உலகில் இப்படி ஒரு அநியாயம் வேறு எந்த மண்ணிலாவது நடக்குமா?
இப்படி ஒரு அபத்தம்
இவ்வளவு கீழ்த்தரமான புத்தி
இத்தனை மோசமான கட்டமைப்பு
வேறு எங்காவது இருக்குமா?
எத்தனை வருட போராட்டம்? எத்தனை லட்ச கூட்டங்கள்? எத்தனை மேடைகள்? எவ்வளவு பலிகள்? எத்தனை அவமானம்? இன்னும் அது இவ்வளவு அசிங்கமாக நம் முன்னால் நடமாடுகிறதே! யார் பதில் சொல்லுவார்கள்?
கல்வி கிடைத்தால் மாறிவிடுவார்கள்.
பணம் வந்தால் மாறிவிடும்.
பதவி வந்தால் மாற்றிவிடலாம்.
அப்படி யோசித்து யோசித்து செய்து என்ன கிழித்து விட்டோம்? இப்படி இங்கு இந்த சமுதாயம் கந்தல் கந்தலாக கிழிந்து கிடக்கிறதே!!
படித்த கூமுட்டைகள் இங்கு பழையதை விட படு மோசமாக சமுகத்தை சீரழிக்கிறார்களே. யார் கேட்பது?
தொழில்நுட்பம் ஒவ்வொரு படிநிலைகளை கடக்கும் பொழுதும் அதை வைத்து எந்த அசிங்கத்தை அவிழ்த்து காட்டலாம் என அலையும் இந்த கிறுக்கு பசங்களை யார் கண்டிப்பது?
திரௌபதி - இந்த பெயரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன்.
மிகச் சரியான பெயர் வைத்திருக்கிறார்கள். மகாபாரதத்தில் எப்படி அந்த பெண்ணை போட்டு இரண்டு கூட்டமும் படாத பாடு படுத்தி கடைசியில் சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்வதாக இமயமலைக்கு கூட்டிக்கொண்டு சென்று சாகடித்ததோ அதே போல இந்த படத்தில் சமத்துவத்தை சாகடிக்க பார்க்கிறது.
கலையில் இது ஒரு அசிங்கமான உத்தி. பெண்ணை வைத்து கதையை பிண்ணி அதன் வழியாக மலத்தை படையலிடுவது. இது காப்பியங்களிலிருந்து இப்பொழுது பார்த்த இந்த கருமாந்திரம் வரை இதை செய்கிறவர்கள் எல்லோரும் கோணல் புத்தி படைத்தவர்கள்.
திரௌபதி - துருபத மன்னன், பாண்டவர்களை வைத்து தன்னை தோற்கடித்து அவமான படுத்திய துரோணரை பழிவாங்க யாகம் நடத்தி பெற்றெடுத்த மகள் தான் திரௌபதி. அதாவது பாசத்திற்காக அல்ல சொந்த கௌரவத்திற்காக பழிவாங்க பெத்த பெண்.
சுயம்வரம் என்ற விளையாட்டின் வழியாக அர்ஜுனனுக்கு கட்டி வைத்து பிறகு அந்த கிறுக்கு பசங்களால் ஐந்து பேருக்கும் மனைவியாக்கபட்ட கொடுமை அனுபவித்தவள். அது சிம்பிளான விஷயம். கண் கட்டப்பட்ட அம்மாவிடம் சென்று "அம்மா இங்க பார் அர்ஜுனன் இன்று என்ன பரிசு ஜெயித்து வந்திருக்கிறான் என" சொல்லியது முட்டாள் தனம் என்றால் அதை விட பெரிய முட்டாள் தனம் "எதுவா இருந்தாலும் ஐந்து பேரும் பகிர்ந்து வைத்துக்கொள்ளுங்கள்" என சொன்னவுடன் மூடிக்கொண்டு ஐந்து பேரும் அவளை வைத்துக்கொண்டது. வாயை என்ன வாடகைக்கா விட்டிருந்தார்கள்.சொல்ல வேண்டியது தானே "ஆத்தா. நான் கொண்டு வந்தது பருப்பி அல்ல.காக்கா கடி கடிக்க.. அது ஒரு உயிர் உள்ள பெண்" என்று. அது அவளுக்கு நடந்த அடுத்த அநீதி.
