Sunday, 31 August 2014

ரோஜாக்களை மிதிக்காதே


நாட்கள் வேகமாக ஓடுகிறது

நாமும் வேகமாக ஓடுகிறோம்

நாம் ஓடுவதை நிறுத்தி விட்டால் நமக்கு பின்னால் வருபவர்கள் நம்மை பின்னுக்கு தள்ளி விடுவார்கள்
அதற்கு பயந்தே ஓடுவதை நிறுத்த முடிவதில்லை

இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் எப்பொழுது வாழ போகிறோம்??
ஒரு நாள் வரும்
நம் தலைமுடி நரைத்திருக்கும்
கை நடுங்கும்
கால் தடுமாறும்
சிரிக்கக்கூட தெம்பிருக்காது
“சாப்டியா?” என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்
அன்று நாம் கண்டிப்பாக ஓடுவதை நிறுத்தி விட்டு திரும்பி பார்ப்போம்

அப்பொழுது தெரியும் நாம் கடந்து வந்த பாதையில் எவ்வளவு ரோஜாக்கள் இருந்ததென.
அதில் எவ்வளவோ ரோஜாக்கள் உங்கள் கால் பட்டு நசுங்கியிருக்கும்
மிச்சம் காலத்தால் கருகியிருக்கும்
ஓடாதே என்று சொல்லவில்லை
அப்படி சொன்னால் நான் உங்களால் முட்டாளாக்கப்படுவேன்

50 வயதில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்க்கு 20 வயதில் இருந்து ஓடுகிறோம்.
30 வருட ஓட்டம்
அதற்கு பதில் இப்பொழுதே வாழலாமே!!!

ஓட்டமாவது மிச்சமாகும்
நமக்கு பிடித்தை செய்வது தான் வாழ்வது என்று சொல்லலாம்
ஆனால்
குடிப்பதும் பிடித்துத்தான் செய்கிறார்கள்
அதனால் அது வாழ்வதாகாது
பிறரை காயப்படுத்தாமல் நமக்கு பிடித்ததை செய்வது தான் உண்மையாக வாழ்வது
இதை நான் சொல்லவில்லை
திருவள்ளுவர் சொன்னது

நம் வாழ்வில் எவ்வளவோ நேரங்களில் நமக்கு பிடித்ததை செய்ய முடியாமல் போகிறது

சிக்னலில் நிற்கிறோம்.நம்மிடம் பிச்சை கேட்கும் 80 வயது முதியவரிடம் “இல்லை..இல்லை” என்று பழக்க தோசத்தில் தலையாட்டிவிட்டு அவர் போன பிறகு “காசு கொடுத்திருக்கலாமோ!” என்று உச்சு கொட்டுகிறோம் அல்லவா!!?? நீங்கள் கொடுக்கும் காசை வைத்து அவர் ஒன்றும் கோட்டை கட்டிவிட போவதில்லை... உங்களால் ஒரு வேளை சாப்பிட்டிருப்பார். இதுவும் உங்கள் ஓட்டத்தில் கருகிய ரோஜா தான்.

இப்படி தலைதெரிக்க ஓடுவதற்க்கு பதில் நின்று நிதானமாக வாழ்க்கையை ரசித்துக்கொண்டே நடக்கலாமே!!!
வாழ்த்துகள்
சுகமான பயனத்திற்கு



பிரபு மித்ரன்






.

Saturday, 23 August 2014

இந்தியாவின் இன்னொரு முகம்



இணையதளத்தைப் பொருத்தவரையில்

நாம் என்ன பேசுகிறோம் என்பதை விட எவ்வளவு பேர் அதைப் பற்றி பேசுகிறோம் என்பதே முக்கியம்


தன்னை அமைதியின் அடையாளமாக உலகுக்கு நெஞ்சை நிமிர்த்திக் காட்டிக்கொண்டு இருக்கும் இந்த இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றி இங்கு யாருக்காவது தெரியுமா?????

நேற்றுவரை நானும் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப் பட்டுக்கொண்டு தான் இருந்தேன்.

இப்பொழுது வெட்க்கப்படுகிறேன்

உலக நாடுகளைப் பற்றி வாய்கிழியப் பேசும் நம்மில் பல பேருக்கு இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களைப் பற்றித் தெரியுமா??

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியுமா??

