கனவு
எல்லோருக்கும் எல்லா நாளும் கனவுகள் வருவதில்லை
சில சமயம் சில நேரங்களில் வரும் கனவுகளும்
தூக்கம் கலைந்து எழுந்ததும் மறந்துவிடுகின்றன.
எனக்கும் அப்படிதான்
கனவுகள் எப்பொழுதுமே ஆச்சர்யமானவை
என்றோ முகம் மறந்த என் ஒன்றாம் வகுப்பு
தோழியும்,
அன்று காலையில் ஒரு நொடிப்பொழுதில் கடந்து போன
ஆட்டோ டிரைவரும் கனவுகளில் மிக சாதாரணமாக வந்து போவார்கள்.
அந்த வாரம் முழுவதும் நாம் தேவை இல்லாததாக
நினைத்தவை ஒன்று சேர்ந்து ஒரு கலவையான கதையாக நம் முன் ஓடும்.
நான் நினைத்ததுண்டு
இவ்வளவு அருமையான கதைகளெல்லாம்
நமக்குள்ளிருந்து தான் வருகிறது. அப்பொழுது நமக்குள் தானே அந்த ஆசாத்தியமான
திறமையும் இருக்கிறதென்று.
ஒரு சமயம் கனவில் மிக சரளமாக ஆங்கிலம் பேசுவதாக
வந்தது.
கனவில் நான் உபயோக படுத்திய வார்த்தைகளெல்லாம்
நான் விழித்திருக்கும்போது பயன்படுத்த சாத்தியமே இல்லை
அந்த வார்த்தைகளெல்லாம் எனக்கு தெரியும் என்பது
கூட எனக்கு தெரியாது.
இருந்தும் கனவில் பேசுகிறேன். சந்தேகம் கொண்டு
காலையில் டிக்ஸெனெரியில் புரட்டிப்பார்த்து சரியாக தான் பேசிருக்கிறோம் என பிரம்மித்தேன்.
அப்படியானால் நமக்கு வெளியே தெரியாது என
நினைப்பவை எல்லாம் நமக்குள்ளேயே எங்கேயோ தேங்கி இருப்பதாக தானே அர்த்தம்.
கனவுகளுக்கும் எனக்குமான தொடர்பு ஆரம்பித்தது
என் சிறு வயதில் தான்.
எனக்கு கணக்கு பாடம் மீது கொஞ்சம் ஈர்ப்பு
அதிகம்.
அது எனக்கு வாய்த்த ஆசிரியர்களால்தான் வந்தது
என்பது என் பின்னாள் கண்டுபிடிப்பு.
பல சமயங்களில் சில கணக்குகளுக்கு விடை
கிடைக்காமல் குழம்பியதுண்டு.
அப்படி தான் ஒரு முறை ஒரு கணக்கை போட்டு பாடாய்
படுத்திகொண்டிருந்தேன்.
இரவு ரொம்ப நேரம் என்னென்னமோ செய்து அதற்கு
விடையே தெரியவில்லை.
சரி என்று தூங்க போய்விட்டேன்.
கனவில் அதே கணக்கு.
அவ்வளவு சுலபமான வழியில் அந்த கணக்கை
முடிக்கலாம் என நினைத்துகூட பார்க்கவில்லை. சந்தோஷத்தில் குதிக்கையில் தூக்கம்
கலைந்து எழுந்தேன்.
நடு ராத்திரி.
திரும்பவும் தூங்கினால் மறந்து விடுவேன்.
எழுந்து லைட் போட்டால் அம்மாவிடம் திட்டு வாங்க
வேணும்.
சரி என்று பக்கதிலிருந்த சுண்ணாம்பு சுவற்றில்
என் நகத்தை வைத்து கீரி கீரி கணக்கை எழுதி வைத்துவிட்டு தூங்கினேன்.
அடுத்த பொங்கல் வரைக்கும் அந்த சுவற்றில் அது
அப்படியே பதிந்து போய் அடிக்கடி எனக்கு திட்டு வாங்கி கொடுத்ததுண்டு.
