கடந்த 3 வருடங்களாக பெரும்பாலும் நான் தாடியுடன் தான் இருந்திருக்கேன்.
இப்பொழுது வந்து சிலர் கேள்வி கேட்டு கடுப்பேத்துகிறார்கள்
"என்ன திடீர்னு தாடி எல்லாம்.... 'ப்ரேமம்' பார்த்தா?"
"ஆமா 'இருமுகன்' 'கொடி' னு எல்லாம் இதுதானே ஃபேஷன்"
அப்படி கேட்பவர்களிடமெல்லாம்
"ஏன் இவ்ளோ நாள் கோமா-ல இருந்தியா?" என கேட்க தோன்றுகிறது.
இது ஒரு மன நோய்.
எவன் எதை செய்தாலும் அதை எங்காவது யாரையாவது பார்த்து தான் செய்திருப்பார்கள் என முடிவு செய்துகொள்வது.
இன்னும் சிலர்
"என்ன லவ் ஃபெய்லியரா?" என்கிறார்கள்.
அய்யா.. எனக்கு லவ் ஃபெய்லியரான பொழுது தாடியே வளர ஆரம்பித்திருக்கவில்லை.!😂
அது சரி காதலுக்கும் தாடிக்குமே என்ன சம்பந்தம்? இப்பொழுதெல்லாம் காதலில் தோற்றால் தான் க்ளீன் ஷேவ்வே செய்து கொள்கிறார்கள். அப்டேட் ஆகுங்க ப்பா.!!
தாடி வளர்க்க நான் காரணம் பல வைத்திருக்கிறேன்.
அது நேரத்துக்கு நேரம் மாறுபடும்.
சில சமயம் சோம்பேறித்தனம்.
சில சமயம் தாடிக்குள் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.
சில சமயம் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்படி நிறைய இருக்கிறது.
ஒரு முறை என் கல்லூரி ஹெச்.ஓ.டி என்னுடைய தாடி வைத்த நண்பனிடம்
"தாடி வைப்பது பெரிதில்லை... ஆனால் அது எதனுடைய அடையாளம் என தெரிந்து அதன் பிறகு வைத்துக்கொள். இப்பொழுது எடுத்துவிடு" என்றார்.
பின்னாளில் அவரிடம் அதை பற்றி கேட்ட பொழுது சொன்னார் "தாடி வைத்துக்கொள்வது புரட்சியாளர்களின் மரபு" என்று.
எனக்கு அது பிடித்திருந்தது.
எல்லா மனிதனும் வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் ஒரு முறையேனும் தாடிக்குள் சென்று வந்தவர்களாக தான் இருப்பார்கள்.
வாழ்வை வெறுப்பவன் மட்டும் அல்ல,
வாழ்வை ரசிப்பவனும் தாடி வளர்ப்பான்.
வரலாற்றை பாருங்கள். அதன் பக்கங்களை நிரப்பிய பல தாடிக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள்.
புரட்சியாளனில் இருந்து பைத்தியகாரன் வரை எல்லோரும் தாடிக்காரர்கள் தான்.
இயேசுவும் தாடிதான்.சாய்பாபாவும் தாடிதான்.
மோடியும் தாடி. மன்மோகன்சிங்கும் தாடி.
இவ்வளவு ஏன் எங்க பெரியார் கூட தாடி தான்டா.
இதில் சினிமா நடிகர்களுக்கு என்ன வேலை?
அது வளர்கிறது.
நாங்கள் வளர்க்கிறோம்.
அதில்.. அந்த மயிருக்கு பின்னால் 'காதல் கதைகள்' 'சினிமா நடிகர்கள்' என சில்லரை காரணங்களை தேடிக்கொண்டு அலையாதீர்.
நல்ல வேளை
'பின் லேடன்' நம்ம நாட்டில் வந்து பிறந்து தொலைக்கவில்லை
அப்படி பிறந்திருந்தால்
"என்னடா பின் லேடா!! எங்க ஊர் திருவள்ளுவர பார்த்து தாடி எல்லாம் வச்சுட்டே போல!!"
என்று சொல்லி வாயில் சுடப் பட்டிருப்பார்கள்.
ஃபன்னி ஃபெல்லோஸ்
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment