Tuesday, 28 February 2017

குந்திதேவியின் வாக்குமூலம்

குந்திதேவியின் வாக்குமூலம்

பெயர்: குந்திதேவி(மகாபாரத கர்ணனின் தாய்)
குற்றம்:  தனக்கு பிறந்த குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் அனுப்பியது.

வாக்குமூலம்:
ஒரு நாள் குந்திபோஜ மகாராஜா தன் மகள் குந்திதேவியை அழைத்து துர்வாசர் என்ற அப்போதைய மிக பிரபலமான முனிவருக்கு பணிவிடை செய்யுமாறு சொல்லிவிடுகிறார்.
குந்திதேவியும் முனிவருக்கு கண்ணும் கருத்துமாக அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து கொடுக்கிறாள். ஒரு நாள் வேள்வி முடிந்த பிறகு குந்திதேவியை அழைத்து அவளின் பணிவிடைகளில் தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதற்கு எதாவது வரம்(!) தருவதாகவும் சொல்லி மந்திரத்தை சொன்னாராம்.
குந்திதேவியோ விளையாட்டுப் பெண் அல்லவா!!
அவள் உடனே அந்த மந்திரத்தை சோதித்து பார்க்க விளையாட்டாக சூரியனை வேண்டி மந்திரத்தை உச்சரிக்கவும் உடனே சூரிய பகவான் அவள் முன்னாள் தோன்றி அவரின் அருள் ஒளி(!) அவள் மீது பாய உடனே கவச குண்டலத்துடன் கதிரவன் போன்ற சிசுவை பெற்றுவிட்டாள்.
உடனே “அய்யகோ.. நான் கன்னி அல்லவா?” என்று கதறியிருக்கிறாள் குந்திதேவி,
அதற்கு சூரிய பகவான் “கவலைப்படாதே குந்தி. நீ உச்சரித்த மந்திரத்தின் சக்தியால் எனது பரிசுத்த ஆவி உனக்கு அளித்த மகன் அவன். அதனால் உனது கன்னித்தன்மை பழுதுபடாது” என கூறி ஆதவன் மறைந்திருக்கிறான்.
அதன் பிறகு என்ன செய்வது என தெரியாமல் குழந்தையை ஆற்றில் விட்டிருக்கிறாள் வெகுளிப்பெண் குந்திதேவி.
இவ்வாரு வாக்குமூலம் செல்கிறது.

இதில் உங்களில் யாருக்காவது கணிக்க முடிகிறதா? இந்த கதையில் ‘கல்ப்ரிட்’ யாராக இருப்பான் என்று.

எனக்கு என்னமோ ‘அவன்’ மேல தான் டவுட்டா இருக்கு. 🤔

No comments:

Post a Comment

Related Articles