையும் உள்ள ஒரே ஆட்கள் பத்திரிக்கையாளர்கள் தான்.
அவர்களிடமும் இப்பொழுது உண்மையை எதிர்பார்க்க முடிவதில்லை.
மக்களுக்காக உருவாக்கபட்ட இந்த ஊடகங்கள் இன்று அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போட்டு கொண்டிருக்கின்றன.
இல்லை போட வைத்துவிட்டார்கள்.

சட்டங்கள்
என்ன சட்டம்.?
நம் சட்டம் என்பது எத்தனை ஆக்கபூர்வமாக உள்ளது?
ஒரு சட்டம் ஒருவனுக்கு தண்டனை கொடுத்தால் அது அவனை திருத்த வேண்டும்
அப்படி திருத்தியிருந்தால் ஏன் ஒரே குற்றவாளி அடிக்கடி குற்றம் செய்கிறான்.?
இப்படி எதற்குமே லாயக்கில்லாத சட்டத்தை எப்பொழுது மாற்றப்போகிறார்கள்.?

இப்பொழுது சொல்லுங்கள் நாம் உண்மையாகவே சுதந்திரம் அடைந்து விட்டோமா??
நமக்காக வேலை செய்யும் அதிகாரிகளிடமே நமக்கு கேள்வி கேட்க சுதந்திரமில்லை
நாம் தேர்ந்தெடுத்த அமைச்சரை பார்த்து பேச நமக்கு சுதந்திரமில்லை
எங்கும் சுதந்திரமில்லை
எதிலும் சுதந்திரமில்லை



மக்களுக்காக உருவாக்கபட்ட எந்த சட்டங்களும் எந்த துறைகளும் இன்று மக்களுக்காக வேலை செய்யவில்லை
அதை தூக்கி எறிய மக்கள் தான் முன் வர வேண்டும்.
இதற்கு தேவை அரசியல் மாற்றமோ ஆட்சி மாற்றமோ இல்லை.
இன்னொரு சுதந்திர போராட்டம்.
மக்களுக்காக மக்களே முன் நின்று நடத்த வேண்டிய சுதந்திர போராட்டம்.
அரை நூற்றாண்டாக இந்த இந்திய மண் எந்த ஒரு புரட்சியையும் பார்க்கவில்லை.

நம்மை எப்போ பார்த்தாலும் மொழி...இனம்...மதம்...என பிரித்தே வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகளிடமிருந்து விடு பட வேண்டும்.
சுகந்திரம் என்பது பிச்சை கேட்டு வாங்ககூடியதில்லை.
நம் உரிமையை பெற எவன் அனுமதியும் தேவையில்லை.

இதற்காக அவர் அவர் வேலையை விட்டு விட்டு தெருவில் இறங்க வேண்டும் என சொல்லமுடியாது.
இந்த காலத்தில் அது சாத்தியமில்லை. அதனால் தான் கண்டவனும் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.


இப்பொழுது உள்ள இந்தியாவிற்கு தேவை ஒரு மௌன புரட்சி.
சத்தமோ...ஆயுதமோ...போராட்டங்களோ இல்லாத மௌன புரட்சி.
அங்கு அங்கு பிரிந்து கிடக்கும் இளைஞர் சங்கங்கள்...மாணவர் குழுக்கள் ஒன்றினைய வேண்டும்.
அது ஆட்சியை பறிக்கும் அரசியல் கட்சியாக இல்லாமல் சுகந்திரப்போராட்ட இயக்கமாக இருக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் நிறைந்திருப்பவர்கள் இளைஞர்களே!
ஆனால் அவர்களுக்கு அறிவும் ஆற்றலும் இருக்கும் அளவுக்கு பக்குவம் இருப்பதில்லை.
அவர்களை வழி நடத்த சமூக ஆர்வளர்கள் முன்வர வேண்டும்.

எங்கு எந்த தவறு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டாம். சத்தம் போட வேண்டாம்.
அதை அப்படியே பதிவு செய்து தவறு செய்பவர்களின் விபரங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட வேண்டும்.
அதன் பிறகு ஊடகங்களும் எதிர் கட்சிகளும் அந்த பிரச்சனையை பார்த்து கொள்வார்கள்.
எந்த வகையிலும் தப்பே நடந்து விட முடியாத அளவுக்கு நெருக்கம் கொடுக்க வேண்டும்.

எப்பொழுது சம்பாதிக்க முடியாது என்று நினைப்பு வருகிறதோ அப்போ இந்த போலிகள் அரசியலையும் வேலையையும் விட்டு விலகி விடுவார்கள்.
அதன் பிறகு உண்மையானவர்கள் அரசியலையும் அரசு அலுவலகங்களையும் நிரப்புவார்கள்.

பள்ளிக்கூடமே போகாதவர் கல்வி மந்திரி ஆவது எவ்வளவு முட்டாள் தனம்.
இப்படி தான் ஒவ்வோரு துறையை பற்றியும் தெரியாமலே அதன் மந்திரிகளாக இங்கு நிறைய பேர் உள்ளனர்.
அப்புறம் எப்படி அந்த துறையில் வளர்ச்சி இருக்கும்??

இதை போக்க ஒவ்வொரு துறையிலும் வள்ளுனர்களாக விளங்குபவர்களை அந்த துறையின் தலைவராக்க வேண்டும்.

உண்மையான சமூக ஆர்வலர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

இளைஞர் இயக்கம் அப்படிபட்ட நபர்களை தேடி பிடித்து ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.
ஊடகங்கள் சுதந்திரமடைய வேண்டும். அப்பொழுது தான் நடக்கும் தவறுகள் சுட்டிகாட்ட படும்.

நல்லாட்சி என்பது
மக்கள் சொல்ல வேண்டும்
மந்திரி கேட்க வேண்டும்
அதிகாரிகள் செய்ய வேண்டும்
இப்படி நடந்தால்
இந்தியாவிற்கு தானாக பொற்காலம் வந்துவிடும்

கமல்ஹாசன் ஒரு படத்தில் சொல்லுவார்.
“மறதி தேசிய வியாதி” என

எதற்காக சுதந்திரம் வாங்கினோம் என மறந்தது தான் நாம் செய்த மிக பெரிய தவறு.
அது ஞாபகத்தில் இருந்திருந்தால் இதை ஆரம்பதிலேயே கிள்ளி எரிந்திருக்களாம்.



வெற்று அறிக்கைகளும்
வெற்று போராட்டங்களும்
வெற்று “கண்டிக்கிறோம்” என்ற சுவரொட்டிகளும் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடாது.

தேவை ஒரு மௌன புரட்சி.
புரட்சியின் நோக்கம் சுதந்திரம் பெருவதாக இருக்க வேண்டும்.
ஆட்சியை பிடிப்பதாக இருந்தால் நிச்சயமாக அதுவும் மக்களை அடிமைதான் படுத்தும்.
இது கண்டிப்பாக மாணவர்களாலும் இளைஞர்களாளும் மட்டுமே செய்ய முடியும்.
இன்றே இல்லை எனிலும் சீக்கிரம் இந்த புரட்சியையும் புரட்சியாளர்களையும் இந்தியா பார்க்க நேரிடும்.
சாகப் போகும் நேரத்தில் எந்த உயிராக இருந்தாலும் வீரம் கொண்டு எழுந்துவிடும். போராடி சாவோமே என.




பிரபு மித்ரன்

prabhumithran@gmail.com

No comments:

Post a Comment

Related Articles