மணிப்பூர்

இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களில் ஒன்று


300 அடிக்கு ஒரு ஆயுதம் ஏந்திய ராணுவம்

பொது இடத்தில் 2 பேருக்கு மேல் ஒன்றாக நடக்கக் கூடாது

யாரையும் வாரண்ட் இல்லாமல் ராணுவம் கைது செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்

ராணுவம் நினைத்தால் சந்தேகத்தின் பெயரிலேயே யாரை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லலாம்

கொல்கிறார்கள்

அப்பாவிப் பொது மக்களைக் கொல்கிறார்கள்

பெண்களை கற்ப்பழித்துக் கொல்கிறார்கள்

இவர்களை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னும் நிறுத்தி கேள்வி கேட்க முடியாது, காரணம் அங்கு இயற்றப்பட்டிருக்கும் சட்டம்

அதற்க்கு அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பது நம் இந்தியா தான்.

இது இன்று ஆரம்பித்தது அல்ல

1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State)ஆகும். 1946 அக்டோபர் 15 அன்று மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


1950 களில் சில இயக்கங்களின் மூலம் சுதந்திரச் சோஷியலிசக் குடியரசை உருவாக்கும் நோக்கில் தன்னுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களும் நடந்தன. இதுபோன்ற ‘கலகப் பகுதிகளில்’ போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்படும் ராணுவத்துக்கு கூடுதலாக சிறப்பு அதிகாரங்களைக் கொடுக்கும்

‘ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) [Armed Forces (Special Powers) Act (AFSPA)]சட்டம்’

இந்திய நாடாளுமன்றத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் 1958 செப்டம்பர் 11-ல் சட்டம் இயற்றியது.


இச்சட்டம் 1942ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் லின்லித்கோவால்(பிரபு) சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கிய காங்கிரசையும் அதில் கலந்து கொண்டவர்களையும் ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திலிருந்து பிறந்தது. இது மாதிரியான சட்டம் பிரிட்டனில் கூட இருந்ததில்லை.

இச்சட்டம் சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்டது.

1958இல் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம் நீதித் துறையாலும்கூடத் தலையிட முடியாத அதிகாரம் கொண்டது. இந்த அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையைப் பதற்றம் மிக்கதாக மாற்றிவிட்டது

மலோம் படுகொலை

2000, நவம்பர் 3


மணிப்பூரில் ஆயுதப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்

அதற்கு பதிலடியாக அடுத்த நாளே மலோம் என்ற இடத்தில் பேருந்துக்காக காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் 10 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயமுற்றனர். இறந்தவர்களில் 62 வயது மூதாட்டியும் 1988-ஆம் ஆண்டு தேசிய வீரக்குழந்தை விருது வாங்கிய சினம் சந்திரமணியும் அடங்குவார்கள்.

இதைக் கண்டு அன்று வெகுண்டெழுந்தவர் தான் இன்று மக்களால் “மணிப்பூரின் இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்படும்

இரோம் ஷர்மிளா


தான் பிறந்த மண்ணில் தன் உரிமைகளை பறிப்பது தன் நாடே என்றால் அது எவ்வளவு கொடுமையானது!!!

எழுந்தாள்

ஆயுதம் எடுத்தாள்

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க காந்தி கையில் எடுத்த ஆயுதம்.

அதே ஆயுதம் தான்

இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் வாங்க இரோம் எடுத்தார்

மணிப்பூர் மக்களுக்கு எதிரான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ளும் வரை அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார்

அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு பயந்து போன மணிப்பூர் அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது

கடந்த 14 ஆண்டுகளாக அவர் திட உணவே உண்ணவில்லை

ஒவ்வொரு வருடமும் விடுதலை ஆகி அதே தினத்தில் திரும்பவும் கைது ஆகிறார் உண்ணாவிரதம் இருப்பதற்க்காக

2004 ஜூலை 10

மணிப்பூரிலுள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த மனோராமா என்ற 32 வயது பெண்ணை வீதிக்கு இழுத்து வந்து கை கால்களைக் கட்டிப்போட்டு ராணுவத்தினர் தூக்கிச்சென்றனர்.

அந்தப் பெண்ணைக் கற்ப்பழித்து கத்தியால் சொல்லக்கூடாத இடத்தில் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் சாகடித்து நடு ரோட்டில் வீசிச்சென்றனர்.

இதையடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்

மக்கள் அமைப்பு, பெண்கள் அமைப்பு உட்பட 34 அமைப்புகள் நியாயம் கேட்டுப் போராடியது.

போராட்டத்தின் உச்சக்கட்டமாக 12 தாய்மார்கள் அசாம் ரைஃபிள்ஸ் தலைமையகம் முன்பு தங்கள் ஆடைகளைக் களைத்து நிர்வாணமாக நின்று ”இந்திய ராணுவமே: எங்களை பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை தாங்கி அவர்கள் நடத்திய போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது


உலக மனித உரிமை ஆனையத்தை திரும்பிப் பார்க்க வைத்தது

ஆனால் இதை அமைதியின் சின்னமான ‘நம்’ இந்தியா ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

எந்த ஊடகமும் இதை மக்களுக்கு எடுத்துச் செல்லவில்லை

வெட்கக்கேடு

இது வெறும் செய்தி அல்ல

60 வருடப் போராட்டம்

அரை நூற்றாண்டின் வலி

சுதந்திர இந்தியாவின் கருப்புப் பக்கங்கள்

அதைக் கிழித்தெரியப் போராடும் இரோம் ஷர்மிளா

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958னை மணிப்பூரில் இருந்து விலக்கிக் கொள்ள 14 வருடங்களாக சிறையில் உண்ணாமல் இருக்கிறார்

ஆனால் இதற்கெல்லாம் இது வரை இந்திய அரசிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை



எந்த ஒரு புரட்சியாளரும் பிறப்பதில்லை

இப்படிப்பட்ட சமுதாயம் தான் அவர்களை உருவாக்குகிறது

21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உருவாக்கியிருக்கும் புரட்சியாளர் இந்த இரோம் ஷர்மிளா


இந்த வலி புரிந்தவர்கள் பகிருங்கள்

புரியாதவர்கள் திரும்பவும் படியுங்கள்




நாம் என்ன பேசுகிறோம் என்பதை விட, எவ்வளவு பேர் அதைப் பற்றி பேசுகிறோம் என்பதே முக்கியம்

பேசுவோம் சத்தமாக
கேட்க வேண்டியவர்களுக்குக் கேட்கும்வரை



''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”- சே


இதற்கு சேகுவேரா வர தேவையில்லை

இதைக்கண்டு கொதித்தால் நீயும் புரட்ச்சியாளனே!!!

பிரபு மித்ரன்


Ref:
http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila
https://www.facebook.com/pages/Irom-Chanu-Sharmila/111014022283305#



Sunday, 10 August 2014

பெற்றோர்களும் பேய்களும்


பேய்களே!!!
இங்கு பேய்களுக்கு பயப்படும் குழந்தைகளை விட பெற்றோருக்கு பயப்படும் குழந்தைகள் தான் அதிகம்.
பிறகு நான் ஏன் உங்களை “பெற்றோர்களே” என்று அழைக்க வேண்டும்.
சரி
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்??
கல்வியா? இல்லை
பணமா? இல்லை
பாசமா? இல்லை
இவை எதுவுமே இந்த உலகில் வாழ உதவ போவதில்லை.
பிறகு என்ன??
தைரியம்
“நாங்கள் இருகிறோம் உனக்கு” என்ற தைரியம் தான் கொடுக்க வேண்டும்.
இன்றும் எத்தனை குழந்தைகள் பரிட்சையில் தோற்றதற்க்கு எல்லாம் உயிரை விடுகிறது.
இது பரிட்சையில் தோற்றதுக்கு இல்லை.
தன் அப்பா திட்டுவார்...தன் அம்மா திட்டுவாள்... என்ற பயத்தில் தான்.

படிக்காத பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கும் படித்த பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
படிக்காத பெற்றோரிடம் வளரும் குழந்தை தைரியமாக வளர்கிரது.அதன் வாழ்கையை அதுவே முடிவு செய்கிறது. தனக்கு பிடித்ததை செய்ய அதற்க்கு சுகந்திரம் கிடைக்கிறது.
ஆனால் படித்த பெற்றோரிடம் வளரும் குழந்தை பயத்துடனே வளர்கிரது.
அது என்ன படிக்க வேண்டும், என்ன வேலைக்கு போக வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன விளையாட்டு விளையாட வேண்டும், யாருடன் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்ற அனைத்தும் அதன் பெற்றோரே முடிவு செய்கிறார்கள்.