அதன் பிறகு அப்போ அப்போ இப்படி எதாவது கனவு
வந்து ஆச்சரியம் கொடுக்கும்.
சில நேரங்களில் உண்மையை விட கனவுகளுடனே
வாழ்ந்துவிடலாமென தோன்றும்.
பல சமயங்களில் கனவே வர வேண்டாமே என நினைக்கவும்
தோன்றும்.
அப்படியும் சில கனவுகளுண்டு...
எனக்கு நாய் என்றால் ரொம்ப பயம்.
நிஜத்தை விட கனவில் தான் என்னை அதிகமாக நாய்
துரத்தியிருக்கிறது.
நான் தூக்கதிலேயே பயந்து கத்தியதில் அதிக
அளவில் கனவு நாய்களுக்கு பங்கு உண்டு.
ஆரம்பத்தில் என் கத்தலால் என்னவோ எதோ என பதறிய
என் வீட்டார்கள் கூட நாளடைவில் ‘நாய் துரத்தியிருக்கும்’ என நினைக்கும் அளவுக்கு
என் கனவு அவ்வளவு பிரபலம்.
சில கனவுகள் திரும்ப திரும்ப வருவதுண்டு...
அதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும்.
எப்படி இப்படி அடிக்கடி ஒரே மாதிரி கனவுகள்
வருகிறதென.
சிறு வயது முதலே எனக்கு காய்ச்சல்
வரும்பொழுதெல்லாம் ஒரு கனவு வரும்.
அந்த கனவுக்கு என்னால் உருவகம் கொடுக்க
முடியவில்லை.
எதோ பெரிய பெரிய ரோலர் கியர்கள்.
இந்த கரும்பு ஜூஸ் இயந்திரத்தில் இருக்குமே.
அது போல.
அதற்குள் எதோ மெத்தை போல ஒன்று உருண்டு
கொண்டிருக்கும். அதில் சின்ன பூச்சி அளவுள்ள நானும் அதனுடன் அந்த இயந்திரத்துக்குள்
பூந்து பூந்து வெளியே வருவேன்.
வயிறெல்லாம் என்னமோ செய்யும். பயம்..சந்தோஷம்,....துக்கம்...
அசதி... என எல்லமே அதில் தெரியும்.
நான் எப்பொழுதெல்லாம் காய்ச்சலால்
படுத்திருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் கண்டிப்பாக இந்த கனவு வரும்.
ஆனால் ஒன்று. அந்த கனவு வந்ததும் காய்ச்சல்
சரியாகிவிடும் என அப்பொழுது நம்பியிருந்தேன்.
பதினைந்து பதினான்கு வயதில் அந்த கனவு வருவது
நின்றுவிட்டது.
இப்பொழுதும் காய்ச்சல் வந்தால் அந்த கனவை
நினைத்துகொள்வதை தவிர்க்கமுடிவதில்லை.
அதன் பிறகு அடிக்கடி வரும் கனவென்றால் நான்
பறப்பது போல வரும்.
பலருக்கு இப்படி வரும் என
கேள்விபட்டிருக்கிறேன்.
ஆனால் நான் பறப்பது என்பது கொஞ்சம் வித்யாசமாக
தான் வரும்.
அந்த கனவுகளிலெல்லாம் நான் சாதாரனாமாக தான்
யாருடனாவது பேசிக்கொண்டிருப்பேன்.
திடிரென்று என் கால் மேலே எழும்பும். அப்படியே
வானத்தை நோக்கி மேலே போய்விடுவேன்.
இதுவே நான் எதாவது அறையில் இருந்தால் அந்த
அறையின் கூரை வரை மேலே போய் அப்படியே கூரையில் லேசாக முட்டி முட்டி எப்படியோ ஓடி
கொண்டிருக்கும் மின் விசிறியில் எல்லாம் படாமல் வாயில் வழியாக வெளியே
வெற்றிடத்துக்கு வந்துவிடுவேன்.
காத்து அடிக்கும் திசையில் அங்கும் இங்குமாக
பறந்து கொண்டிருப்பேன். என்னால் நான் எங்கு செல்ல வேண்டும் என கட்டுபடுத்த
முடியாது.
