Sunday, 17 January 2016

தேர்தல் காளான்களின் பொங்கல் விழா


எங்க ஊரு ஒன்னும் பேர் சொன்னா தெரியுர அளவுக்கு பெரிய ஊர் இல்லை.
சின்ன
 கிராமம் தான்.
அப்படி
 பக்கத்து பக்கத்துல இருக்குற மூணு கிராமம் சேர்ந்து ஒரு ஊராட்சி.

ரெண்டு
 வருஷத்துக்கு முன்னால் எங்கள் ஊர் முழுவதும் ஒரு போஸ்டர்.
“இனிய
 தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்ற வாசகத்துடன் இருந்தது.
ஆனால் அது மேட்டர் இல்லை. அதை செய்தது யார் என்பதில் தான் இருக்கிறது
கீழே
 ஒரு முப்பது முப்பத்தைந்து மதிக்கத்தக்க பையன் வெள்ளை சட்டையுடன் சிரித்த முகத்தோடுகைகூப்பியபடி போஸ் கொடுத்திருந்தான்.
பக்கத்தில் அவனின் பெயர் இருந்தது. அதற்கு கீழ்
“தன்னார்வ சமூக சேவகர்” என இருந்தது.
அது
 யாருடா? நம்ம ஊருல ஹேப்பி தீவாளி சொல்லுற தன்னார்வ சமூக சேவகர்னு விசாரித்தால்யாருக்கும் அந்த பையனை தெரியவில்லை.
எனக்கு
 தெரிந்த ஒருத்தர் அவன் எதோ பக்கத்து ஊர் காரன் எனவும்.. நம்ம ஊராட்சி ஆள் தான் என்றும்சொன்னார்.
தனக்கு
 தானே போஸ்டர் ஒட்டுறதுல என்னத்தையா சமூக சேவைனு காரி இரண்டு முறைதுப்பிவிட்டு நானும் அதை மறந்துவிட்டேன்.


அப்பறம் 2015 ஹேப்பி நியூ வருஷம் வந்துச்சு. அதான் புத்தாண்டு.
அதுக்கு
 அதே மாதிரி போஸ்டர்.
அதே
 சிரிப்பு.
அதே
 தன்னார்வ சமூக சேவை.
அதே
 எச்சில்.
ஆனா
 ஒரு வித்யாசம் எங்க ஊருல சில பேருக்கு அந்த பேரும் அந்த ஆளும்பரிட்ச்சியமாகியிருந்தார்கள்.

பொங்கல் வந்துச்சு.
திடிர்னு புதுசா ஒரு சமூக சேவை அமைப்பு முளைச்சுச்சு...  ஊரே போஸ்டர்... பேனர்கள்.
எங்க கிராம வரலாற்றில் முதன் முறையாக பொங்கல் விழா நடந்தது.
அட அப்படிதாங்க சொல்லிக்கிட்டாங்க.
ஊரே மைக் செட்டால் காது ஜவ்வு கிழிந்தது.
உரி அடிப்பது... சாக்கு போட்டி... லெமன் இன்  ஸ்பூன் போன்ற வீர(!) விளையாட்டுகளெல்லாம்ஜோராக நடந்தது.
அவர்களிடம் சிக்கி திக்கி தினறி  செத்து போகும் நிலையிலிருந்த தூய தமிழில் லைவ் கமெண்டரியைஸ்பீக்கர் வைத்து ஊர் முழுவதும் ஒலி பரப்பினார்கள்.
அந்த கொண்டாட்டம் முடியும் பொழுது நம்ம “தன்னார்வ சமூக” சேவகருடைய பெயரும் அப்போஅப்போ மைக்கில் ஒலித்தது.
யார் அந்த பையன் என்ற பேச்சு லேசாக ஊரில் அடிபட்டது.

தைபூசத்திற்கு காவடி எடுத்து கால் நடையாக போகும் கூட்டம் எல்லா கிராமத்திலும் இருக்கும்.
அதில்
 முக்கால்வாசி பேர் ஊரின் இளவட்டங்கள். அவர்களுக்கு பக்தியை விட அதில் ஒருகொண்டாட்டம் இருக்கதான் செய்கிறது.
நகரத்துக்காரன்
 கால் நடையாக எங்காவது போவதை ‘ட்ரெக்கிங்’ என்ற ஜிகினா பெயர்வைத்துக்கொள்வார்களல்லவா!!
அப்படி
 கிராமத்து பசங்களுக்கு இந்த பாத யாத்திரைகள். அதில் எவ்வளவோ அவர்கள்கற்றுக்கொள்கிறார்கள். 
அதை
 விடுவோம்.
அப்படி
 போகும் கூட்டம், ஊரின் நுழைவாயிலில் பேனர் வைக்கும் பழக்கம் கடந்த சில வருடங்களாகஇருக்கிறது.
அப்படி
 அந்த வருடம் வைத்த பேனரில் கடைசியில் வாழ்துக்களுடன் நமது சமூக சேவகரின் பெயர். 
அதே
 சிரிப்புடன்.
எனக்கும்
 அதே.... சரி விடுங்கள்.
ஆனால் அதன் பிறகு எங்க ஊர் பசங்களுக்கு எல்லாம் அவர்  பிரபலமாகியிருந்தார். 
வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு சிரித்து பேசினாலே போதும் எங்களுக்கு பிடித்து போய்விடும்.