ஐந்து பேருக்கும் ஆளுக்கு ஒரு பையன் பெற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு சூதாடி அத்தனையும் இழந்து கடைசியில் கட்டிய மனைவியையும் சூதாடி தோற்று அவளை மானபங்க படுத்த அனுமதித்து தலையை குனிந்து நின்றது அடுத்த அநீதி. எல்லோரும் சேலையை இழுத்த துச்சாதனையே திட்டுவார்கள். கட்டிய பொண்டாட்டியை சூதாடியவர்களை விட்டுவிடுவார்கள். போர் நடத்தி தன் ஐந்து மகன்களையும் சாக கொடுத்து கடைசி வரை கஷ்டத்தை அனுபவித்து சொர்க்கத்துக்கு செல்ல இமையமலையை தன் ஐந்து கணவர்களுடன் ஏறும் பொழுது அவள் சொர்க்கம் அடையாமல் வழியிலேயே முதலாக செத்துவிடுகிறாள். அதற்கு காரணமாக தர்மன் சொல்கிறான் "அவள் என்ன நம் ஐவருக்கும் மனைவியாக இருந்தாலும் அவள் அர்ஜுனனுக்கு மட்டும் அதிகமாக கரிசனை காட்டினாள். அதனால் அவளுக்கு சொர்க்கம் செல்ல தகுதி இல்லை" என்று.
உற்று கவனித்தால் இந்த கதையில் அவளை எங்குமே ஒரு மனுஷி போலவே நடத்தப் படவில்லை. அனைவரும் அவளை ஏதோ பொருள் போல நடத்தி கடைசியில் உடைத்திருக்கிறார்கள். ஆனால் மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெண்ணை மானபங்க படுத்தியதால் பெரும் போரெடுத்து வென்றனர் என்று வீரமான வரலாறு போல தெரியும். இதில் "துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவியது" என்ற ஒற்றை வரியில் அவளுக்கு நடந்த மற்ற அத்தனை அநீதியையும் மறைத்து அவளையே நம்ப வைத்து கொன்று விடுகிறார்கள். அது தான் அந்த கதையின் selling point. நம்பி வந்தவளை ஐந்து பேர் பங்கு போட்டது. பொருள் போல அவளை சூதாடி தோற்றது. போர் என்ற பெயரில் சொந்த குழந்தைகளை பலிகொடுத்து அவளை மீளா துயரில் தள்ளியது. கடைசியில் சொர்க்கம் கிடைக்காமல் தன்னந்தனியக உயிரை விட்டது போன்ற அத்தனை அக்கிரமங்களையும் 'சேலையை உருவினான்' என்ற ஒற்றை வரிக்கு பின்னால் மறைத்து விடுகிறார்கள்.
இந்த முன்னோட்டத்திலும் அதே உத்தி. இவர்களின் அசிங்கம் பிடித்த துருப்பிடித்த மனநோயை பெண்களின் முகத்தை காட்டி அவர்களை அழவைத்து விற்க பார்க்கிறார்கள்.
//"வீடியோ எல்லாம் வேண்டாம் ண்ணே
எங்க அப்பா அதெல்லாம் பாத்தா செத்தே போயிடுவாங்க ண்ணே"
"நீ ஓடி வரும் போதே அங்க உங்க அப்பன் உசுரே விட்டிருப்பான்"//
இந்த இடத்தில் "அம்மா ராசாத்தி பாத்தியா. நீ உன் அப்பன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கே. ஆனா உன்னை ஏமாத்தி கூட்டிட்டு போற பசங்களும் அவங்க ஆளுகளும் என்ன செய்யுறாங்க பாத்தியா" என்று பெண்ணை திரையில் காட்டி திரைக்கு வெளியே உட்கார்ந்து படம் பார்க்கும் வயசு பெண்களை பயப்படுத்துகிறார்கள்.
//"படிக்காதது உன் தப்பு.
உன் மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ பண்றது தப்பில்லே?"
"தப்பே இல்லே. அடங்குனா அடங்க கூடாதுனு எங்க அண்ணே சொல்லிருக்காப்பலே! பெரிய ஊட்டு பொண்ண கல்யாண பண்ணுனாதான் லைஃப் கெத்தா இருக்கும்னுசொல்லிருக்காப்ல"//
இது அந்த வீட்டு பசங்களுக்கு "பாத்தியாடா. எப்படி பேசுராணுங்க பாரு. உன் தங்கச்சியையும் அக்காவையும் இவனுங்க மாதிரி ஆளுக கிட்ட இருந்து எப்படி காப்பாத்துறது" என்று சொந்த வீட்டு பெண்ணை காட்டி சிந்தனையை மழுங்கடிக்க.