அப்படியே கொஞ்ச நேரம் காற்றில்
ஆடிகொண்டிருக்கையில் திடிரென்று காற்று போன பலூன் போல புஸ்ஸென கீழே
இறக்கப்படுவேன். அதுவும் நான் நினைத்த இடத்தில் இறங்க முடியாது.
பல சமயங்களில் வேறு யாரோ வீட்டு மொட்டை
மாடியில் தரையிறங்கி அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பித்துவருவேன்.
தப்பிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கவே
இருக்கிறது ஒரு வழி..
பயந்து கண்விழித்து விடுவேன்.
நான் கல்லூரி எல்லாம் முடித்து ச்சும்மா
வீட்டில் இருந்த சமயம்
எனக்கு இருந்த ஒரே வேலை நாள் முழுவதும்
தூங்குவது தான்.
என்னை கேட்டால் நான் பதினெட்டு மணி நேரத்திற்கு
மேல் தூங்கியிருப்பேன்.
ஆனால் அதற்கு நான் கூச்சமோ வெட்கமோ படவே இல்லை.
என்னை பொருத்த வரைக்கும் தூங்குவது வரம். பல
பேருக்கு அது கிடைப்பதில்லை.
அது கிடைத்தவர்களும் வேகாத இந்த
சமுதாயத்திற்காக பயந்து அனுபவிப்பதில்லை.
குழந்தையாக இருக்கும் போது மட்டுமே அப்படி
இருந்திருக்க முடியும்.
என் பாக்கியம் எனக்கு அந்த காலக்கட்டதில்
கிடைத்தது.
இப்படி தூங்கி தூங்கி எனக்கு ஒன்று நடந்தது.
நான் பல சமயம் எனக்கு சக்தி வந்துவிட்டதோ என
பயந்திருக்கிறேன்.
எனக்கு வந்த கனவுகள் தொடர்ந்து பழித்தது.
அதற்காக எதோ புதையல் கனவு என்றெல்லாம்
நினைத்துவிட வேண்டாம்.
ஒரு முறை என் நன்பனுடன் எங்கோ போகும் பொழுது
பேண்ட் கிழிந்து விடுவதாக கனவு வந்தது.
அதே போல அவனுடன் போன பொழுது நடந்தது.
அப்பறம் ஒரு நாள் மதியம் தூங்கும் பொழுது கனவில்
பருப்பு குலம்பும் கீரை பொறியலும் வந்தது. தூங்கி எழுந்த பொழுது என்ன ஆச்சரியம்.
எங்கள் வீட்டில் எனக்கு மத்திய சாப்பாட்டிற்கு அதை தான் கொடுத்தார்கள்.
இப்படி தான் சில கனவுகள் பழித்தது. நான் சக்தி
வாய்ந்தவனாக அலைந்த நேரம் அது. ஆனால் அது சீக்கிரமே காணாமல் போய்விட்டது.
எந்த கனவிலும் ஒரு கொடூரமானவனாக வந்ததே இல்லை.
எப்பொழுதும் பயமும் கோபமும் கலந்த என் இயல்புடனே
வருவேன்.
பயம் என்பது மனிதனின் இயல்பு.
சிங்கம் என்பதற்காக அதற்கு பயமே இருக்காது என
எண்ண முடியுமோ!!
அப்படி யாராவது இருந்தால் அவன் நடிக்கிறான்
என்று தானே அர்த்தம்.
ஆனால்
இப்பொழுதெல்லாம் என் இயல்புக்கு மீறியும் கனவு
வருகிறது.
போன வாரம் ஒரு கனவு
நான் ஒரு கும்பலுடன் ஒரு கட்டிடத்தில் இருக்கிறேன்.
யார் அவர்கள் என்றெல்லாம் தெரியாது.
புதிய ஒரு கும்பல் அந்த கட்டிடத்திற்குள்
நுழைகிறது.
சுட்டுகொள்கிறார்கள்.
வெட்டுகிறார்கள்.
அவர்களும் இவர்களும் சரிந்து சரிந்து
விழுகிறார்கள்.