சில நாட்கள் சென்றது.
ஊர்
 முழுவதும் எதோ தேசிய பிரச்சனையை எதிர்த்து குரல் கொடுத்தபடி ஒரு போஸ்டர்.
அதிலும்
 அதே சிரிப்பு
அதே
 பெயர். ஒரு வித்யாசம்.
அந்த
 பெயர் மூன்று வண்ண திராவிட நிறம் தரித்திருந்தது.
பெயருக்கு
 மேல்
“_______வின்
 குருகுல மாணவன்” என்றிருந்தது.
அட
 அவங்க எங்கப்பா குருகுலமெல்லாம் வச்சு நடத்துறாங்க.
அதன்
 பிறகு சுவர் ஓவியம்.
“வருக
 வருக” வாசகம்.
“வாழ்த்த
 வயதில்லை” கோஷ எழுத்துகள்
என
 அடிக்கடி அந்த “தன்னார்வ”த்துடைய பெயர் பளிச்சிட்டது.
ஊர்
 பயல்களும் பல பேர் அவரை கொண்டாடுகிற மாதிரி ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.



இந்த
 புத்தாண்டு வந்தது.
வீடு
 வீடாக காலெண்டர் கொடுத்தார்கள்.
இரண்டு
 விதமான டிசைன்.
ஒன்று
 அவர் சார்ந்த கட்சியின் தலைமையுடைய பெரிய படம். கீழே குட்டியாக நம்ம தன்னார்வத் தம்பியின் படம்.
இன்னொன்றில் பெரியதாக தம்பி படம் மட்டும். அட அதே சிரிப்பு.
இப்பொழுது
 பெயருக்கு கீழ் ஊராட்சியின் கழக பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.



இந்த வருடம் பொங்கல் வந்தது.
எங்க கிராம வரலாற்றில் இரண்டாம் முறை பொங்கல்விழா நடந்தது.(இதுவும் அவங்க தான்சொன்னாங்க)

இந்த முறை அவர்கள் மைக்கில் பேசியது... செய்த அட்ராசிட்டிகள் எல்லாம் தான் இங்கு ஹைலைட்.
வார்த்தைக்கு வார்த்தை “உங்கள் தலைவர்”... “நமது தலைவர்”... “தங்க தலைவர்” என சொல்லி  சொல்லி அந்த தன்னார்வத்தின் பெயரை சொன்னார்கள்.
எங்க ஊரின் பெரிய மனிதர்கள் என நினைக்கும் சிலர் மைக்கில் பேசும் பொழுது
“நமது அண்ணன் திரு........” என தொடங்கினார்கள். இத்தனைக்கும் அவர்களைவிட அவன் பலவருடங்கள் வயதில் சின்னவன்.
வீட்டுக்கு வீடு சின்னதாய் காமாட்சி விளக்கு கொடுத்தார்கள்.
பொங்கல்  பரிசு.
“அண்ணன் நமக்கு நிறைய நல்லது செய்கிறார்,... நாமும் அவருக்கு திரும்ப செய்ய வேண்டும்...நாமும் நல்லா இருக்கனும்... அண்ணனும் நல்லா இருக்கனும்” என்றெல்லாம் மைக்கில் பேசினார்கள்.
பொங்கல்  அன்று முழுவதும் அந்த மனிதரின் பெயரே ஸ்பீக்கரில் ஒலித்தது.
போன வருஷம் பத்தாவதிலும் பன்னிரெண்டாவதிலும் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு ஒருவருஷம் கழித்து இப்பொழுது பரிசு கொடுத்தார்கள்.
சமாதான புறா எல்லாம் பறக்க விட்டார்கள். எதெற்கு என தெரியாது.
டி.வி யில் வரும் பெண் ஒருத்தியை வைத்து அவர் எவ்வளவோ நல்லது செய்கிறார் என்றார்கள்.என்ன நல்லது என ஒன்று கூட சொல்லவில்லை.
கடைசியில் தன்னார்வ தம்பி பேசினார். அப்துல்கலாம் அவரிடம் சொன்னதாக ஒன்றை சொன்னார்.அதை நான் பல குறுஞ்செய்தியில்  பார்த்திருக்கிறேன்.
அப்பறம் அப்துல்கலாம் சொன்னதாக ஒரு கதை சொன்னார்.
சிங்கம் மானை வேட்டையாட துறத்துகிறதாம்.
சிங்கத்தை விட மான் வேகமாக சென்றால் சிங்கம் ஜெயித்துவிடும் என்று தப்பு தப்பாக கதைசொன்னார்.
இந்த அப்பாவி ஜனம் கை தட்டியது.
எல்லாத்துக்கும் அந்த கூட்டம் கை தட்டியது.
கை வலித்து நிறுத்தினால் உடனே “நமக்காக அண்ணன் எவ்வளவோ செய்கிறார்.. அவருக்காக கைகூட தட்ட கூடாதா” என அடிபொடிகள் மைக்கில் கனைத்தார்கள்.
மறுபடியும் தட்டினார்கள்.
"இவர் வந்தா தாண்பா இந்த ஊரு உருப்படும்" என பேசினார்கள்.
மக்கள் எதிர்காலம் கண்ணுக்கு முன் தெரிவதாக குதூகழித்தனர்.
எங்க
 ஊரின் புதிய தலைவன் உருவாகினார்.


