Monday, 7 November 2016

அழையா கோபம்

அலுவலக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அருகில் வந்த ஒரு பெண் அதன் கையில் இருந்த பேனாவால் எனது மேஜையை 'டொக்' 'டொக்' என தட்டி என்னை அழைத்தாள்.

ஹெட் செட்டை கலட்டி வைத்துவிட்டு எழுந்து அவர்  செவிலுடன் சேர்த்து 'பொளேர்' என்று ஒன்னு வைக்கலாம் போல இருந்தது.

"ஏன் வாயில கூப்பிட மாட்டாளா?!! இல்ல  கூப்பிட்டா தான் கேட்காதா?"

ஆமா எப்படி கேட்கும்?
அதான் ஹெட் செட் போட்டிருந்தேனே!!

அறிவை மீறி சில சமயம் கோபம் புடைத்துக்கொண்டு வந்து மூக்கு மேல் உட்கார்ந்து கொள்கிறது.
கீழே தட்டிவிட்டதும் "யாத்தே" என அலறியவாறு குப்புற விழுந்தது 'கோபம்'.

நான் மெதுவாக அந்த பெண்ணிடம் திரும்பி எப்பவும் போல உம்மனா மூஞ்சியுடன்

"சொல்லுமா" என்றேன்.

No comments:

Post a Comment

Related Articles