பேய்கள் மனிதர்களை பிடித்து ஆட்டுவதைப்போல் நீங்கள் உங்கள் குழந்தைகளை பிடித்து ஆட்டுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைகளின் வாழ்கையையும் சேர்த்து நீங்களே வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
இது எவ்வளவு பெரிய பாவம்.

இப்படி தன் வாழ்கையை வாழ முடியாமல் தவிப்பதற்க்கு பதில் அந்த குழந்தை இல்லாமலே இருந்திருக்கலாம்.
கூண்டில் வைத்து வளர்த்தாலும் அவர்கள் வளர வளர கூண்டின் அளவை பெரியது ஆக்குங்கள். இல்லை என்றால் ஒரு நாள் கூண்டை உடைத்துக்கொண்டு தப்பி தடம் மாறி போய்விடும்.
நீங்கள் இதற்க்கு எத்தனை நியாயம் சொன்னலும் அவர்கள் இழந்த வாழ்க்கை இழந்தது தான்.




நீங்கள் உங்கள் ஆசைகளையும், பயத்தையும் அவர்களின் மேல் திணிக்கிறீர்கள்.
இதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு தான்.
மன அழுத்தம்,
பயம்,
விரக்தி,
தன்னம்பிக்கையின்மை.
இவை எல்லாம் உயிர் கொல்லி நோய்களை விட ஆபத்தானது.
4-இல் மூன்று குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
இதில் உங்கள் குழந்தையும் இருக்கலாம். ஜாக்கிரதை

உங்கள் பிள்ளை எதிலும் தோற்க்கவே கூடாது என்று நினைப்பது தவறு.
அவர்களுக்கு தோற்க்க கற்றுக்கொடுங்கள்.
இல்லை என்றால் இந்த வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்.
அப்பொழுது இடிந்து விடுவார்கள்.

தீ-சுடும் என்று கூறி தொடவே விடவில்லை என்றால் அவர்களுக்கு சூடு என்றால் என்ன என்றே தெரியாது. என்றாவது ஒரு நாள் அதில் கண்டிப்பாக விழுந்து கருகிவிடுவார்கள்.

தப்பு செய்யும் பொழுது அடித்து தான் திருத்த வேண்டும் என்பதல்ல.
குழந்தைகளை அடிப்பதற்க்கு பழமொழி வேறு.
“அடியாத மாடு பணியாது”
உங்கள் குழந்தைகள் ஒன்னும் மாடு கிடையாது, அடித்துப் பணிய வைக்க!
பேசுங்கள். நிறைய பேசுங்கள்.
அவர்களின் உலகத்துக்குள் போய் பேசுங்கள்.
அவர்களை புரிந்துகொள்ள முயலுங்கள்

நம் பிள்ளைகள் வாழும் இடம் சொர்கமாக இருக்க வேண்டுமா, இல்லை நரகமாக இருக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான்.
சுகந்திரம் இல்லாமல் வாழ்வது நரகத்தை விட கொடுமையானது.

அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்
ஒன்று நம்பிக்கை
தன் பிள்ளை எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை.
இரண்டாவது மரியாதை
தன் பிள்ளைகளின் கருத்திற்க்கு கொடுக்கும் மரியாதை
அதை மட்டும் கொடுங்கள் போதும்.

எப்பொழுதும் பயப்படுத்தி வளர்க்காதீர்கள்
உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மேல் இருப்பது பயமா? பாசமா? என்று தெரிந்து கொள்ளுங்கள்
அது பயமாக இருந்தால் சீக்கிரம் போய்விடும் பிறகு நீங்கள் அவர்களுக்கு பயப்படும் நிலைமை கண்டிப்பாக வரும்.
குழந்தை பேய்க்கு பயப்படலாம்.
பெற்றோர்க்கு அல்ல.

எந்த பள்ளியும் குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம் சொல்லி தருவதில்லை.
அந்த பொறுப்பு பெற்றோருக்கே.
வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுங்கள்.


படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை..
அத தவிறவும் நெரயா இருக்கு சார்.
கத்துகுடுங்க..
நீங்க உங்க குழந்தைய மட்டும் உருவாக்கல
அடுத்த தலைமுறையை உருவாக்குறீங்க.

கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்க சார்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு பேயாக இருக்க வேண்டுமா..இல்லை பெற்றோராக இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பம்.



உங்கள் குழந்தையின் எதிர்காலம் சொர்கமாக இருக்க எனது வாழ்த்துகள்.

பிரபு மித்ரன்

Friday, 8 August 2014

எளிதில் பணம் சம்பாதிப்பது எப்படி?


வணக்கம்
இதை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால்
நிச்சயமாக சொல்கிறேன்
என்னை நம்புங்கள்
நீங்கள் பணப்பேயாக மாறி விட்டீர்கள்.
ஆம்
உங்களுக்கு பணத்தின் மீது இருந்த ஆசை,
பேராசையாக மாறி இப்பொழுது உங்களை பணப்பேயாக மாற்றி இருக்கிறது.
அதனால் தான் எதிலும் பணத்தை தேடுகிறீர்கள்
மன்னிக்கவும்
எதிலும் பணத்தை தேடுகிறோம்.
.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்(உண்மையாக)
ஐந்து வயதில் உங்களுக்கு என்ன என்ன ஆசைகள் இருந்திருக்கும்??
பத்து வயதில்??
பதினாறு வயதில்??
அதை எல்லாம் என்னால் சொல்லிவிட முடியாது... இவை எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த அழகான ஆசைகள்.
இந்த ஆசைகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

இப்பொழுது சொல்லுங்கள்
25 வயதில் உங்கள் ஆசை என்ன???
நம்மால் இதை உடனே சொல்ல முடியும்...
“வாழ்க்கையில் செட்டில் ஆவது”
அதாவது “பணம்” சம்பாதிப்பது

நம் ஆசைகள் எவ்வளவு சுருங்கி விட்டது பார்த்தீர்களா!!!
பணம் என்ற ஒரு வார்த்தையில் நம் அனைத்து ஆசைகளும் அடக்கி விடலாம்.
நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே உங்கள் ஆசைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.
அவற்றில் பணத்தின் பங்களிப்பை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

பணம் எதற்க்காக என்று யாரிடமாவது கேட்டால் உங்களை பைத்தியக்காரன் என்று நினைக்கக்கூடும்.
கேட்டு விடாதீர்கள்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

“சந்தோஷமாக இருக்க பணம் வேண்டும்” என்பது உங்கள் பதில் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

  •   பேருந்தில் போகிறீர்கள். உங்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் 2 வயது குழந்தை பின்னால் திரும்பி உங்களை பார்த்து சிரிக்கிரது.
  •  நீங்கள் மிகவும் விரும்பும் நபர் அவராகவே உங்களிடம் வந்து பேசுகிறார்.
  • ஒன்றாம் வகுப்பில் உங்களை முட்டி போட வைத்த கணக்கு டீச்சரை இப்பொழுது நேரில் பார்த்து உங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொள்கிறீர்கள்.
  • இந்த இயந்திர வாழ்க்கையில் பழைய நண்பர்களுடன் அமர்ந்து தேனீர் பருக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இவை உங்களை சந்தோஷப்படுத்தும் என்றால் இதில் எங்கு “பணம்” வந்தது??

நாம் பணத்தையும் சந்தோஷத்தையும் தொடர்பு படுத்திக்கொள்கிறோம்.

நமக்கும் சந்தோஷத்துக்கும் நடுவில் “பணம்” என்ற சுவரை நாமே எழுப்பிக்கொள்கிறோம். இந்த சுவரை தாண்டினால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது,
இதில் துர்தர்ஷ்டமானது என்னவென்றால் இந்த “பணச்சுவர்” நாம் தாண்ட தாண்ட தாண்டமுடியாதவாறு வளர்ந்து கொண்டே போகிறது.

இந்த பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்
நண்பனை எதிரியாக்கி விடும்
எதிரியை நண்பனாக்கி விடும்
சொந்தம் பந்தம் பாசம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் வாங்கியும் விடும், இல்லாமலும் செய்து விடும்.
இதை வைத்து யாரையும் அடக்கி விடலாம். நம்மை அடங்கவும் வைத்து விடலாம்.
ஆனால் கடைசி வரை சந்தோஷத்தை மட்டும் கொடுக்காது.
இது நம்மை நிம்மதியாக இருக்க விடாது.


நாம் யோசிக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பணத்தை வைத்தே யோசிக்க ஆரம்பித்து விட்டோம்
நாம் எப்பொழுது பேசினாலும் பணம் தான் நம் விரும்பும் தலைப்பாக மாறிவிட்டது.
நீ உனக்கு பிடிக்காத இடத்தில் சகித்துக் கொண்டு இருக்கிறாயா??
அது கண்டிப்பாக பணத்துக்காக தான் இருக்கும்..


பணத்திற்க்காக சோறு மறந்து சொந்தம் மறந்து பரதேசிகளாக அலைகிறோம்,
நம்மை நாகரீக பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாமோ!!!

உனது தேடல் பணமாக இருந்தால் நீ பிணம் ஆகும்வரை தேடிக்கொண்டுதான் இருப்பாய்!
தேடலை மாற்றிக்கொள்.



வாழ்வதற்க்கு தான் பணம் வேண்டுமே தவிர
பணத்திற்க்காக தான் இந்த வாழ்க்கை என்பது அல்ல.
பணத்தை தேடி தேடி இந்த வாழ்க்கையை தொலைத்து விடாதே.


இப்பொழுது சொல்லுங்கள்
இப்படி கடைசிவரை தேட போகிறீர்களா??

இல்லை வாழ்க்கையை வாழ போகிறீர்களா??!!

சின்ன வயதில் பம்பரம் விடும்பொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது எங்கே போனது?????????
தெரியவில்லையா?
தேடுங்கள்.
பதில் கிடைக்கும் வரை.



பிரபு மித்ரன்

Saturday, 2 August 2014

நானும் உனக்கு நண்பனே


நண்பர்கள் தான் உலகம் என்று இருப்பவன் உருப்பட மாட்டான்.
நண்பர்கள் இல்லாமல் இருப்பவனை இவ்வுலகம் உருப்பட விடாது.

இங்கே யாரும் நிரந்தர நண்பனும் இல்லை....நிரந்தர பகைவனும் இல்லை

நண்பனுக்காக உயிரை விட்டவர்களின் சரித்திரமும் இங்கு இருக்கிறது.
நண்பனால் உயிரை விட்டவர்களின் சரித்திரமும் இங்கு இருக்கிறது.

அதனால் நண்பனே வேண்டாம் என்று சொல்லி விட முடியாது.
நண்பன் இல்லாமல் உங்களை நீங்களே நினைத்துப்பாருங்கள்....
வெறுப்பு தானாக வரும்.
எந்த வித இரத்த சொந்தமும் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே சொந்தம் இந்த நட்பு தான்.

நீங்கள் வாழ்வில் அதிகமாக சிரித்தது உங்கள் நண்பர்களுடன் இருந்த நாட்களாக தான் இருக்கும்.
நீங்கள் கடைசியாக சிரித்ததும்(உண்மையாக) உங்கள் நண்பனிடமாக தான் இருக்கும்.

      முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது நட்பு
முகத்தை பார்க்கும் பொழுது சிரித்து பேசுவது மட்டும் நட்பாகாது, அது அகத்திலிருந்து வரவேண்டும் என்பதே இக்குறளின் பொருள்.



நட்பு என்பது உண்மையாக இருக்கும் பொழுது அது காதலை விட... இல்லை..
இல்லை..
அது கடவுளை விட புனிதமானதாகும்.

நான் நட்பை சுவாசிக்க சொல்லவில்லை.. நேசியுங்கள் போதும்.
நட்பு என்பது ஒரு புரிதல், அவ்வளவே.
அது மனிதனிடமும் வரலாம். நீங்கள் வளர்க்கும் நாய் குட்டியுடனும் வரலாம்.
எப்பொழுதும் உண்மையான நட்பை தேடாதீர்கள், அதில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
முடிந்தவரை நீங்கள் உண்மையான நண்பனாக இருங்கள்.
என்னை பொருத்த வரை இந்த புரிதல் யாரிடமும் வரலாம்.
உங்கள் அம்மாவிடம் வரலாம்
உங்கள் மகனிடமும் வரலாம்
நீங்கள் வளர்க்கும் மரத்திடமும் வரலாம்
ஏன்!
இதை படிக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட மறைமுகமாக ஒரு புரிதல் வரலாம்.
அவ்வகையில் நானும் உங்களுக்கு நண்பனே.

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

நட்புடன்

பிரபு மித்ரன்.

Related Articles