மூனு வருஷமா சுய விளம்பரத்துக்கு இவ்வளவு செலவு செய்த அந்த தலைவன் அந்த பணத்தில் எங்கஊரின் பழுதடைந்த சாலை எதையாவது சரி செய்திருக்கலாம்.
இத்தனை
 போஸ்டர் அடித்த காசில் ஏழை குழந்தை யாரையாவது படிக்க வைத்திருக்கலாம்.
அவர்
 தாரை தப்பட்டை முழங்க ஊருக்குள் பவனி வரும் காசில் யாராவது எங்க ஊரின் ஊணமுற்றவருக்கு தொழில் தொடங்கி கொடுத்திருக்கலாம்.


இத்தனை
 காசு போட்டு செலவு செய்து ஒருவர் தேர்தலில் ஜெயித்தால் அந்த பதவியை வைத்துஅவன் போட்ட காசை திரும்ப எடுக்க நினைப்பாரா? இல்லை இந்த கை தட்டும் கூட்டத்தைகவனித்துக் கொண்டிருப்பாரா?
காசை விட்டு எரிந்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் இருக்கும் வரை தேர்தல் நேரத்துகாளான்கள் எல்லாம் இப்படி முழைத்துக்கொண்டே இருக்கும்.

பெரியார்...காமராஜர்...அண்ணா...ஜீவா..
 போன்றோர்களை தலைவர்களாக கொண்ட இந்தமண்ணில் போஸ்டர் அடித்தவன்... காலெண்டர் கொடுத்தவனை எல்லாம் தலைவராக்கும் கேவம்.

எங்கோ ஓர் இடத்தில் கைதட்டும் சத்தம் கேட்கிறது.
இன்னொரு
 காளான்.

பி.கு:
 
அவர் நல்லவரா கெட்டவரா என்பது இங்கு பிரச்சனை இல்லை... 
நமக்காக எதையுமே செய்யாத ஒருத்தரை வெறும் காலண்டருக்கும் காமாச்சி விளக்குக்கும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் மலிவான  மனப்போக்கு நமக்கு வந்துவிட்டது என்பது தான்  வேதனை. 



பிரபு மித்ரன்

2 comments:

  1. மித்ரா, மொழி வளம் நல்லா இருக்கு, பிளாக் தளப்பக்கம் அட்டகாசமான வடிவாக்கம், தொடர்து எழுதவும். எழுதுவது நம் உரிமை என்றாலும் சர்ச்சைக்குள்ளாகும் எந்தவொரு விஷயத்தையும் நேரடியாகச் சொல்லாமல் அதை அப்படியே நைச்சியமாக நகைச்சுவையாக சொல்லப் பழகிக்கொண்டால் பின்னாளில் நூல் எழுதும்போது கைகொடுக்கும். மிகவும் சுலபமாக இருக்கும்.

    என் அனுபவத்தைப் பகிர்ந்தேன். வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோ...இனி எழுதும் பொழுது தாங்கள் சொன்னதை பின்பற்ற முயல்கிறேன்...:)

      Delete

Related Articles