என் கையில் ஒருவர் சிக்குகிறார். அவரை கீழே
தள்ளி
அவரின் கழுத்தில் எதோ வேகத்தில் என் கையில் இருந்த
கத்தரிகோலால் வெட்டிவிடுகிறேன்.
கத்தரிக்கோல் என்றால் பெரியதெல்லாம் இல்லை.
குட்டியாக... இந்த செல்லோடேப் எல்லாம்
வெட்டுவோமே அது.
அவர் சாக வில்லை.
பேசமுடியாமல் கத்துகிறார்.
என்னால் அதை பார்க்க முடியவில்லை. அந்த குட்டி
கத்தரிகோலில் கழுத்தை இன்னும் கொஞ்சம் வெட்டுகிறேன்.
அவர் கத்துகிறார். துடிக்கிறார்.
சாக மாட்டேங்குறார்.
என்னால் தாங்க முடியவில்லை. “தெரியாமல்
பண்ணிட்டேன்..மண்ணிச்சுடுங்க மண்ணிச்சுடிங்க” என்ற படியே வெட்டுகிறேன்.
அவர் அழுகிறார்.
நானும் அழுகிறேன்.
அவர் சாக மாட்டேங்குறார்.
இன்னும் ஒரு நரம்பு.. வெட்டுகிறேன்... அவர்
கண்கள் என்னை முறைத்து பார்க்கிறது...
நான் கதறி அழுகிறேன்...
அவரின் காக்கி பேண்ட்டும் போலீஸ் ஷூவும் வேகமாக
உதருகிறது...
நான் என் தலையை நிலத்தில் மோதி அந்த இரத்த
கத்தரியுடன் அழுகிறேன்...
அவர் சாக மாட்டேங்குறார்..
நான் விழித்தெழுந்துவிட்டேன்.
ச்சீ நான் இவ்வளவு கொடூரமாக இருக்கிறேனே என முதலில்
நினைத்தேன். ஆனால் எனக்கும் தானே அழுகை
வந்தது... நான் அவ்வளவு கெட்டவன் இல்லை என சமாதானம் செய்துகொண்டேன். ஆனால் எனக்கு
ஏன் இப்படி கனவு வந்தது என தெரியவில்லையே!!.
அந்த கத்தரி இரத்ததின் ஈரம் காய்வதுக்குள் அடுத்த
இரத்தம்
இந்த வாரமும் இதே போல ஒரு கனவு..
நான் வீட்டிலிருந்து ஒரு பெரிய பயனத்திற்கு
புறப்படுகிறேன்.
நான்... என் நண்பர்கள் விக்னேஷ்... அப்பறம்
மோகன் என்பவர்..(அவன் ஜெர்மெனியில் இருக்கிறான்... எப்படி இங்கு வந்தானோ!!)
நாங்கள் கிளம்புகிறோம்.
கடைசி நேரத்தில் எங்களுடன் என் இன்னொரு நண்பர்
வந்து சேர்கிறார். அவர் பெயர் சுஜிந்தன்.
“உன்னால் முடியுமா?” என நான் கேட்க
அதற்கு அவர் “நான் ஏற்கனவே நிறைய ட்ரெக்கிங்
போயிருக்கிறேன்... உனக்கு தான் தெரியுமே” எங்கிறார்.
இவர்களெல்லாம் என் கல்லூரி நண்பர்கள்.
நான்கு பேரும் கிளம்புகிறோம்.
போய் சேர்ந்த இடம்...
எங்கள் வீட்டுக்கு கிழக்கு பக்கம் கொஞ்சம் காலி
இடம் இருக்கிறது. அது ஒரு குட்டியான வெற்றிடம்.
கொஞ்சம் செடிகள் இருக்கும்.
அந்த இடம் தான்...
(வீட்டுகுள்ளேயே இருக்கும் இடத்திற்கு எதற்கு
அவ்வளவு ஏற்பாடுகள்... கனவுகள் அப்படிதான்)
அந்த இடத்தில் பெரிய யானை...
எல்லோரும் சேர்ந்து தாக்குகிறோம்..
