வணக்கம்
இதை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால்
நிச்சயமாக சொல்கிறேன்
என்னை நம்புங்கள்
நீங்கள் பணப்பேயாக மாறி விட்டீர்கள்.
ஆம்
உங்களுக்கு பணத்தின் மீது இருந்த ஆசை,
பேராசையாக மாறி இப்பொழுது உங்களை பணப்பேயாக மாற்றி இருக்கிறது.
அதனால் தான் எதிலும் பணத்தை தேடுகிறீர்கள்
மன்னிக்கவும்
எதிலும் பணத்தை தேடுகிறோம்.
.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்(உண்மையாக)
ஐந்து வயதில் உங்களுக்கு என்ன என்ன ஆசைகள் இருந்திருக்கும்??
பத்து வயதில்??
பதினாறு வயதில்??
அதை எல்லாம் என்னால் சொல்லிவிட முடியாது... இவை எல்லாம் உங்களுக்கு மட்டுமே
தெரிந்த அழகான ஆசைகள்.
இந்த ஆசைகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
இப்பொழுது சொல்லுங்கள்
25 வயதில் உங்கள் ஆசை என்ன???
நம்மால் இதை உடனே சொல்ல முடியும்...
“வாழ்க்கையில் செட்டில் ஆவது”
அதாவது “பணம்” சம்பாதிப்பது
நம் ஆசைகள் எவ்வளவு சுருங்கி விட்டது பார்த்தீர்களா!!!
பணம் என்ற ஒரு வார்த்தையில் நம் அனைத்து ஆசைகளும் அடக்கி விடலாம்.
நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே உங்கள் ஆசைகள் அனைத்தையும் பட்டியல்
இடுங்கள்.
அவற்றில் பணத்தின் பங்களிப்பை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
பணம் எதற்க்காக என்று யாரிடமாவது கேட்டால் உங்களை பைத்தியக்காரன் என்று
நினைக்கக்கூடும்.
கேட்டு விடாதீர்கள்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
“சந்தோஷமாக இருக்க பணம் வேண்டும்” என்பது உங்கள் பதில் என்றால் தொடர்ந்து
படியுங்கள்.
- பேருந்தில் போகிறீர்கள். உங்களுக்கு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் 2 வயது குழந்தை பின்னால் திரும்பி உங்களை பார்த்து சிரிக்கிரது.
- நீங்கள் மிகவும் விரும்பும் நபர் அவராகவே உங்களிடம் வந்து பேசுகிறார்.
- ஒன்றாம் வகுப்பில் உங்களை முட்டி போட வைத்த கணக்கு டீச்சரை இப்பொழுது நேரில் பார்த்து உங்களை அவரிடம் அறிமுகம் செய்து கொள்கிறீர்கள்.
- இந்த இயந்திர வாழ்க்கையில் பழைய நண்பர்களுடன் அமர்ந்து தேனீர் பருக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
இவை உங்களை சந்தோஷப்படுத்தும் என்றால் இதில் எங்கு “பணம்” வந்தது??
நாம் பணத்தையும் சந்தோஷத்தையும் தொடர்பு படுத்திக்கொள்கிறோம்.
நமக்கும் சந்தோஷத்துக்கும் நடுவில் “பணம்” என்ற சுவரை நாமே எழுப்பிக்கொள்கிறோம்.
இந்த சுவரை தாண்டினால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற எண்ணம் நமக்குள்
விதைக்கப்பட்டிருக்கிறது,
இதில் துர்தர்ஷ்டமானது என்னவென்றால் இந்த “பணச்சுவர்” நாம் தாண்ட தாண்ட தாண்டமுடியாதவாறு
வளர்ந்து கொண்டே போகிறது.
இந்த பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்
நண்பனை எதிரியாக்கி விடும்
எதிரியை நண்பனாக்கி விடும்
சொந்தம் பந்தம் பாசம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் வாங்கியும் விடும்,
இல்லாமலும் செய்து விடும்.
இதை வைத்து யாரையும் அடக்கி விடலாம். நம்மை அடங்கவும் வைத்து விடலாம்.
ஆனால் கடைசி வரை சந்தோஷத்தை மட்டும் கொடுக்காது.
இது நம்மை நிம்மதியாக இருக்க விடாது.
நாம் யோசிக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பணத்தை வைத்தே யோசிக்க ஆரம்பித்து
விட்டோம்
நாம் எப்பொழுது பேசினாலும் பணம் தான் நம் விரும்பும் தலைப்பாக மாறிவிட்டது.
நீ உனக்கு பிடிக்காத இடத்தில் சகித்துக் கொண்டு இருக்கிறாயா??
அது கண்டிப்பாக பணத்துக்காக தான் இருக்கும்..
பணத்திற்க்காக சோறு மறந்து சொந்தம் மறந்து பரதேசிகளாக அலைகிறோம்,
நம்மை நாகரீக பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாமோ!!!
உனது தேடல் பணமாக இருந்தால் நீ பிணம் ஆகும்வரை தேடிக்கொண்டுதான் இருப்பாய்!
தேடலை மாற்றிக்கொள்.
வாழ்வதற்க்கு தான் பணம் வேண்டுமே தவிர
பணத்திற்க்காக தான் இந்த வாழ்க்கை என்பது அல்ல.
பணத்தை தேடி தேடி இந்த வாழ்க்கையை தொலைத்து விடாதே.
இப்பொழுது சொல்லுங்கள்
இப்படி கடைசிவரை தேட போகிறீர்களா??
இல்லை வாழ்க்கையை வாழ போகிறீர்களா??!!
சின்ன வயதில் பம்பரம் விடும்பொழுது இருந்த சந்தோஷம் இப்பொழுது எங்கே
போனது?????????
தெரியவில்லையா?
தெரியவில்லையா?
தேடுங்கள்.
பதில் கிடைக்கும் வரை.
பிரபு மித்ரன்
வாழ்வதற்க்கு தான் பணம் வேண்டுமே தவிர
ReplyDeleteபணத்திற்க்காக தான் இந்த வாழ்க்கை என்பது அல்ல.
பணத்தை தேடி தேடி இந்த வாழ்க்கையை தொலைத்து விடாதே.