இன்று காலை 5 மணி
அரசு பேருந்தில் போய்க் கொண்டு இருந்தேன்.
பெரும்பாலும் அந்த நேரத்தில் ஏதாவது கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மீக பாடல்களோ அல்லது 80 களில் வந்த இளையராஜா பாடல்களையோ தான் பேருந்துகளில் ஒலிக்க விட்டிருப்பார்கள்.
ஆனால் இதில் எதோ வித்தியாசமாக நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
தமிழனின் வாத்தியம்.
எனக்கு திடீரென ஒரு எண்ணம்.
நாம் இந்த நாதஸ்வர இசையை ரசித்தால் என்ன?
நல்ல இசை நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லுமாமே!!!
இன்னைக்கு எப்படியாவது கடவுளை பார்த்து விட வேண்டும் என நினைத்து அதுவரை நான் நோண்டிக்கொண்டிருந்த செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு கண்களை மூடி அமர்ந்தேன்.
ஆஹா..
நாதஸ்வர இசை அப்படியே என்னை ஆட்கொண்டது.
அந்த இசையை பின் தொடர்ந்து என் மனம் போய் கொண்டு இருக்கையில்.. என்ன ஆச்சரியம்...!! கண் முன் மெதுவடை ஒன்று தோன்றியது.
நன்றாக உற்று கவனித்தேன்..
ஆம்
மெதுவடையே தான்.
அதற்கு பிறகு அது மறைந்து ஊத்தாப்பம் வந்தது.
அப்புறம் மசால் தோசை.
மினி இட்லி.
ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது.
நான் பதறிப்போய்க் கண்களை திறந்து கொண்டேன்.
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை.!!?
மறுபடியும் கண்களை மூடி நாதஸ்வரத்தை பின் தொடர்ந்தேன்.
திரும்பவும் மெதுவடை..மசாலா தோசை..ஊத்தாப்பம்.. இந்த முறை அனைத்தும் வாசனையுடன் வேறு வந்தது.
கண்களை திறந்துவிட்டேன்.
அடடா!!!
நாதஸ்வர இசை என்னை கடவுளிடம் அழைத்துச் செல்வதற்கு பதில் கல்யாண மண்டபத்திற்கு கூட்டி சென்றுவிட்டது.
நாம அதை எல்லாம் அங்க தான கேட்றுக்கோம்.
கச்சேரி முடிந்ததும் பந்தி போட்டு விடுவார்கள். அதனால் நாதஸ்வரத்திற்கும் மெதுவடைக்கும் என் மூளையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
ஒரு பிரபலமான உளவியல் சோதனை இருக்கிறது.
ஒரு நாயை சிறு அறையில் கட்டி வைத்து விடுவார்கள். அதன் வாயில் உமிழ் நீர் சுரக்கும் அளவு எடுக்க ஒரு குழாய் பொறுத்தப்பட்டிருக்கும். தினமும் ஒவ்வொரு வேளையும் ஒரு மணி அடிக்கப்படும். உடனே வெளியே இருந்து ஒரு ஆள் தட்டு நிறைய மாமிசத்துடன் உள்ளே வந்து நாய்க்கு சாப்பிட கொடுப்பான். நாய்க்கு மாமிசத்தை பார்த்ததும் உமிழ் நீர் சுரக்கும். அளவு எடுத்துக்கொள்வார்கள்.
ஒரு வாரம் இது தொடர்ந்து நடக்கும்.
மணி அடிக்கும்.
மாமிசம் வரும்.
நாய்க்கு உமிழ் நீர் சுரக்கும்.
ஒரு வாரம் கழித்து ஒரு சோதனை செய்தார்கள்.
மணி அடிக்கப்பட்டது ஆனால் மாமிசம் வர வில்லை.
இருந்தாலும் ஒவ்வொரு முறை மணி அடிக்கும் பொழுதும் அந்த நாய்க்கு உமிழ் நீர் சுரந்தது.
மாமிசம் - உமிழ் நீர் என்பது மாறி
மணி - உமிழ் நீர் என்றானது.
இதை கண்டிஷனல் ரெஸ்பான்ஸ்(conditional response) என்பார்கள்.
அதே போல இங்கு நாதஸ்வரம்-கல்யாண சாப்பாடு.
சேம் கண்டிஷனல் ரெஸ்பான்ஸ்.
சோ... இசை நம்மை அதற்கு முன் அதை எங்கு கேட்டோமோ அங்கு தான் அழைத்துச் செல்லும்.
கடவுள பாக்கனுமாம்லே.!
No comments:
Post a Comment