//"இந்த மாதிரி கீழ்தரமானவங்களை இப்படி தான் கொடூரமா கொல்லனும். நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க. உங்களுக்காக நான் அப்பியர் ஆகுறேன்"//
இது சாதிய ஆணவத்தில் கொலை செய்தால் கூட அது தப்பில்லை என்றும் நம்மை காப்பாற்ற நிறைய பேர் வருவார்கள் என்றும் நம்பிக்கை தருவதற்கு.
//"விவசாய தற்கொலை. கடன் தற்கொலைன்னு செத்தவன் பாதி பேரு பொண்ண பெத்தவன் தாண்டா"
"நீங்க விழுப்புரத்தில சிலம்ப வாத்தியார் தானே?" //
இது general audience க்கு. "ஓஹோ!!? இப்படியும் கூட தற்கொலை நடந்துட்டு மாத்தி செய்தி வருதோ. ஆமா ஆமா இருக்கும்" என்ற எண்ணத்தை கொடுக்க.
//"மண்டை காஞ்சு போயிருக்கேன். ஒவ்வொருத்தனையும் துண்டு துண்டா வெட்டி போட்டுடுவேன்"
"வெட்டு. அப்படி நீ எது பண்ணுனாலும் எங்களுக்கு சாதகமா தான் மாறும். அதையும் பண்ணு"//
இது அரைகுறை ஜாதி அரசியல் பேசும் சின்ன பசங்களுக்கு. வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக கேன தனமாக பேசியவர்கள் எல்லாம் இப்படியான ஆட்கள் தான்.
//"எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டுமே முக்கியம். அதுல யாரு கைய வச்சாலும் கைய வெட்டுவோம்."//
இது தான் உச்சம். அதுவும் பெண்ணை வைத்தே இதை பேச வைத்தது. பெண்ணும் மண்ணும் எப்படிடா ஒன்னு ஆகும்?? கிறுக்கு பசங்களா. மண்ணை காசு வாங்கிட்டு விக்கலாம். உங்க வீட்டு பொண்ணையும் காசு வாங்கிட்டு வித்துடுவீங்களா? முட்டா பசங்களா. இதெல்லாம் ஒரு டயலாக்னு கொண்டாட்டம் வேற!! த்து.
ஹீரோ கழுத்தில் வெறும் கயிறும் வில்லனாக வருபவர்களின் கழுத்தில் கனமான தங்க சங்கிலிகளையும் காட்டுவதால் ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் நன்றாக வாழ்பவர்கள் போன்ற ஒரு பொய்யான பார்வையை கொடுக்க பார்க்கிறான் படம் எடுத்தவன்.
வெக்கமே இல்லாமல் அப்பாவி பெண்களின் முதுகுக்கு பின்னால் உட்காந்து கொண்டு மீசையை நெய்யிட்டு முறுக்கிக்கொள்கிறது சாதிய நாய்.
ஹீரோவுக்கு பெயரை பிரபாகரன் என்றும் வில்லனாக வருபவனுக்கு பெயர் கருணா என்பதும் சும்மா கிளுகிளுப்புக்காக. குறியீடு மயிரெல்லாம் இல்லை.
இப்படிபட்டவனால் எத்தனை விழுந்து புரண்டாலும் 'பரியேறும் பெருமாள்' போன்ற அன்பை பிறதானப்படுத்தி கண்ணியமான படைப்பை கொடுக்க முடியாது.
கலையை எவன் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். எடுப்பவன் சொல்படி அது ஆடும்.
இந்த படத்தில் "புரட்சி" என்ற ஒரு சொல் வருகிறது. அதை கண்ட நாயெல்லாம் கையில் எடுக்க முடியாது. அது மனிதர்களை நேசித்து சமத்துவத்தை கொண்டாடி அதிகாரத்தை எதிர்த்து போராடும் கூட்டத்துக்கு சொந்தமானது. உங்களால் கலவரம் மட்டுமே செய்ய முடியும்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment