பயமாக இருக்கிறது.
பயங்கர படப்படப்பாக உணர்கிறேன்.
அதீதமான பயத்தினால் எண்ணம் எதை எதையோ சொல்கிறது.
யோசித்து பார்த்தால் சின்ன விஷயம் தான்.
புத்திக்கு தெரிகிறது.
ஆனால்
மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது.
இரண்டு முறை வாந்தி கூட எடுத்துவிட்டேன். அந்த அளவுக்கு பயம் என்னை பிடித்து ஆட்டுகிறது.
எதை கண்டு இப்படி நடுங்குகிறேன்?
விடாமல் என்னை துரத்தும் தோல்வியை கண்டா?
என்னிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கும் மரியாதையை கண்டா?
எதை இழப்பதற்காக இப்படி பயந்து சாகிறேன்!! அப்படி இழப்பதற்கு தான் என்ன இருக்கிறது என்னிடம்?
எதற்காக மின்விசிரியை கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது? எதற்காக வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக ஒடுகிறேன்? மெத்தையில் முகத்தை புதைத்து எதை நினைத்து கத்துகிறேன்? வராத அழுகையை எதற்காக தேடுகிறேன்?
என்ன தான் வேண்டும் எனக்கு?
சொல்லுங்கள்
என்ன வேண்டும்?
வேறென்ன!!
நம்பிக்கை தான் வேண்டும்.
No comments:
Post a Comment