Friday, 1 May 2015

என்னை என்னவென்று அழைப்பீர்?


நான் யாரென்று சொன்னால்
என்னை என்னவென்று அழைப்பீர்?

சொல்கிறேன்...

மூச்சு முட்ட காதலித்து தொலைத்தேன்

சில காலம் கழித்து
அந்த காதலிலேயே தொலைந்தேன்

இன்னும் சில காலம்
தொலைந்த என்னை தேடி திரிகையில்
காலம் என்னை கடந்து போய்
என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தான்

“அட மடையா
காதலிக்கபடாதவனெல்லாம் காதலிக்கக்கூடாதவனல்ல
காதலிக்காதவனெல்லாம் காதலிக்கப்படாதவனுமல்ல

காதலை காதலில் தேடாமல்
காலத்திலும்
காதலித்தவளிடமும் தேடியதுதான் தவறு..
காதலித்தது தவறல்ல”

என்று எச்சி தெரிக்க கண் பார்த்து சொல்லி மறைந்தான் .

எனக்கு அப்பொழுது தான் உரைத்தது

காலம் செத்து
காதலியும் செத்தாலும்
என் காதல் சாகாதென.

காலத்தை வென்று
இப்பொழுதும் காதலித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னை எப்படி அழைப்பீர்?
காதலிக்கப்படாத காதலன் என்று அழைப்பீரோ!!




பிரபு மித்ரன்


2 comments:

  1. காதலிக்கபடாதவனெல்லாம் காதலிக்கக்கூடாதவனல்ல
    காதலிக்காதவனெல்லாம் காதலிக்கப்படாதவனுமல்ல and
    காலம் செத்து
    காதலியும் செத்தாலும்
    என் காதல் சாகாதென
    super lines Ji......

    ReplyDelete

Related Articles