மோகன் எப்படியோ அந்த யானைக்கு மேல்
ஏறிவிடுகிறான்.
அவன் கையில் அந்த அவெஞ்செர்ஸ் படத்தில் ஒரு
சுத்தியல் வருமே. அதை வைத்து யானையின் தலையில் அடிக்கிறான்.
அதற்கு ஒன்னும் ஆக மாட்டேங்குது.
நான் வாங்கி அதன் நெத்தியில் அடிக்கிறேன்.
நான் எப்படி அதன் நெத்தி வரை வளர்ந்தேன் என
தெரியாது.
அடிக்கிறேன்.
ஒவ்வொரு அடிக்கும் அதன் தலை சிதைந்து இரத்தம்
தெரிக்கிறது.
ஓங்கி ஓங்கி அடிக்கிறேன்.
அப்படியே சாய்ந்து விழுகிறது.
தலை முழுவதும் சிதைந்துவிட்டது... பாவம்.
அதன் தந்தங்களை எடுத்துகொள்கிறேன்.
ஒரு தந்தம் பாதி உடைந்துவிட்டது.
இன்னொன்று ரொம்ப குட்டியாக இருக்கிறது.
என் நண்பர்களிடம் திரும்பி “இது நெஜமாவே ஆம்பள
யானை தானா டா..?” என கேட்கிறேன்.
சரி இந்த யானையின் உடலை என்ன செய்வது என தெரியவில்லை..
வீட்டுக்குள் போய் நாசூக்காக சொல்ல வேண்டும்
“யானை செத்து போய்டுச்சு... இங்கயே
புதைச்சுடட்டுமா” என்று சொல்லிவிட்டு
திட்டாமல் இருப்பதற்காக
“புதைச்சுட்டு அதுக்கு மேல விநாயகர் சிலை வைச்சுடுறேன்”
என்றேன்.
உடனே சம்மதித்துவிட்டார்கள்.
போய் அதை புதைக்கும் பொழுது அந்த யானை ஒரு
நாயின் அளவு குட்டியாக இருந்தது.
எப்படி அப்படி சுருங்கியதோ!!
கனவு கலைந்து எழுந்த பொழுது அது என்னவோ
செய்தது.
யானையை போய் கொல்லமுடியுமா!!
அதுவும் நாய்க்கு பயப்படும் நான்!!
அந்த யானைக்கு ஒரு தந்தம் உடைந்தது எனக்கு விநாயகரை
ஞாபக படுத்தியது.
அவருக்கும் ஒரு தந்தம் உடைந்து தான் இருக்கும்.
அப்போ விநாயகரின் தந்தத்தை நான் தான் உடைத்தேனோ!!
அப்போ விநாயகரின் தந்தத்தை நான் தான் உடைத்தேனோ!!
கனவுகள் எப்பொழுதும் ஆச்சரியமானவை தான்.
நான் காணும் கனவுகளை எல்லாம் எழுத வேண்டும் என
நினைக்கிறேன்...
அதற்கு முன்னுரையாகவே இந்த பதிவு..
கனவுகள் தொடரும்
பிரபு மித்ரன்
awesome parabu
ReplyDeleteThanku Surendran:)
Delete#எந்த கனவிலும் ஒரு கொடூரமானவனாக வந்ததே இல்லை.#....No one has ever reflected as the same self often, in dreams
ReplyDeleteApdadiya!!?? naan nejathil "Naai" ku baya paduven.... kanavilum baya padugiren...
DeleteKanavugal nammin unmayana iyalbaye prathibalikkindrana.... veliya solla mudiyathavatrai thaan namakku kaatugirathu.... namakku mattume therinja nammai patriya pala unmayai athu namakku kaati kodukirathu....ore vidhyasam.... antha unmayai veru oru vadivil namakku kaatugirathu.... Kanavin adipadaye athu thaan..... (Sathyamaga naan sollavillai saamy...... 'Sigmund Freud' endra mano thathuva nibunar sonnathaga en Prof sonnathu...:)
P.S. Ithai neengal 'Anonymous' aga solla vendam... Nanbanagave solliyirukalam:D